வியாழன், 4 ஜூன், 2009

அவளும் அவனும்


அவள் = தென்றல் தழுவிடும் நினைவிலே -காதல்
தேவன் தந்திட்ட அணைப்பிலே
என்னை மறந்தேன் உலகிலே -நான்
என்னத்தை சொல்வது முடிவிலே

அவன்=சித்திர பூவிழி அழகிலே -செம்
மாதுளை இதழ்தருகுழைவிலே
நித்திரை ஏதடிஇரவிலே -என்
நெஞ்சுக்குள் வந்ததேன் உறவிலே

அவள்=பூத்த மலரினை கிள்ளியே -இந்த
பூவை உடலினை அள்ளியே
பார்த்து ரசித்தவன் அல்லவோ -இனி
பட்ட துயர் தனை சொல்லவோ

=கண்ணிற்கு ஒளியு மாகினாய் -எனக்கு
கற்பனை நிலவாய் தோன்றினாய்
பொன்னில் சிறந்தவள் என்பதோ -தினம்
போற்றி வலமிசை செய்வதோ

இருவரும்=தமிழும் இனிமையும் போலவே -நல்ல
தாயின் கருணை என்னவே
ஒன்று சேர்ந்திங்கு வாழுவோம் -என்றும்
ஒற்றுமை கீதம் பாடுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக