
அவள் = தென்றல் தழுவிடும் நினைவிலே -காதல்
தேவன் தந்திட்ட அணைப்பிலே
என்னை மறந்தேன் உலகிலே -நான்
என்னத்தை சொல்வது முடிவிலே
அவன்=சித்திர பூவிழி அழகிலே -செம்
மாதுளை இதழ்தருகுழைவிலே
நித்திரை ஏதடிஇரவிலே -என்
நெஞ்சுக்குள் வந்ததேன் உறவிலே
அவள்=பூத்த மலரினை கிள்ளியே -இந்த
பூவை உடலினை அள்ளியே
பார்த்து ரசித்தவன் அல்லவோ -இனி
பட்ட துயர் தனை சொல்லவோ
=கண்ணிற்கு ஒளியு மாகினாய் -எனக்கு
கற்பனை நிலவாய் தோன்றினாய்
பொன்னில் சிறந்தவள் என்பதோ -தினம்
போற்றி வலமிசை செய்வதோ
இருவரும்=தமிழும் இனிமையும் போலவே -நல்ல
தாயின் கருணை என்னவே
ஒன்று சேர்ந்திங்கு வாழுவோம் -என்றும்
ஒற்றுமை கீதம் பாடுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக