வியாழன், 4 ஜூன், 2009

திண்மை


உண்மை ஒருநாள் வெளியாகும் -புரட்டு
உருவம் அதற்கு பலியாகும்
நன்மை என்றும் நிலையாகும் -அது
நாயகன் வகுத்திட்ட வழியாகும்

இருந்தது இங்கே இருப்பதில்லை -வாழ்வில்
இறந்தது மீண்டும் பிழைப்பதில்லை
கறந்தது மடியில் புகுவதில்லை -சென்ற
காலங்கள் திரும்பவும் வருவதில்லை

அன்புடை உள்ளம் ஆலயமாகும் -படைத்த
ஆண்டவன் விரும்பிடும் கேடயமாகும்
இன்ப துன்பங்கள் எங்கு மிருக்கும் -இதை
எண்ணி நடந்திட்டால் நன்றாயிருக்கும்

நீதியை மறைத்திட முடியாது -நேர்மையை
மறந்தால் வருவதோ தீது
ஓதிய வழி சென்றால் நன்மை -உணர்ந்து
தெளிந்திட்டால் உண்டாகும் திண்மை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக