வெள்ளி, 12 ஜூன், 2009

பாரதம் -தேச பக்தி பாடல்




கோடி துன்பம் சூழினும்
குவலயம் வந்து எதிர்கினும்
வாடி மடிய நேரினும் -என்றும்
வஞ்ச கதேதிர் கொடோம்

எங்கள் வாழ்வு தாழ்வெல்லாம்
எங்கள் சொந்த மண்ணிலே
என்று சொல்லும் வீரர் கீதம்
எதிரொலிக்குது நம் விண்ணிலே

இமயம் குமரி எல்லையாய்
இணைந்து வாழ்ந்த மக்கள் நாம்
அபயம் என்று போவதோ -கொடும்
அநீதிக்கு தலை சாய்வதோ

தாய் தந்த பாலிலே
தமிழர் வீரம் கலந்தது
பாயும் குணத்தை தந்தது -இன்றே
பகை அழிக்க வந்தது

கொடியர் பலரை கொன்ருமே
குருதி வெள்ளம் கட்டுவோம்
மடையை திறந்து நம் வயலுக்கு
மனித இரத்தம் பாய்ச்சுவோம்

மானம் உண்டு வீரம் உண்டு
மக்கள் துணை யாவுமுண்டு
தானம் தருகமுந்துவோம் -எதிரி
தலையை கொய்தே திரும்புவோம்

வெற்றி கண்டு மிதந்திடோம் -சிறு
வீழ்ச்சி வரின் அயர்ந்திடோம்
பற்றும் கொள்கை மறந்திடோம் -எங்கள்
பாரதத்தை கை விடோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக