வியாழன், 11 ஜூன், 2009

பொற்காலம்




பொங்குக பொங்கல் புதுமையில் இன்று -தினம்
பூக்கட்டும் இன்பம் புவியினில் நன்று
மங்கல கோலம் மாவிலை தோரணம் -இந்த
மண்ணகம் எங்கணும் மகிழ்ச்சியே காரணம்

காய் கதிர் செல்வனின் கருணையில் நனைந்து -நம்
கழனியில் உழைத்திடும் கடவுளை நினைந்து
ஆவினை சேவையில் அன்புடன் இணைந்து -ஒன்றாய்
ஆடுவோம் இங்கு நாம் அல்லலை மறந்து

உழைத்தவன் வாழ்ந்தால் உயர்ந்திடும் நாடு -என்றும்
உண்மை எங்கோ உணர்ந்ததை தேடு
இளைத்தவன் இல்லை இனிவரும் ஞாலம் -இங்கு
என்றுமே பெறுவோம் இனிய பொற்காலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக