
நிலவில் தங்கி குடிஇருக்க -இன்று
நீயும் நானும் போவாமா
பழக வரும் பூங்கொடியே -உடனே
பதில் எனக்கு சொல்லடியோ
அமைதி கடல் ஓரத்திலே -மன
ஆசை பொங்கும் நேரத்திலே
உறவு பூண்டு நிற்போமா -வான
உலகில் நாமும் பறப்போமா
கால்களில் மண் அளக்க -உன்
கண்களில் பொன் கலக்க
நாளிறேண்டில் கீதம் பாடி -அங்கே
நாம் இருப்போம் ஒன்று கூடி
காற்று மனிதர் யாருமில்லை -நன்கு
கலந்து பேச தடையுமில்லை
நேற்று இன்று என்பதில்லை -காதல்
நெஞ்சம் மட்டும் மாறவில்லை
பூவுலகில் துன்பம் உண்டு
புத்துலகில் இன்பம் கண்டு
கூவும் குயில் ஆவோமா -ஒரு
குறையுமின்றி வாழ்வோமா
நிலவிற்கு மூவர் வந்தார் -மக்கள்
நினைவிலும் அவரே நின்றார்
உலகமும் இதையே சொல்லும் -உண்மை
வீரமே என்றும் வெல்லும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக