சனி, 13 ஜூன், 2009

சரணம்



காவிரிக் கரை யோரம் -நான்
கண்ணயர்ந்து படுத்திருக்க
பூவிரி எழில் முகத்தாள் -பொற்
குடம் கொண்டு வந்தாள்

வா வெனச் சொன்னது கண்கள் -சுற்றி
வளைத்திடத் துடித்தன கைகள்
தா வெனக் கெஞ்சின அதரம் -அந்த
தையலோ இன்பத்தின் சிகரம்

காவியக் கண்ணகியோ -இல்லை
கற்பனை பூங்குயிலோ
ஓவியப் பெண்ணழகோ -அவள்
ஊர்வசி தன் மகளோ

தங்கம் அங்கமாய் அமைந்ததுவோ -முகம்
தாமரை மலரில் செய்ததுவோ
பொங்கும் இளமை வழிந்ததுவோ -அது
பூவையை தேடி வந்ததுவோ

அன்னம் நடையில் தோற்றிடுமோ -இடை
ஆண்களை வென்றிடும் பெரும் படையோ
கன்னம் இரண்டும் குங்குமமோ -அவள்
காலடியில் புவி சரண் புகுமோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக