
காலடி யோசை கேட்குதடி -அவனை
கண்டிட ஆசை பிறக்குதடி
நாலடி நடக்க நினைக்குதடி -இடையே
நாணம் வந்தேனோ தடுக்குதடி
பருவக் காலப் பொழுதினிலே -வாழ்வில்
பக்குவ மறியா நிலைகளிலே
ஒருவனை தேடி அலையுதடி -அந்த
உண்மை யறிந்திட துடிக்குதடி
இரவு பகலிந்த எண்ணமடி -தினம்
ஏங்கி தவிப்பது கன்னமடி
உறவு ஒன்றே வேண்டுமடி -என்
உள்ளம் அறிந்தாலே தீருமடி
இன்ப நினைவு வளருதடி -அவனை
எண்ணிய உள்ளமும் மலருதடி
அன்பினை தந்திட ஆசையடி -ஆனால்
அச்சமே கடைசியில் மிச்சமடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக