ஞாயிறு, 7 ஜூன், 2009

உறவு


காலடி யோசை கேட்குதடி -அவனை
கண்டிட ஆசை பிறக்குதடி
நாலடி நடக்க நினைக்குதடி -இடையே
நாணம் வந்தேனோ தடுக்குதடி

பருவக் காலப் பொழுதினிலே -வாழ்வில்
பக்குவ மறியா நிலைகளிலே
ஒருவனை தேடி அலையுதடி -அந்த
உண்மை யறிந்திட துடிக்குதடி

இரவு பகலிந்த எண்ணமடி -தினம்
ஏங்கி தவிப்பது கன்னமடி
உறவு ஒன்றே வேண்டுமடி -என்
உள்ளம் அறிந்தாலே தீருமடி

இன்ப நினைவு வளருதடி -அவனை
எண்ணிய உள்ளமும் மலருதடி
அன்பினை தந்திட ஆசையடி -ஆனால்
அச்சமே கடைசியில் மிச்சமடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக