
சித்திரை மாதம் பிறந்ததுவே -மனம்
சிந்தனை வானில் பறந்ததுவே
முத்தமிழ் ஆட்சி நிலைத்திடவே -நெஞ்சில்
மூண்டிட்ட இருளினி நீங்கிடவே
பஞ்சம் பசிபிணி மாறிடவும் -நாட்டில்
பல்வகை தொழில்கள் உயர்ந்திடவும்
அஞ்சும் மொழித் துயர் தீர்ந்திடவும் -எங்கும்
ஆனந்த வெள்ளம் பாய்ந்திடவும்
அமைதி என்றும் நிலவிடவும் -தூய
ஆசைகள் இன்றே நடைபெறவும்
சுமைகள் நீங்கி சுகம் பெறவும் -மக்கள்
சொர்கத்தை மண்ணிலே கண்டிடவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக