வந்தாள் அருகில்வளைத்தேன் முடிவில்தந்தாள் அமுதம்தலையணை முழுதும் ஈரம் .
காற்றில் ஏறி வந்தாள்காதில் எதோ சொன்னாள்நேற்றா இன்றா என்றேன்நிஜமா என்றால் .....கனவு
நீரும் நிலமாகலாம்நிலமோ நீராகலாம்செடி கொடியாகலாம்என் வேலை நிலையாகுமோ
இறைவன் கருணையால் நூறு பாடல்கள் எழுதினேன் .
அவருக்கு மனமார்ந்த நன்றிகள் .எனை ஈன்ற பெற்றோர்க்கும்
எழுதத் தூண்டிய பெரு மக்களுக்கும் எனது நல்லாசான்களுக்கும்
என்றும் நன்றி கூறுவேன் .எனது பணி மேலும் தொடரும்.
விமர்சனங்களை வரவேற்கிறேன் .வணக்கம் -வாயுபுத்திரன் .
நிலவு சூடானது -உள்ளநிஜமே பொய்யானதுபழமும் கசப்பானது -வரும்பாதை முள்ளானதுமுள்ளும் மலராகுமோ -கொண்டமோகம் துணையாகுமோதுள்ளும் மனமாகுமோ -அந்ததோகை இணையாகுமோநினைவு நனவாகுமோ -அவள்நேசம் வசமாகுமோஉணர்வு உயர்வாகுமோ -இனிஉலகம் நமதாகுமோகாலம் கனிவாகலாம்நம் காதல் நலமாகலாம்கோலம் இனிதாகலாம்இந்த கோதை மனையாகலாம்

கட்டவிழும் மொட்டவிழும்கட்டை விரல் கோலமிடும்போட்டு வளர் நெற்றியிலேபூங்குழல்கள் மெல்ல ஆடும்கண் இரண்டும் கவி பாடும்காலிரண்டும் நடை போடும்எண்ணமெல்லாம் சுழன்றாடும்ஏந்திழையாள் மனம் வாடும்தென்றல் அங்கு மெல்ல வரும்சேதி ஒன்றை கொண்டு வரும்ஒன்றி விட்ட காதல் நெஞ்சம்வுவகைஇல் துள்ளி எழும்தொட்ட இடம் சொர்க்கமாகும்தோகை முகம் வெட்கமாகும்பட்டு மலர் மேனிஇலோபாச சுமை ஏறிவிடும்
காவிரிக் கரை யோரம் -நான்கண்ணயர்ந்து படுத்திருக்கபூவிரி எழில் முகத்தாள் -பொற்குடம் கொண்டு வந்தாள்வா வெனச் சொன்னது கண்கள் -சுற்றிவளைத்திடத் துடித்தன கைகள்தா வெனக் கெஞ்சின அதரம் -அந்ததையலோ இன்பத்தின் சிகரம்காவியக் கண்ணகியோ -இல்லைகற்பனை பூங்குயிலோஓவியப் பெண்ணழகோ -அவள்ஊர்வசி தன் மகளோதங்கம் அங்கமாய் அமைந்ததுவோ -முகம்தாமரை மலரில் செய்ததுவோபொங்கும் இளமை வழிந்ததுவோ -அதுபூவையை தேடி வந்ததுவோஅன்னம் நடையில் தோற்றிடுமோ -இடைஆண்களை வென்றிடும் பெரும் படையோகன்னம் இரண்டும் குங்குமமோ -அவள்காலடியில் புவி சரண் புகுமோ
இறைவா இங்கே வர வேண்டும் -வரம்இன்றே நீயும் தரவேண்டும் -உன்னைமறவா திருக்கும் மனம் வேண்டும் -உலகில்மகிழ்வாய் வாழும் திறம் வேண்டும்அழியா புகழைப் பெறல் வேண்டும் -வீணேஆத்திரம் கொள்வதை விடல் வேண்டும்சலியா துழைக்கும் உரம் வேண்டும் -மனசஞ்சலம் தவிர்க்கும் திடம் வேண்டும்நல்லதை செய்திட பொருள் வேண்டும் -தினம்நன்மை நாடிடும் உளம் வேண்டும்உன்னை தேடிடும் அருள் வேண்டும் -என்றும்உண்மையே பேசிடும் நிலை வேண்டும்துன்பங் கண்டேதுவளாமல் -நான்துடிப்பாய் செயல் பல செய்திடவும்அன்பால் உலகை வாழ்விக்கும் -நல்லஆக்கமும் வுக்கமும் இனி வேண்டும்போதுமென்ற நிறை வேண்டும் -பிறர்புகழ்ச்சியில் மயங்கா நிலை வேண்டும்சூதும் வாதும் விடவேண்டும் -நான்சுகமாய் வாழ வரம் வேண்டும்
கோடி துன்பம் சூழினும்குவலயம் வந்து எதிர்கினும்வாடி மடிய நேரினும் -என்றும்வஞ்ச கதேதிர் கொடோம்எங்கள் வாழ்வு தாழ்வெல்லாம்எங்கள் சொந்த மண்ணிலேஎன்று சொல்லும் வீரர் கீதம்எதிரொலிக்குது நம் விண்ணிலேஇமயம் குமரி எல்லையாய்இணைந்து வாழ்ந்த மக்கள் நாம்அபயம் என்று போவதோ -கொடும்அநீதிக்கு தலை சாய்வதோதாய் தந்த பாலிலேதமிழர் வீரம் கலந்ததுபாயும் குணத்தை தந்தது -இன்றேபகை அழிக்க வந்ததுகொடியர் பலரை கொன்ருமேகுருதி வெள்ளம் கட்டுவோம்மடையை திறந்து நம் வயலுக்குமனித இரத்தம் பாய்ச்சுவோம்மானம் உண்டு வீரம் உண்டுமக்கள் துணை யாவுமுண்டுதானம் தருகமுந்துவோம் -எதிரிதலையை கொய்தே திரும்புவோம்வெற்றி கண்டு மிதந்திடோம் -சிறுவீழ்ச்சி வரின் அயர்ந்திடோம்பற்றும் கொள்கை மறந்திடோம் -எங்கள்பாரதத்தை கை விடோம்
உத்தமன் நேரு போனதெங்கே -மக்கள்உள்ளமும் கலங்கி வாடுதின்கேசொத்து சுகமும் துறந்தானே-தன்துடிக்கும் இளமை மறந்தானேநித்தம் ஓயாமல் உழைத்ததினால் -அறன்நினையாத வழிதனில் மறைந்தானேபம்பரம் போல சுழன்று வந்து -இந்தபாரத நாட்டினை காத்திருந்தான்வம்பர்கள் இல்ல நாடு தேடி -ஏனோவான வீதியில் பறந்து விட்டான்மழலை மொழியில் மகிழ்ந்திருந்தான் -நம்மனதை யள்ளத் தெரிந்திருந்தான்குழலை வெல்லும் மொழி படைத்தான் -ஏன்கொடுமை சாவினில் விழுந்து விட்டான்செல்வ சிறுவனாய் உருவெடுத்து -அவன்சிறப்பாய் நாளும் வளர்ந்திருந்தான்வெள்ளை பள்ளியில் சேர்ந்திருந்தான் -அவர்வியக்கும் வண்ணம் சிறந்து நின்றான்அண்ணல் வழியை புரிந்து கொண்டான்அன்பு செய்வதே தொண்டு என்றான்கண்ணுக்கு இமைபோல காத்து நின்றான்கலங்க விட்டேன் பிரிந்து சென்றான்வெள்ளை உள்ளம் கொண்டிருந்து -ஏழைவேதனை போக்கத் துடி துடித்தான்கொல்ல வருகின்ற மனிதரிடம் -அவன்கொள்ளை அன்பையே காட்டி வந்தான்உலகம் வியந்திடும் மேருவானான் -நம்உள்ளம் வாழ்த்திடும் நேருவானான்நிலவும் அமைதிக்கு துணையாகி -என்றும்நீங்காத நினைவாக ஆகிவிட்டான்சுமையை தாங்கிடும் தாங்கியானான் -மக்கள்சோகத்தை போக்கிடும் சாந்தியானான்உவமை இல்லாத பொருளுமானான்-நாம்உள்ளவரை வாழும் அருளுமானான்
சின்னக் குழந்தை வண்ண உடைகளில்சீறிப்பாயும் கண்ணி வெடிகளில்எண்ணை முழுக்கில் இளமை மனதில்இன்று வந்தது இனிய தீபாவளிமங்கல நாளில் மண்ணகமெங்கும்மங்களம் பொங்கி மகிழ்வு தங்குகதிங்களும் வானும் சேர்ந்தது போலஎங்கள் தமிழர் என்றுமே வாழ்க
அண்ணன் பெற்ற பிள்ளை -அவள்அழகிற் கீடிணை இல்லைகண்கள் செய்திட்ட பேறு -மக்கள்கண்டதும் தீஞ்சுவை நூறுவள்ளல் மனதில் கருவாய் -தினம்வளர்ந்தது தாய்மைஇன் உருவாய்அள்ளித் தருவது வருவாய் -எங்கும்ஆனந்தம் பொங்குது நிறைவாய்கொட்டகை வழிந்திடும் கூட்டம் -குறைசொல்ல வந்தவர் ஓட்டம்தொட்டது துலங்கிடும் காட்சி -திரை உலகில்தொடர்வது அண்ணனின் ஆட்சிபாலைவன மணலிலும் நடந்து -வைத்தபரீட்சை யாவையும் கடந்துநாளைய சரித்திரம் கொண்டாள் -தமிழ் -நாட்டையே வெற்றி கண்டாள்
நிலவில் தங்கி குடிஇருக்க -இன்றுநீயும் நானும் போவாமாபழக வரும் பூங்கொடியே -உடனேபதில் எனக்கு சொல்லடியோஅமைதி கடல் ஓரத்திலே -மனஆசை பொங்கும் நேரத்திலேஉறவு பூண்டு நிற்போமா -வானஉலகில் நாமும் பறப்போமாகால்களில் மண் அளக்க -உன்கண்களில் பொன் கலக்கநாளிறேண்டில் கீதம் பாடி -அங்கேநாம் இருப்போம் ஒன்று கூடிகாற்று மனிதர் யாருமில்லை -நன்குகலந்து பேச தடையுமில்லைநேற்று இன்று என்பதில்லை -காதல்நெஞ்சம் மட்டும் மாறவில்லைபூவுலகில் துன்பம் உண்டுபுத்துலகில் இன்பம் கண்டுகூவும் குயில் ஆவோமா -ஒருகுறையுமின்றி வாழ்வோமாநிலவிற்கு மூவர் வந்தார் -மக்கள்நினைவிலும் அவரே நின்றார்உலகமும் இதையே சொல்லும் -உண்மைவீரமே என்றும் வெல்லும்
திரை எனும் உலகம் வாழ்க -இனிதீமைகள் எங்கும் மாய்கதுரை எனும் ராசன் பெற்ற -நம்தூய்மை நல்லேடு வளர்கவள்ளல் தம் கைவாளாகி -அவர்வழிஇனில் சென்று நாளும்அல்லலை தீர்க்கத் தன்னை -என்றும்அர்ப்பணம் செய்த தாயேசமநிலை செய்தி தந்து -வந்தசமரிலே பலரை வென்றுஅமைதியேநெஞ்சம் கொண்டாய் -தமிழர்அகத்திலே மஞ்சம் கண்டாய்
பிறந்தவர் மண்ணில் இறப்பதுண்டு -சிலர்பெருமையால் என்றும் இருப்பதுண்டுஎரிப்பினும் புதைப்பினும் அழிவதில்லை -நல்லஇதயங்கள் அவரினை மறப்பதில்லைஎத்தனை துறைதனை தொட்டாலும் -இருப்பதுஅவர் பெயர் முன்னாலேபுத்தரை போன்றிட்ட உருவமையா-இங்குபொறுமையில் காந்தியை போன்றதையாஆயிரம் ஆண்டிர்கோர் தலைவன் -மக்கள்அவலத்தை தீர்ப்பதில் பேரிறைவன்ஈண்டு அணைந்தது மணிவிளக்கு -நம்இன்னலுக் கில்லையே விதிவிலக்குஅண்ணன் வழிஇனில் நடந்திடுவோம் -எங்கும்அன்பெனும் குணத்தை வளர்த்திடுவோம்கண்ணை போலவே நம் தாயகத்தை -இனிகடின உழைப்பினில் உயர்த்திடுவோம்
பொங்குக பொங்கல் புதுமையில் இன்று -தினம்பூக்கட்டும் இன்பம் புவியினில் நன்றுமங்கல கோலம் மாவிலை தோரணம் -இந்தமண்ணகம் எங்கணும் மகிழ்ச்சியே காரணம்காய் கதிர் செல்வனின் கருணையில் நனைந்து -நம்கழனியில் உழைத்திடும் கடவுளை நினைந்துஆவினை சேவையில் அன்புடன் இணைந்து -ஒன்றாய்ஆடுவோம் இங்கு நாம் அல்லலை மறந்துஉழைத்தவன் வாழ்ந்தால் உயர்ந்திடும் நாடு -என்றும்உண்மை எங்கோ உணர்ந்ததை தேடுஇளைத்தவன் இல்லை இனிவரும் ஞாலம் -இங்குஎன்றுமே பெறுவோம் இனிய பொற்காலம்
பொங்கல் பிறந்தது பூமிஇலே -உளம்பொங்கி ஆடிட வா குயிலேதிங்களை உழவரை கும்பிடுவோம் -தமிழ்திக்கெட்டும் ஆண்டிட நம்பிடுவோம்புதிய பானை அரிசி வைத்து -சுவைபொங்கி வழிந்திடும் அமுதமைத்துஇதய நன்றி செலுத்திடுவோம் -அந்தஇன்பத்தில் வாழ்வினை கழித்திடுவோம்
நெஞ்சில் வந்தது நினைவு -தினம்நினைக்க வருவது கனவுகொஞ்சுதல் குயி லின் ஓசை -உன்னைகுலவ நெடு நாள் ஆசைபஞ்சு மெத்தை காலடியோ -அதில்பட்டு சட்டை மேனியடிகொஞ்சிடும் விரல் வெள்ளரியோ -தமிழ்குலவிடும் இதழ் கோவையடிமுல்லை சரம் பல் வரிசை -நல்லமுழுமை நிலா முகமழகு -இல்லை என்பது இடையழகு -காதல்ஏக்கம் தருவது நடையழகுகண்களில் கயல் இரண்டு -அழகியகன்னம் தீஞ்சுவை கற்கண்டுபெண்களில் நீதான் தலைவியடி -உலகில்பிழைகள் இல்லா செல்வியடி
தீப ஒளி தன்னை ஏற்றுங்கடி -தமிழ்தெய்வ குறளினை போற்றுங்கடிமோக இருளினை மாற்றுங்கடி -நம்முன்னோர் பெருமைகள் சாற்றுங்கடிபுதிய ஆடைகள் அணியுங்கடி -மனம்பொங்கி கவிதை படியுங்கடிஇதய உறவினை கூறுங்கடி -அந்தஇன்பத்தில் ஒன்றென சேருன்கடி
ஒளிதரும் விளக்கினை ஏற்றி -நல்லஉயர்வெனும் ஆடைகள் சாற்றிபயமெனும் இருளினை நீக்கு -உனதுபாதையை நேர்மையாய்ஆக்குவெடித்திடும் வெடிகளின் ஓசை -இதைவிரும்பி ரசிப்பதோ ஆசைபடித்திடும் நீதிகள் எங்கே -சற்றுபதியட்டும் மனதினில் இங்கேஆள்வது மக்களின் அரசு -அதுஅணிபெற அமைதியேஇருசுவாழ்வினில் துயரம் இயற்கை -வீணேவாடி வதங்குதல் செயற்கைஇருப்பதை இல்லார்க்கு கொடுப்பாய் -அவர்இதயத்தில் தெய்வமாய் வசிப்பாய்புறப்படு செயலினை காட்ட -இன்றேபுரட்சி தேர் பூமியில் ஓட்டசோம்பி இருந்திடல் தீது -பிறர்சூதுகள் செய்திடும் போதுஓங்கி உயரவே நிற்பாய் -என்றும்உண்மை வழியொன்றே கற்பாய்