வியாழன், 31 அக்டோபர், 2013

விருந்து 203.

கன்ன    கரு குயில் -நம்
 காதல்  இள மயில்
 பின்னி  எடுத்தாளடி -அதனை
 பேச  மறுததா ளடி

 மாலை  நேரத்தில் -நல்ல
 மல்லிகை  வாசத்தில்
 ஆளைக்  கவர்ந்தாளடி -கிளியே
 அசந்து  போனேனடி

 கொட்டும்  பனியினில் -கடும்
 கூதல்   காற்றினில்
 கட்டிப்  பிடிப்பாளோடி -கிளியே
 கண்டு  மகிழ்வேனோடி

 வாலைப்  பருவத்தில் -அவளுக்கு
 வந்த  மயக்கத்தில்
 சேலை  கலைந்ததென்ன -கிளியே
 செம்மை  படர்ந்ததென்ன

 ஆற்று  மணலினில் -இரவில்
 ஆடிக்   களைத்தவள்
 தோற்றுப்  போவாளோடி -கிளியே
 தேற்றும்   நிலைபாரடி

 விருந்து  கொடுத்தவள் -இன்னும்
 விடியத்   திளைத்தவள்
 திரும்பி  வருவாளோடி -கிளியே
 தேடிநீ    அறிவாயடி 

முன்னேற்றம் -202.

வண்ண    நிலவினில் -நல
 வானத்  தழகுகள்
 என்னை   அழைக்குதடி -மனம்
 எங்கோ  இழுக்குதடி

 நீலப்   பட்டாடையில் -அந்த
 நிலவுப்   பெண்ணவள்
 கோல   அழகியடி -அவளைக்
 கொஞ்சத்  துடிக்குதடி

 சலசலவெனத்  சப்தமிட்டு -மழைச்
 சாரலும்  பெய்யுதடி
 சஞ்சலம்   மீறுதடி  -ஒரு
 சங்கமம்  தேடுதடி

 கூவும்      குயில் ஓசை -கேட்க
 கொள்ளை  இனிமையடி
 கொஞ்சும்  தமிழோசை -நம்
 நெஞ்சை   அள்ளுதடி

 வாழப்   பிறந்தவர் -மண்ணில்
 வாழ  வகையின்றி
 வாயில்லா  ஊமையானார் -நாளும்
 வறுமையில்   வாடலானார்

 வறுமைகள்  தீர்ந்திட -இங்கு
 வளம் பெற்று   வாழ்ந்திட
 வழிவகையினைக்  காண்போம் -அவர்
 வாழ்ந்திட  வைத்திடுவோம் 

புதன், 30 அக்டோபர், 2013

குழந்தை -201.

கன்னத்தில்   குழி -நமைக்
 காணும்    இருவிழி
 எண்ணிடப்  புதுமையடி -அட
 என்ன   மகிழ்ச்சியடி

 முத்துச   சிரிப்பினில் -அதில்
 மூளும்    எழிலினில்
 பித்துப்   பிடித்ததுவே -புது
 பிரேமையும்  கூடியதே

 கத்தும்   குரலோசை -நம்
 காதில்  குழலோசை
 கானம்  ஆனதுவே -வரும்
 காலம்  மறந்ததுவே

 தத்தும்  தளர்நடை -இங்கு
 தாவி   விழுவதும்
 நித்தம்  புதுமையன்றோ -என்றும்
 நினைக்க   இனிமையன்றோ

 பட்டுத்  தளிர்மேனி -அதனை
 தொட்டு   இழுக்கையில்
 பரவசம்   எறிடுமே -நெஞ்சில்
 பாசம்   ஊறிடுமே

 இந்த   நினைவுகள் -இனிய
 இளமைக்  கனவுகள்
 எங்கள்   குழந்தையம்மா -அது
 இறைவன்   கருணையம்மா 

செவ்வாய், 29 அக்டோபர், 2013

வாயுபுத்திரர் -200 .

வாயுவின்  புத்திரர்  -நல 
 வளர்களைத்  தூயவர் 
 பாயும்   புலியவர் -தம் 
 பக்தரைக்  காப்பவர் 
 
 இராமனின்  சேவகர் -அன்று 
 இலன்கைக்குச்  சென்றவர் 
 சீதைக்கும்  தூதுவர்  -உலகில் 
 சிரஞ்சீவி   ஆனவர் 
 
 அனுமனெனும்   பேரிலே -இந்த 
 அவனியில்     ஆள்பவர் 
 அனுதினம்  தொழுபவர் -தம் 
 அவதியைத்  தீர்ப்பவர் 
 
 இராவணன்  செருக்கினை -நேரில் 
 எதிர்த்துமே  வென்றவர் 
 இலங்கையை  தீயினால் -முற்றும் 
 எரித்துமே  மகிழ்ந்தவர் 
 
 ராமநாமம்  சொல்லுமிடத்திலே -அங்கு 
 அனுமன்வருகை  ஆவது நிச்சயம் 
 வீரமளிப்பவர்  வெற்றிதருபவர் -காணில் 
 யாருண்டுலகில்  அனுமனைப் போலே 

நல்லது 199.

இரவினில்   ஆடி
 இன்பத்தைத்   தேடி
 உறவினை   இழந்தனரே -சிலர்
 ஊமைகள்     ஆனாரே

 வரவுகள்  குறைந்து
 செலவுகள்  கூடிட
 வறுமையில்  ஆழ்ந்தனரே -ஏனோ
 வகைஇன்றிப்  போயினரே

 ஏய்த்துப்   பிழைத்து
 எல்லோரையும்   வதைத்து
 நாளைக்  கழித்தனரே -முடிவில்
 நாசம்  அடைந்தனரே

 கொள்ளைகள்   செய்து -பல
 குடும்பத்தைக்  கெடுத்து
 வல்லமை  காட்டினாரே -மண்ணில்
 வாழ்வின்றிப்  போயினரே

 இறைவன்  ஒருவன்  -உலகில்
 இருப்பதை  மறந்து
 எல்லாமே  தானென்றார் -எங்கோ
 பறந்து   விட்டார்

 ஆட்டம்  போட்டவர் -இங்கே
 சேட்டைகள்  செய்தவர்
 அழிந்து   போவாரே -இதனை
 அறிந்திடல்  நன்மையன்றோ 

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

தில்லை நடராஜர் 197.

                            பல்லவி :

      நடனம்   ஆடுகிறார் -வெகு
 நாகரிகமாய்   நயமுடன்  தில்லையில்  (நடனம்)

                        அநுபல்லவி

 உடனுடன்  தாளமொடு   இசைமுழங்க -இந்த
 உலகினர்   கண்டதும்  மதிமயங்க  (நடனம்)

                       சரணங்கள்

 1.காலினை   மாற்றியே  ஆடுகிறார் - அந்தக்
 கனக சபையில்   கச்சிதமாகவே   நித்தியமூர்த்தி
 வேலினை  வென்றிடும்   விழியழகு -பிறர்
 வேதனை  தீர்ப்பதில்  தனியழகு     (நடனம்  )

 2.ஆலின்   அடியிலே  அமர்ந்தவராம் -தன
 அடியவர்   மனக்குறை  தீர்ப்பவராம்
 நூலின்   நுண்பொருள்  உரைப்பவராம் -இங்கு
 நுண்ணிய  கலைகளின்  வடிவினராய்  (நடனம்)

 3.நந்தியின்   மத்தள  ஓசையிலே -இந்த
 நானிலம்   மயங்குமே  ஆசையிலே
 எண்டிசை  எங்கிலும்  இசைமயமே -நம்
 எல்லோர்  மனதிலும்  இறைமயமே  (நடனம்)

கதிகாமன் -196.

                              பல்லவி

வடிவேலன்  வருவாரோடி -சகியே
 வள்ளலை  நினைத்து  வணங்கினால்   (வடிவேலன்)

                       அநுபல்லவி :

 படியேறி   வருவோர்க்கு  விருந்தானவன் -பிறர்
 பாவங்கள்   தீர்க்கின்ற  மருந்தானவன்  (வடிவேலன் }

                        சரணங்கள்

  1. கனிக்காக   சினம்கொண்டு  மலையேறினார் -தமிழ்க்
 கனியாக  உருமாறி  நமை  யாள்கிறார்
 இனிதாக   குருநாதன்  புகழ்  பாடலாம் -நமது
 இதயத்தில்   குடியேற  அவர்   நாடலாம்   (வடிவேலன்)

 2.அசுரர் படை  அழிக்கவந்த  அமரேசனே -அவர்
 அடியாரைக்   காத்து நிற்கும்  குமரேசனே
 சிவனாரை  மகிழ்விக்கும்  சிவநேசனே -நீதி
 சிறப்பாக  காக்கின்ற  விசுவாசனே

 3.மலைதொறும்  குடியேறும்  மணவாளனே -நம்
 மனவாசை    தீர்க்கின்ற   மதிரூபனே
 கலையாவும்   குடிகொண்ட  கந்தவேலனே -என்றும்
 கருணைக்குப்  பெயர்பெற்ற  கதிர்காமனே (வடிவேலன் )

வெள்ளி, 25 அக்டோபர், 2013

யார் யார் ....?-195

வானதது  சேலையில்
 வர்ண  நிறங்களை 
 வாரி   இறைத்தது  யார்

 மோனத்து  சூழலில்
 மூளும்   கடலினில் 
 முத்துக்கள்  வளர்த்தவர்  யார்

 வெட்ட    வெளியினில்  
 வட்ட  நிலவிற்கு 
 வெளிச்சம்  தந்தது  யார்

 தொட்டுத்  தொடர்ந்திடும் 
 தோகை    மலருக்கு 
 சொகுசினைத்  தந்தது  யார்

 மேனியைத்  தழுவிடும் 
 மெல்லிய  காற்றுக்கும் 
 கானம்  உரைத்தவர்  யார்

 ஏறியே   பாய்ந்திடும் 
 எண்ணிலா  அலைகளை 
 இயக்கி  வைப்பவர் யார்

 கத்தும்   கடலிற்கு 
 காலம்  முழுதிற்கும் 
 கர்ஜிக்க  வைத்தது  யார்

 கொட்டும்  மழையோடு 
 குளிரையும்  சேர்த்து 
 கொடுத்து  விடுபவர்  யார்

 மீனிற்கு  நீச்சலும் 
 மிருகத்தின்  பாய்ச்சலும் 
 மேவிடச்   செய்ததுயார்

 உலகிற்கு  நீதியும் 
 உண்மைக்குள்  ஜோதியும் 
 உலவிட  விட்டவர் யார்

 கல்லுக்குள்  தேரையும் 
 கரும்புக்குள்  இனிப்பையும் 
 கருத்தாய்  அமைத்தவர்  யார்

 புல்லுக்குள்  நீரையும் 
 பொருளின்  மேலாசையும் 
 பொங்கிட  வைத்தவர்  யார்

திங்களை  நிலவை 
 தீதில்லா  விண்மீன்களை 
 மகிழ்வுடன்  தந்தது  யார்

 மாந்தர்கள்  அனைவரும் 
 மண்ணிலே  சுகம் பெற 
 மனதில்  நினைப்பவர் யார்

 வேண்டுதல்  கேட்டதும் 
 விரைந்தங்கே  வந்துமே 
 வினைகளைத்  தீர்ப்பது யார்

 இரவிற்குப்  பகலையும் 
 பகலுக்குள்  இரவையும் 
 இணைத்து  வைப்பது  யார்

 நீருக்குள்  நிலத்தையும் 
 நிலத்தினுள்  நீரையும் 
 நேர்மைப் படுத்துவது யார்

 உடலுக்குள்  உயிரையும் 
 உயிராகும்  கருவையும் 
 ஒற்றுமைப்  படுத்துவது யார்

 வேருக்குள்  நீரையும் 
 வெம்மணல்  வெப்பமும் 
 வியந்திட  வைப்பது யார்

 நன்மைக்கு  தீமையும் 
 நலத்தையும்  கேட்டையும் 
 நயம்பட  வைப்பது  யார்

 இத்தனை மாற்றங்கள் 
 இங்கே  செய்வது 
 இறைவனின்  திருவருளே

 மறையவனின்  திருப்பாதம் 
 மனதினில்  நினைந்திடில் 
 மங்கலம்  பொங்கிடுமே

 இங்கிவன்  பெருமையை 
 இப்படி  இயம்பிட 
 எளியேனைப்  படைத்தாரோ  

வியாழன், 24 அக்டோபர், 2013

கிளியே 194.

விண்ணில்  நிலவொளி -அந்த
மேக   மழைத் துளி
 கண்ணைப்  பறித்ததுவே -அது
 மண்ணை  நனைத்ததுவே

 பொன்னைத்  தேடிடும்  -இந்தப்
 பொல்லாங்கு  மாந்தர்கள்
 தன்னை  மறந்தனரே -நல்ல
 தன்மை  துறந்தனரே

 கோடி   குவித்தவர்  -தினம்
 கொள்ளை  யடித்தவர்
 பேடிகள்  ஆயினரே -கிளியே
 ஒடியே    போயினரே

 பொய்யை  தினம் பேசி -இங்கு
 புரட்டுக்  காரர்கள்
 ஐயம்  அடைந்தனரே -கிளியே
 அன்பைத்  துறந்தனரே

 கண்ணால்  கதை பேசி -வரும்
 காசைப்  பறித்தவர்
 தன்னால்  அழிந்தனரே -கிளியே
 தர்மம்  மறந்தனரே

 வாரிக்  குவித்ததை -பிறர்க்கு
 வழங்க  மறுத்தவர்
 வாழ்வை   இழந்தனரே -கிளியே
 வற்றி  மடிந்தனரே

 ஊருக்கு  உழைத்தவர் -என்றும்
 உண்மை  பேசுவோர்
 பேருக்குள்  பேறு  பெற்றார் -கிளிடே
 பெருமை  யடைந்தனரே

 கல்வியைக்  காசிற்கு -நன்கு
கச்சிதமாய்  விற்போர்
 புல்லினும்  கீழாவார் -கிளியே
 புதைக்கப்  படுவாரடி

 நன்றி  மறந்தவர் -மனதில்
 நஞ்சினைக்  கொண்டவர்
 சென்று  ஒளிவாரடி -கிளியே
 செத்துத்  தொலைவாரடி

 பெண்ணால்  பிறந்தவர் -பின்பு
 பெண்ணைப் பழித்தவர்
 கண்ணை  இழந்தனரே -கிளியே
 கதியின்றிப்  போவாரடி 

புதன், 23 அக்டோபர், 2013

நீலக் கருவிழி -193.

நீலக்  கருவிழி
 நெஞ்சின்  அலைகளில்
 நீந்தத் திரியுதடி

 கோலக்  குறுநகை
 கொஞ்சும்  இதழ்களில்
 குலவி  மகிழுதடி

 வட்ட  நிலவொளி
 சுட்டு  எரிக்கையில்
 வாலிபம்  மீறுதடி

 கட்டில்  அறைகளில்
 களவுத்  தொழில்களோ
 கவனத்தை  இழுக்குதடி

 விட்டில்  பூச்சிகள்
 வெளிச்சம்  தாங்கியே
 விடியக்   காவலடி

 தொட்டில்  குழந்தைகள்
 தூங்கிட  வழியின்றி
 சோம்பிக்  கிடக்குதடி

 நட்ட   நடுநிசியிலும்
 நல்ல  மனிதர்கள்
 நாடகம்   ஆடுகிறார்

 துட்டுகளை  எண்ணி
 தூக்கி   வைப்பவர்
 தூக்கத்தைத்  தேடுகிறார்

 கொட்டும்  மழையிலும்
 குளிரின்  நடுக்கத்தில்
 குடும்பம்  நடத்துகிறார்

 வெட்ட  வெளியிலும்
 விண்ணின்  அழகுகள்
 கொட்டிக்  கிடக்குதடி

 தொட்டுச்  சுவைத்திட
 துணையினைத்  தேடியே
 சிட்டுப்  பறக்குதடி

 கண்ணைப்  பறித்திடும்
 வண்ண  விளக்குகள்
 காணக்  கொடுமையடி

 எண்ணெய்   தலைக்கின்றி
 ஏழை    சிறுவர்கள்
 எத்தனை  கோடியடி

 கோடி  கொடுத்தாலும்
 குணமிகு  நல்லோர்கள்
 கொள்கை  மாறாரடி

 ஆட  நினைத்தவர்
 ஆட்டிப்  படைத்தவர்
 அடக்கம்  ஆவாரடி


 நாடி   வந்தோர்க்கு
 நன்மைகள்  செய்வோர்கள்
 நாட்டில்  ஒருசிலரே 

புல்லாங்குழல் -192.

காற்றில்  ஆடும்  மலர்களே -என்
 கண்ணன்  போனதை  அறிவீரோ
 நேற்று  எங்கயோ  போனவன் -அந்த
 நிர்மலன்  என்னதான்  ஆனான்

 ஒருநாள்  திருநாள்  மணநாள் -அவன்
 உறவைப்  பெற்றிட்ட  பெருநாள்
 மறுநாள்  மாயமாய்  போனான் -அந்த
 மாதவன்   இன்னமும்  காணோம்

 காதல்   கலைகளைக்  கற்கவே -எனக்கு
 கண்ணனே  கணவனாய்க்  கிடைத்தான்
 மோதல்  என்னிடம்  ஏதுமில்லை -அவனால்
 மூண்டது  பிரிவெனும்   காதல் தொல்லை

 வானில்  தெரிவது  மேகம் -ஏனோ
 வாடி  வதங்குது  என் தேகம்
 காணில்   அவனிடம்  சொல்லுங்கள் -இந்த
 காரிகை   படுகின்ற  பாட்டை

  புல்லாங் குழலிசை  கேட்டேன் -வண்ணப்
 புதுமலர்  அழகினை  ரசித்தேன்
 எல்லா  நூல்களைப்  படித்தேன் -என்
 இருவிழிக் கண்ணீரையும்  வடித்தேன்

 ஒருநாள்  என்னிடம்  வருவான் -நான்
 உள்ளவை  அனைத்தையும்  தருவேன்
 புதுநாள்   வருமோ  அந்நாள் -அதுவரை
 பொறுத்திட  முடியுமோ  என்னால் 

இயற்கை

அழகிய  புது  மலர்  ஒன்று -ஏனோ 
 ஆசையில்  துடித்த்து  அன்று 
 பழகிட  வேண்டும்  என்று -அது 
 பாசத்தி ல்  நினைப்பது நன்று 
 
 நிலவினில்  அழகுகள்  தெரியும் -அதனை 
 நினைத்திட  ஆசைகள்  விரியும் 
 களவுக்கு  ஏதம்மா  எல்லை -மனிதர் 
 காதலும்  மனதிற்கு  தொல்லை 
 
 மலரினை  வண்டுகள்  நாடும் -அதில் 
 மதுவினைத்  தேடியே  பாடும் 
 களவுகள்  இரவிலே  நடக்கும் -ஓடும் 
 காலங்கள்   இதனையும்  கடக்கும் 
 
 சில்லென  வீசிடும்  காற்று -தானும் 
 சிரித்து  ஆடுதுபார்  நாற்று 
 நில்லெனச்  சொன்னேன்  நேற்று -சற்றே 
 நிற்குமோ  என்னிடம்  காற்று 
 
 உண்டவர்  கொஞ்சம்  அயர்வார் -நாளும் 
 உழைத்தவர்  ஒருநாள்  உயர்வார் 
 கண்டது  கேட்பது   உலகம் -நீ 
 கவனத்தை  இழந்தால்  கலகம் 
 
 இருத்ததை  நடப்பதைச்  சொல்வேன் -என்றும் 
 இயற்கை   ரசிப்பினைக்  கொள்வேன் 
 விருந்தெனக்  கண்களில்  காட்சி -நம்மை 
 விட்டுவிலகுமோ  இறைவனின்   ஆட்சி 

செவ்வாய், 22 அக்டோபர், 2013

muthukkal-190.

அற்புத  அழகினைக்  கண்டேன் -அவள்
 அழகினை  அள்ளியே  உண்டேன்
 கற்பனை  செய்திடில்  காவியம் -நல்ல
 கலைஞன்  கைவண்ண  ஓவியம்

 காமனின்  துணைவி  ரதியாகும் -உன்னைக்
 காண்பவர்  தோற்பது  விதியாகும்
 நாலடி  நடந்திட  நாடகமாம் -அந்த
 நங்கை  உடலோ   பொன்  ஆடகமாம்

 விழிகள்  சுலன்றிடப்  பொர்க்களமே -எனது
 வெற்றி  உன்னிடம்  அடைக்கலமே
 இனியும்  ஏனடி  தாமதம் -நீ
 எது செய்தாலும்  எனக்கினி  சம்மதம்

 இருப்பதை  உனக்கே  தருகிறேன் -இனி
 எழிலே  அருகிலே  வருகிறேன்
 பொறுப்பினை  உணர்ந்து  முடிவெடுப்பாய் -எனது
 பொறுமையை   மதித்து  பிடிகொடுப்பாய்

 வாழ்ந்தால்  உன்னுடன்  வாழ்ந்திடுவேன் -நீ
 வரவில்லை  என்றால்  மாய்ந்திடுவேன்
 தாழ்வும்  வாழ்வும்  உன்மடியில் -அடி
 தங்கமே  நானுனது  கைப்பிடியில்

 இத்தனை சொன்னது  போதாதோ -என்
 இருவிழி  அழுவது  தெரியாதோ
 சித்திரை  மாதத்தின்  முழு நிலவே -நீ
 சிரித்தால்  உதிர்வது  நல்முத்துக்களே 

kudumbam-189.

கனியிதழ்  ஊறுது  கற்கண்டோ -உனைக்
 கலந்திட  அமுதினில்  ருசிஉண்டோ
 இருவிழி  வாசலில்  வரவேண்டும் -அதற்கு
 இணையென  நானென்ன  தரவேண்டும்

 முனிவரும்  மயங்கிடும்  முன்னழகு -என்
 முப்படை  தோற்றிடும் பின்னழகு
 இனியிவள்  ஒன்றே  பேரழகு -உன்
 இதயத்தில்  கனிவுடன்  நீபழ்கு

 வேல்முனை  மழுங்கிடும்  உன்விழிகளிலே -நான்
 விரகத்தில்  துடிப்பது  என்விதியே
 பால்மணம்  மாறிடாப்  பதுமையடி -உன்னைப்
 பார்ப்பது  எனக்கென்றும்  புதுமையடி

 நாளென்ன  பொழுதென்ன  நம்மிடையே -இனி
 நலம்பெற  வாழ்தல்  வெளிப்படையே
 நால்வகைக்  குணமுள்ள  நங்கையடி -என்னை
 நாயகன்  ஆக்கிடும்  புனித கங்கையாடி

 வானத்தில்  ஜோடியாய்  வலம்வருவோம் -நம்
 வாழ்வினில்  வசந்தத்தை  ரசித்திடுவோம்
 மானத்தை   பெரிதென  மதித்திடுவோம் -இந்த
 மண்ணிலே  சொர்க்கத்தை  படைத்திடுவோம்

 ஈருடல்   ஒருவராய்  வாழ்ந்திடுவோம் -என்றும்
 இன்பத்தில்  துன்பத்தில்  பங்கெடுப்போம்
 சீர்பெற  சிந்தித்து  முடிவெடுப்போம் -இங்கு
 சிறந்த  குடும்பமாய் வடிவெடுப்பொம் 

kudip pazhakkam -188.

தில்லாலங்கடி  தில்லாலங்கடி
 தில்லாலங்கடியோ  அடி  தில்லாலங்கடியோ
 இரவு எது  பகலும் எது  எனக்குப்  புரியலே -நான்
 இரண்டு  நாளா  குடிச்சும்கூட  இன்னும் ஏறலே

 அவள் :
 கண்ணை  மூடி  சும்மாநீ  கிடந்து  தூங்கணும் --நீ
 காசு  வந்தா  பத்திரமா  சேத்து  வைக்கணும்
 பொண்ணை  ஏன்னா  கேவலமா  நீயும்  நினைக்கிறே -நான்
 போட்டேன்னா  பொழைக்க மாட்டே  புரிந்து  நடந்துக்கோ

 அவன் :
 என்காசில்  குடிக்கிறேன்  என்னடி நீ  மிரட்டுறே -கொஞ்சம்
 ஒழுங்கா  இருந்தா  உதை  விழாது  தெரிஞ்சுக்கோ
 தலையும்  உடம்பும்  சும்மா  தானே  ஆடும் -அப்போ
 தாளம்  கூடவே சேர்ந்து  தப்பாய்   போகும்
 அவள்:
 குடிச்சுக் குடிச்சு உனக்குத்தானே  குடலும்  வெந்தது -நம்ம
 குடும்பம்  போற  போக்கிலே என்குலையும்  நடுங்குது
 எடுத்து எடுத்து  குடிச்ச்சதாலே   எலுமபும்  தெர்யுது -நா
 எவ்வளவோ சொன்னபோதும்  எங்கே  ஏறுது
 அவன் :
 எனக்கு ஏறும் போதை கூட உனக்கெங்கே  விளங்குது -என்
 இளவயசில் வந்த  பழக்கம்  விட்டு  எங்கே  போகுது
 கணக்கில்லாமே  குடிச்ச்சதாலே  நமக்கு  கடனும்  ஆனது -என்
 கண்ணாட்டி  உன்னைநினைச்சா எனக்கு கண்ணும்  கலங்குது
 அவள்:
 நமக்குப்  பிள்ளை குட்டி  அதிகம்  ஆச்சு -நமக்கு
 இங்கே  பெரிய  குடும்பம்  ஆகிப்  போச்சு
 நா சொல்லுறதை  கவனமா நீ  காதில்  வாங்கிக்கோ -நமது
 குடியைக்  கெடுக்கும் குடியை மறந்து திருந்தப் பார்த்துக்கோ
 அவன்:
 மனைவிசொன்ன  மந்திரமும்  என்மனசில் பட்டது -நான்
 மாபாவி என்னால் தானே நம்ம  மதிப்பு  கேட்டது
 இனியுமிந்த குடிபழக்கம் நானும் மறந்து  வாழுவேன் -நல்ல
 இந்தியனாய்  உலகினிலே இனியென்றும்  விளங்குவேன்

திங்கள், 21 அக்டோபர், 2013

tamilth deivam-187.

குன்றிலாடும்   குமரனை
 குறவள்ளி  நாதனை
 மன்றாடித்  துதிப்பவர்
 மகிழ்வினைக்  காணலாம்

 கனிக்காக   அன்றுமே
 கடுங்கோபம்  கொண்டவன்
 தனியாகப்  பழனியில்
 தங்கமாய்   ஜொலிப்பவன்

 பழ்நிஎனும்  தலமதில்
 பக்தர்களைக்  காப்பவன்
 கழனி வாழ்  உழவர்க்கும்
 நற்கதியை  தருபவன்

 வடிவேலைத்  தாங்கியே
 வரங்களை அளிப்பவன்
 அடியாரின்  குறைகளை
 அன்போடு   தீர்ப்பவன்

 தனியாக  நின்றவன்
 தமிழ்த்   தெய்வமானவன்
 இனிதான  முருகனை
 எந்நாளும்  போற்றுவோம் 

enakkup pidikkum -186.enakkup pidikkum

எனக்குப்  பிடிக்கும் -இதுவே
 எனக்குப்  பிடிக்கும்
 ஈரமுள்ள  மண்ணில்  நடக்க
 எனக்குப் பிடிக்கும்

 இதயத்திலே  ஈரமிருக்க
 எனக்குப் பிடிக்கும்
 உதயகால  கதிரைக் கூட
 எனக்குப் பிடிக்கும்

 உழைக்கின்ற  மக்களையும்
 எனக்குப்  பிடிக்கும்
 ஊரைக் கூவி  யழைக்கும்
 சேவல்  எனக்குப் பிடிக்கும்

 அங்கமெலாம்  தங்கமாக
 எனக்குப் பிடிக்கும்
 அளந்ததனை  பார்க்கிறதும்
 எனக்குப்  பிடிக்கும்

 பெண்கள் பூசும்   மஞ்சள்கூட
 எனக்குப்  பிடிக்கும்
 பெருமையுடன்  வாழ்கிறதும்
 எனக்குப்  பிடிக்கும்

 கண்களாகும்  கல்விகூட
 எனக்குப்  பிடிக்கும்
 காலமுழுதும்  கற்பதுவும்
 எனக்குப் பிடிக்கும்

 சிறுவரின்   மழலைமொழி
 எனக்குப்  பிடிக்கும்
 சீறிவரும்  காற்றின் ஓசை
 எனக்குப்  பிடிக்கும்

 பொங்கிவரும்  கடலலைகள்
 எனக்குப்  பிடிக்கும்
 பூமிப் பந்து  சுழலுவதும்
 எனக்குப்  பிடிக்கும்

 மழையிலே  நனைவதும்
 எனக்குப் பிடிக்கும்
 மானத்தோடு  வாழ்கிறதும்
 எனக்குப் பிடிக்கும்

 தாய் மடியில்  துயிலுவது
 எனக்குப்  பிடிக்கும்
 தமிழனாக  வாழ்கிறதும்
 எனக்குப்  பிடிக்கும்

 நோயின்றி  வாழ்வதுவும்
 எனக்குப்  பிடிக்கும்
 நூறு ஆண்டு  வாழ்கிறதும்
 எனக்குப்  பிடிக்கும்

 வானத்தில்   பறப்பதுவும்
 எனக்குப்  பிடிக்கும்
 வாழ்க்கையிலே  நல்லவைகள்
 எனக்குப்  பிடிக்கும் 

ulaa-185.

வானிலே  புது நிலா
 வாழ்விலே  ஒரு கனா
 நாணிலா   நீஇலா
 நாமினி  அன்பிலா

 தேனிலா  சுவையிலா
 தீங்கனி இதழிலா
 வானிலா  மண்ணிலா
 வரவிலா  செலவிலா

 உறவிலா  பகையிலா
 உள்ளத்தின்  அருகிலா
 தெரிலா   தெருவிலா
 தீந்தமிழ்  சுவையிலா

 மலரிலா  மரத்திலா
 மதுவிலா  மார்பிலா
 மங்கையின் உடலிலா
 மாங்கனி  இனிப்பிலா

 இரவிலா   பகலிலா
 இன்பங்கள்  நிலையிலா
 அருகிலா  தொலைவிலா
 அன்பிலா  அழகிலா

 நீரிலா  நிலத்திலா
 நெஞ்சிலா  நினைப்பிலா
 பேரிலா  பேச்சிலா
 பிஞ்சிலா  மனத்திலா

 ஒன்றிலா இரண்டிலா
 ஒளியிலா  ஒலியிலா
 கண்களா  காதலா
 கவிதையின்  சிறப்பிலா

 பெண்ணிலா  பெ யரிலா
 பெருமையின் குணத்திலா
 எண்ணிலா  எழுத்திலா
 இதயத்தின்  துடிப்பிலா

 வாழ்விலா  முடிவிலா
 வல்லமை  செயலிலா
 தாழ்விலா உயர்விலா
 தாய்மையின்  மடியிலா

 பெரிதிலா  சிறிதிலா
 பிள்ளையின்  சிரிப்பிலா
 அரிதிலா  எளிதிலா
 அடக்கத்தின்  வழியிலா

 நாவிலா  நடையிலா
 நங்கையின்  முகத்திலா
 பாவிலா  பண்ணிலா
 பல்கலை  அறிவிலா

 சிரிப்பிலா  வெறுப்பிலா
 சிந்தனைச் செறிவிலா
 இருப்பிலா  பொறுப்பிலா
 இளமையின்  கனவிலா


kaadhal kadai-183.

நிலவால்  முகம்  மறைத்தாள் -என்
 நெஞ்சில்  வலை  விரித்தாள்
 கனவில்  தினம் வதைத்தாள் -அவள்
 காதல்  கடை  திறந்தாள்

 கடந்தாள்  வெகு  தூரம் -அதனால்
 வந்த  கவலை  பெரும் பாரம்
 இருந்தாள்  எந்தன் இதயத்திலே -அந்த
 இனிமை  வருமோ  உதயத்திலே

 ஒருநாள் திருநாள்  வருமோ -என்
 உள்ளம்  சுகமினி  பெறுமோ
 தனிமை  தானெனக்கு  விதியோ -அது
 தர்மம்  செய்திட்ட சதியோ

 என்றுநீ  வருவாய்  என்னருகில் -எனது
 இதயம்  துடிப்பது  உன்மடியில்
 நன்றி  மறப்பது  தவறல்லவா -எந்த
 நாளும்  வளர்வது  உறவல்லவா

 களங்கம்  இல்லாத  முழுநிலவு -உன்னைக்
 கண்டாலே  வருமே  மனநிறைவு
 விளக்கம்  இனியென்ன  சொல்வதற்கு -நீ
 வரைந்து  வாயென்னிடம்  வாழ்வதற்கு 

ragasiyam-182.

வானில்  பறக்கும்
 வண்ணத்துப்  பூசிகளே
 வீணில  அலையும்
 விவரம்  சொல்வீரோ

 சிட்டெனப்  பறக்கும்
 சிட்டுக் குருவிகளே
 விட்டதை  தேடியே
 விரைவாகச்  செல்வீரோ

 சுற்றிச்  சுழலும்
 சூறாவளிக்  காற்றே
 பற்றுகளை  அழிக்கும்
 பாதகத்தை விடுவீரோ

 ஆர்த்து  எழுகின்ற
 அழகுக்  கடலலையே
 ஈர்த்து  இழுக்கின்ற
 இரகசியம்  சொல்வீரோ

 மொட்டு அவிழ்ந்த
 முல்லை  மலரினமே
 தொட்டு  ரசித்திட
 துணைக்கு  வருவீரோ

 வானப் பெருவெளியில்
 வலம்வரும்  வெள்ளிநிலா
 கானகத்துக்  குரலோசை
 கவர்ந்து  இழுத்திடுமோ

 சுண்டி  இழுக்கின்ற
 சுடர்விடும்  நட்சத்திரம்
 கண்டு  சிரித்திட்ட
 காரணம்  சொல்லிடுமா 

thozhiyae -181.

அழகெனும்  சொல்லே  நீயடி -உனது
 அடிமை  என்றுமே  நானடி
 பழகிட   இனிக்கும்  பைங்கிளி -நான்
 பார்த்ததும்  நெஞ்சிலே  பனித்துளி

 நானென  எதுவும்  இல்லையே -இங்கு
 நம்மிடை  பேதம்  தொல்லையே
 மீனெனத்  துடித்திடும்  கயல்விழி -புது
 மின்னலாய்  தாக்குதல்  உன்வழி

 தொட்டால்  துவளும்   கொடி இடை -அன்பே
 தோல்வியில்  மூடினேன்  எனது கடை
 பட்டால்  நெய்தது  உன்னுடல் -புதிய
 பரவசமானதால்  எழுதினேன்  ஒருமடல்

 மனதினைக்  கிள்ளியே  எடுப்பாயோ -இனி
 மகிழ்வினை  அள்ளியே கொடுப்பாயோ
 தினம் தினம்  தவிப்பது  எனது கதை -உனைத்
 தேடி அலைவதும்  புதிய வதை

 நீயும்  நானும்  ஒன்றே யடி -இந்த
 நினைவே  மனதிற்கு  நன்றே யடி
 காயும்  நிலவு   வீணடி -உனது
 கண்ணில்  தெர்யுது மீனடி

 காலங்கள்  ஓடியே  போகலாம் -வரும்
 கவலைகள்  கூடுதல்  ஆகலாம்
 வாழ்வு  என்பது  உள்ளவரை -இங்கு
 நாமினி  ஒருவராய் வாழலாம்

 மாற்றம்  என்பது  வெளிப்பாடு -நம்
 மனதின்  காதலோ  வழிபாடு
 தோற்றம்  என்பதும் வெளிக்கூடு -எனது
 தோழியே  வாராய் நீ  அன்போடு

kaaviyak kavignar vaalee-180.

வானப்  பெரு  வெளியில்  வந்து  கலந்தீரோ
 மோனை   சுவைஇனிலே  முத்தெடுக்கப்  போனீரோ
 கந்தன்  அருளாலே  கனிந்த பழமாணீர்
 உந்தன்  திறமை  உலகம்  அறிந்ததய்யா

 இரண்டு  திலகத்திற்கும்  இசைந்த பொருளானீர்
 திரண்ட செல்வம்  சினிமாவில் பெற்றதய்யா
 அரங்கன் திருத்தலத்தில்  அழகாய் பிறந்தவரே
 அழகன்  திருநாமம்  அருளோடு  அமைந்த்தய்யா

 நாடகத்    துறைக்கு  நல்ல தொண்டு  செய்தீரே
 நானிலம்  போற்றிடவே  நல்ல பெயர்  பெற்றீரே
 ஊடகத்  துறையில்  ஓங்குபுகழ்  பெற்றீரே
 துட்டுக்குப்   பாட்டெனும் துணிச்சலும்  கொண்டீரே

 காவியக் கலைஞரென  கற்றோர்கள்  போற்றினரே
 கலைஞர் நட்புக்கு  காரணமாய் நின்றீரே
 கவியரசர்க்கும்  கவின்மிகு  தோழர்  ஆநீரே
 கற்பனைப்  பாடல்  கருத்தான  பாடலாச்சு

 அற்புதமாகிய  அருட்பெரும்  சுடரின்
 பொற்பதம்  சேர்ந்த  புண்ணிய மூர்த்தி
 எத்தனை  காலம்  ஏங்கியே  இருப்போம்
 இங்கிவன்  மீண்டும் எழுந்து நீர்  வருகவே 

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

thankak kural-annant.m.s.179.

கானகத்துக்  குயில்  ஒன்று-இரு
 கண்  மூடி  தூங்குதையா
 வானகத்துக்  தேவர்  கூட்டம் -வந்தே
 வழி  காட்டி  அழைத்தனரோ

எம் கே  டி  போல இனிய குரலழகு -நமது
 எம் ஜி யாருக்கும்  இசைந்த புது மெருகு
 சிங்கமெனச்  சீரும் சிவாஜி  கணேசனுக்கோ -நல்ல
 தங்கமாய்  அமைந்தது  தமிழின்  பெருமையன்றோ

 மதுரையில்  பிறந்த  மாமணியே  கண்ணுறங்கு -நம்
 பொதிகையில் பிறந்த  பூந்தென்றல்  கண்ணுறங்கு
 விதி ஒன்று வந்து  விளையாடி விட்டதம்மா -வேறு
 கதி இல்லை  என்றே  கனக்குது  தமிழர் குளம்

 வெள்ளித்  திரையின்  வெற்றித்  திருமகனே -உலகம்
 வியக்கும்  குரலசைவில்  வெற்றி  குவித்தவரே
 அள்ளி  யனைத்தன்று  ஆசிபல சொன்னவரே -இதனை
 சொல்லித் துடிக்குதையா  சோதரன்  எந்தன்  மனம்

 வானத்து வீதியிலே  வலம் வருமே உனது குரல் -அந்த
 வள்ளி    மனவாளனால்  வளர்ந்ததே  உனதுபுகழ்
 கானப்   பெருவிளக்கே  கருணைமனம் கொண்டவரே -எந்த
 நாளும் உன்னை மறவோம் நன்றியுடன்  நினைத்திடுவோம்

 எத்தனையோ  பேர்கள்  இனியும்  வருவார்கள் -ஆயின்
 அத்தனையும் உன்போல  அமைந்திட  வேண்டாமோ
 சித்தனாய்  வாழ்ந்து  சிரஞ்சீவி  ஆனவரே -உனது
 பக்தன்  பாடுகிறேன்  பாசமுடன்  கேட்டிடுங்கள் 

kaadhalthodhu-178.

வானத்து  நிலவென  வந்து  விட்டாள் -என்
 வாழ்வுக்கு  அர்த்தத்தை  தந்து  விட்டாள்
 கானத்துக் குயில்  தரும் இனிமையிலே -அவளைத்
 கலந்திடத் துடித்தேன்  நான் தனிமையிலே

 சிரித்தால்  சீர்பெறும்  நல்ல பல்வரிசை -ஒரு
 சிலைபோல்  செய்தது  இறைவன் கைவரிசை
 விரித்திட்ட  வாழையின்  மடல் போல -சற்று
 வியந்து  பார்த்தால்  பொங்கும்  கடல்போல

 நடந்தால்  கிடைப்பது  புதிய  நாடகமே -அந்த
 நால்வகை  குணங்களும்  அவள்   வசமே
 படர்ந்தாள்  மல்லிகைக்  கோடி போலே -உற்று
 பார்த்தவர்  மனதில்   பெரும்  இடி போலே

 தோழி  உடன்வர   தினம்  செல்லும் -பின்
 தொடர்ந்தால்  அவரது உடல்  சாயும்
 வேலி  இல்லாத  விளை  நிலமாய் -தினம்
 வெற்றிக்  கொடி  பவனி  வருகின்றாள்

 மனதில்  உள்ளதை  நானே  சொல்வதற்கு -ஏனோ
 மற்றவர்  போல பயம்  எனக்கெதற்கு
 கனவில்  வந்திட்ட  கதை  சொல்வேன் -அவளது
 காலடி  மண்ணையும்  நான் தொழுவேன்

 கவிதை  படித்திடும்  செல்லக் கண்மணிகாள் -அவளைக்
 கண்டால்  கனிவுடன்  இதைச்  சொல்வீர்
 புவியில்  வாழ்வது  அவளை  ரசிப்பதற்கே -எனது
 புலம்பல்  தீர்ந்திட  நல்வழி  சொல்வீர் 

gangaik karai -177.

கண்ணிலே  தெரிவதென்ன  கண்ணம்மா -அந்தக்
 கண்ணனின்  திருமேனி  கண்ணம்மா
 பெண்ணிலே  பேரழகி  தானம்மா -வாய்
 பேசாத  பொற்சிலை  நீயம்மா

 நிலவுவரும் நேரத்திலே  கண்ணம்மா -உனது
 நெஞ்சம்  விம்மிப்  பொங்குவதேன் கண்ணம்மா
 கனவில் வந்தசுகம்  கண்ணம்மா -இனி
 காலத்திலும்  நிலைத்திருக்கும்  கண்ணம்மா

 புல்லாங்குழல் இசைத்தால் கண்ணம்மா -ஏனோ
 பொழுதெலாம்  மயங்குகிறாய்  கண்ணம்மா அள்ளக்
 குறையாதவன்  தான் கண்ணம்மா -தினம்
 அவனை நினைத்து  ஏங்குகிறாய்  கண்ணம்மா

 கங்கைகரைத்  தோட்டத்திலே  கண்ணம்மா -அன்று
 கண்ணனின்  மடிபுகுந்தாய்  கண்ணம்மா
 தங்கமெனத்  ஜோளிக்கிறானே  கண்ணம்மா -அவனைத்
 தழுவியணைத்து  மகிழ்ந்திடடி  கண்ணம்மா

 மாடுமேய்க்க  வந்தவன்  கண்ணம்மா -இள
 மனதில்வந்து  மேய்கிறானே  கண்ணம்மா
 கூடு விட்டு  கூடுபாய்ந்தான்  கண்ணம்மா -இந்தக்
 கொள்ளையை  எங்கு சொல்வேன்  கண்ணம்மா

 இரவுக் காலப்  பொழுதினிலே  கண்ணம்மா -இன்னும்
 எத்தனை  நாள்  காத்திருப்பாய்  கண்ணம்மா
 உறவுக்காக  துடிதுடிக்கும்  கண்ணம்மா -உடனே
 உன்னையாள  வந்திடுவான்  பாரம்மா 

iraivan-176.

என்னைப்  படைத்தவன்  இறைவனே
 எனக்கு  அவனே  தலைவனே
 பொன்னைப்  பொருளைத்  தந்தவன்
 புவனத்தை  என்றுமே  வென்றவன்

 தந்தை  தாயும்  ஆனவன்
 தர்மத்தை உலகிலே  காத்தவன்
 பந்தமும்  பாசமும் அற்றவன்
 பாடிடும் தமிழிற்கு  ஏற்றவன்

 வானும் கடலும்  எல்லைகள்
 வணங்க  மறுத்தால் தொல்லைகள்
 கூனும்  குருடுமவன்  பிள்ளைகள்
 குவலயத்தில்  எத்தனை  நன்மைகள்

 இல்லார்  சிரிப்பினில்  அவனிருப்பான்
 ஏற்றமும்  புகழும்  அவனளிப்பான்
 காற்றாய்  எங்கிலும் கலந்திருப்பான்
 கற்புடை  மாதர்க்கு உதவிடுவான்

 சோதனை  அதிகம்  தருபவன்
 சுகத்தினை  முடிவில்  அளிப்பவன்
 சாதனை  செய்திடத்  துணையவன்
 சரித்திரம்  படைத்திடும் வல்லவன்

 வலியோர்  தம்மையும் வதைப்பவன்
 வாய்மை  விதைகளை  விதைப்பவன்
 எளியோர் நெஞ்சினில்  இருப்பவன்
 எல்லா  செயலுக்கும் பொருப்பவன் 

mayakkam-175.

மனதின்  மயக்கம்  கனவாகும்
 கனவின்  தொடக்கம் நினைவாகும்
 மலரின்  மயக்கம் ஏதுவாகும்
 மணக்கும்  நிலையே உருவாகும்

 இளமை  மயக்கம்  துணையாகும்
 துணையின்  மயக்கம் தூதாகும்
 தூதின் மயக்கம்  தொடராகும்
 தொடரின்  மயக்கம்  நலமாகும்

 நலத்தின் மயக்கம்  நாடாகும்
 நாட்டின்  மயக்கம் நலமாகும்
 நலத்தின்  மயக்கம் வளமாகும்
 வளத்தின் மயக்கம் வாழ்வாகும்

 வாழ்வும்  தாழ்வும்  சமமாகும்
 வந்தவர்  போவது  நிஜமாகும்
 நிஜமே  ஒருநாள்  பொய்யாகும்
 நிலைமையை  உணர்வது  மெய்யாகும்

 இருப்பவர்  ஒருமுறை  இறப்பவரே
 இறப்பவர்  மறுபடி  பிறப்பவரே
 பிறப்பும்  இறப்பும்  பொதுவாகும்
 பின்னணி  அறிவது  சுகமாகும்

 சுகமும் சோகமும்  ஒர்நிறையே
 சூதும்  வாதும்  ஒர்குறையே
 நிஜமே   மாந்தர்க்கு  நிம்மதி
 நிம்மதி  மனதிற்கு  வெகுமதி

utthaman-174.

சிறுவர்  சிறுமியர் வாருங்களேன் -இந்த
 சிறியேன் சொல்வதைக்  கேளுங்களேன்
 அறிவால்  உயர்ந்திடப்  பாருங்கள் -உலகில்
 அதுதான்  சிறப்பெனக் கூறுங்கள்

 அரிதான செல்வம்  கல்விதான் -நாம்
 அதனை மறந்தாலே தோல்விதான்
 தெரிந்து  நல்வழி செல்லுங்கள் -இங்கு
 தீயென  என்பதை தள்ளுங்கள்

 உடலிற்கு உழைப்பு தேவையே -அதனை
 உணர்ந்து செய்திடில்  வெற்றியே
 கடலிலும்  நல்முத்து  காணலாம் -உங்கள்
 இருகைகளை  நம்பியே வாழலாம்

 நாட்டைக்  காப்பதே  நல்லது -எங்கும்
 நல்லவை  என்றுமே வெல்வது
 வீட்டையும்  கவனித்து  வாழுங்கள் -என்றும்
 வென்றவர் சொல்வதைக்  கொள்ளுங்கள்

 தெய்வம்  உண்டென்று  நம்புங்கள் -அதுவே
 சிறந்த  வாழ்வென உணருங்கள்
 உய்யவே  உழைத்தால்  உயரலாம் -இனி
 உத்தமன்  எனும் பெயர்  சேரலாம்

 தாய்  தந்தையை  மதியுங்கள் -நம்
 தமிழின்  சிறப்பினை  அறியுங்கள்
 நோய்  நொடியின்றி  வாழுங்கள் -நல்ல
 நுண்ணறிவால்  உலகினை  ஆளுங்கள் 

seedeivith thaayae 173.

எனை   பெற்ற  தாயே -உன்
 எழிலான  சேய்  நான்
 துணை ஏதும்  இன்றி -ஏனோ
 நீயன்று  தனியாகப்  போனாய்  
   

 மணமாலை  சூடி மகிழ்ந்தாயே -அம்மா
 மக்களால் உனக்கு மகிழ்வில்லை
 கணமேனும் உறக்கம் கடுகளவுமில்லை -தினமும்
 கடினமாய் உழைத்து தேய்ந்தவள் நீயே

 கணவனின் பெருமை காத்தவள் நீயே -சிறு
 களங்கமில்லா   கற்பகத்  தாயே
 குணமெனும்  தேர்   அமர்ந்த   குணவதி  நீயே -நம்
 குளம் காக்க வருக குவலயத்தில் அம்மா

 இறையருள்  மிக்க  எழில்ரசி  நீயே -இந்த
 சிறுவனின்  இன்னுயிர்த்  தாயே
கறைபடா  மேனி  கற்பரசி  நீயே -தமிழ்
 காவியம்  பாடிட  கருப்பொருள்  தாயே

 வருவாயென  வாசலில்  நின்றேன் -பல
 வருடங்கள்  போயும்  வரவில்லை நீயே
 திருமுகம் காணவே  தொழுகிறேன் நானே -என்
 தேனான செல்வமே திரும்பி நீ வருக

 வந்தாலே  வாழ்வு  வளமாகுமே -எனது
 வாழ்விலே  மகிழ்வு  வழிந்தோடுமே
 சிந்தனை  எல்லாம் ஜெயமாகுமே -எங்கள்
 சீதேவித்  தாயே சீக்கிரம்  நீவாம்மா