வியாழன், 26 செப்டம்பர், 2019

கிளி 7 9 5

நெஞ்சினில்      அவளைச்       சுமந்தேன்   ----அவள்
நினைவினில்      மனமும்     வெந்தேன்
வஞ்சி         மகள்      வருவாளா   ---என்
வாழ்வினில்       நலம்     தருவாளா

கொஞ்சிடும்      குரலோ       கிளி   ---அவளை
குலவிட       எதுதான்       வழி
பஞ்சினைப்      போலொரு     மேனி    ---யாரும்
பறித்துத்     தின்றிடா     தீங்கனி

மெல்லென       நடப்பது        பாதம்    ---அவள்
மேலோர்      போற்றிடும்     வேதம்
கொல்வது      ஒன்றுதான்      குறி    ----அவள்
குடும்பத்தில்      வாழ்கின்ற     பொறி

சீறிப்        பாய்வாள்        சினந்து   ----இந்த
செகத்தினை      சற்று     மறந்து
கூரிய         அம்புகள்       கொண்டாள்   ---பலர்
குருதியில்      பிரியமும்    கொண்டாள்

ஏனிங்கு        இவளைப்     படைத்தார்   ----அது
இதுவரை       தெரிந்திடா      விடைதான்   
தேனினைப்       போலவள்     இனிக்க    ----அந்த
தெய்வம்       துணைசெய்ய      வருமா




மயக்கம் 7 9 4

கண்ணால்         வருவது        காதல்   ---அது
காளை       கன்னிக்கு       மோதல்
பின்னால்      வருமே      ஊடல்   ---இனி
பின்னணியில்      உள்ளது      வாடல்

நீராய்        இருந்தால்      குளிரும்   ---அது
நெருப்பாய்      இருந்தால்      மலரும்
யாராய்    இருந்தால்      என்ன    ---இது
யாவர்க்கும்    பொதுவெனச்    சொல்வேன்

இளமை         தருவது      மயக்கம்   ---நமக்கு
எதிலும்       உள்ளது      தயக்கம்
பழகிடப்       பாலும்     புளிக்கும்   ---அது
பல்லினைக்     காட்டி    இளிக்கும்

கேட்டால்       கிடைப்பது      இல்லை   ---இங்கு
கேள்வி       பதிலுமே     தொல்லை
பாட்டால்       வருவது      அமைதி   ---நீ
படித்தால்      உயர்வது     உறுதி

நல்லன       என்பதை        நாடு   ----பிறர்
நலம்பெற     என்றுமே      பாடு
உள்ளவன்      ஒருவன்      உண்டு   ---அவனை
உணர்ந்திடு      இன்றேனும்       கண்டு 

புதன், 25 செப்டம்பர், 2019

எண்ணம் 7 9 3

கண்களில்       தெரியும்        காவியம்    ---இரு 
கலைஞர்கள்      வரைந்த    ஓவியம் 
உன்னில்     அழகி    யாரு    ---அது 
உலகினில்     உண்டோ   கூறு 

பின்னிப்     பின்னியே     நடப்பாய்   ---உன் 
பின்னலைக்     கைகளால்    இழுப்பாய் 
மண்ணில்      தெரியுமே     வானம்   ---உன்னை 
மறக்க      முடியுமோ     நானும் 

சிற்றிடை       மெல்லென       அசையும்   ---முகம் 
சீதள       நிலவாய்ப்     பொழியும் 
பற்களில்     மலர்கள்      மலரும்    ---உன்னை 
பார்த்திட      ஆசைகள்      வளரும் 

நிலவில்      ஒளிர்வது       நீயா   ---உன்னை 
நினைத்திடும்     மனதில்      தீயா 
பழகிப்       பார்த்திட      வருவாய்    ----நானோ 
பாசத்தை     யள்ளித்    தருவேன் 

வாழும்     காலங்கள்      வாழ்வோம்   ---அதில் 
வளர்கலை     அனைத்தும்     பயில்வோம் 
சூழும்       துயரங்கள்      விலகும்   ----மனதில் 
தூய       எண்ணம்       மலரும் 

மாதவன் 7 9 2

சொந்தமென       உலகில்       யாருமில்லை    ----அதனால்
சோர்வும்       அடையத்      தேவையில்லை
பந்தமென      வந்திடும்     பரந்தாமா   ---உன்னை
பணிந்து       தொழுகிறேன்    பலகாலமா

ஆடு         மாடுகள்       மேய்ப்பவன்   ---தன்
அடியவர்     தம்மையும்      காப்பவன்
பீடுநடை       போடும்     பெரியவன்   ---நம்
பேதைமையைப்    போக்க  வந்த    ஹரியவன்

மண்ணை  யள்ளித்     தின்றது   வாயிலே   ---பல
மாயங்கள்     காட்டிடுவான்    கண்ணிலே
கண்ணனாக     வடிவெடுத்த     கற்பகம்   ---நாம்
காணக்      கிடைக்காத      அற்புதம்

மலையினைக்      குடையாக்கிய      மாதவன்   ---நம்
மனக்குறையை    தீர்க்கவந்த       மாயவன்
அலைமகளின்     துணைவனான     தூயவன்    ---தனது
அன்பினாலே       அகிலமதை      ஆள்பவன்

கண்ணனின்      காலடி       பற்றி   விடு   --உள்ள
கவலைகளை     அவனிடத்தில்     விட்டு விடு
நன்மையெல்லாம்      அவன் தருவான்     நெஞ்சமே  ---அவனை
நம்பினார்      கெடுவதில்லை      எந்த நாளுமே 

அனுமதி 791

தென்றலில்       ஆடும்      தேன்மலரே     ---நீ
என்   தேவன்      வந்ததைக்     கண்டாயா
அன்றவர்      போனது     வரவில்லையே    ---நான்
அடைவது      எல்லாம்     பெரும்   தொல்லையே

சிரித்துப்        பேசியெனை     மயக்கியவர்   ---இந்த
சின்னஇடையாளை     எனோ     மறந்து விட்டார்
குறுக்கு      வழிதனில்     போவாரோ   ---கோதை
என்னிடம்     திரும்பி      வருவாரோ

நீரும்      நிலமுமாய்       ஆனோமே    ---என்
நெஞ்சினில்      மஞ்சம்     கொண்டாரே
வேறு      யாரைச்      தேடிச்      சென்றார்   ---அந்த
விவரம்      அறிந்தால்      தேவலையே

இரவு       நேரம்      தூக்கமில்லை  ---அவர்
இதயத்தில்    சிறிதும்     இரக்கமில்லை
உறவை     உதறிப்      போனாரே    ===என்
உயிரைக்      கூட்டிச்      சென்றாரே

காலம்      முழுதும்       கண்ணீரோ    ----இளம்
கன்னியர்      காதல்     வெந்நீரோ
ஆலம்     விழுதாய்      வாழ்வதற்கு    --அந்த
ஆண்டவன்     அனுமதி     தருவாரா

                                                                                                 


புதன், 11 செப்டம்பர், 2019

வாகைமலர் 7 9 0

இரவோடு      வருகின்ற      நிலவே   ---என்
இனியவளெங்கே    நீ சொல்லு    நிலவே
உறவெனும்      அமுதமாய்    வந்தாள்   --உயிரோடு
உடலையும்     உத்தமி      தந்தாள்

கணைவிட்டுப்       பாய்கின்ற     கூரோ   ---என்
கண்ணீரும்     அவள் தந்த      நீரோ
துணையாகப்    பாய்கின்ற     வெள்ளம்   ---தோகை
எனக்காக      வாழ்ந்திடும்      உள்ளம்

சிந்தாமல்      சிதறாமல்      வந்தாள்   ---என்
சிந்தனைக்கு     ஊற்றாக     நின்றாள்
முந்தானைக்    கொடியினை    விரித்தாள்   ---கொடுக்கும்
முத்தத்தில்     உலகையே     மறைத்தாள்

அன்பாலே       அணைக்கின்ற      நெஞ்சம்   ---எனது
அழகியின்      காலடியில்     அடியேனும்     தஞ்சம்
கண்போல     வைத்தவளைக்    காப்பேன்   ---கடும்
உழைப்பாலே     காசுகளைச்     சேர்ப்பேன்

இளமை        அனுபவங்கள்      பலகோடி   ---என்றும்
அடைவேனே       அவளுடன்     அனுதினம்    கூடி
வளமான        எதிர் காலம்      எனக்கென    உண்டு   ---அவளெனை
வாழ்ந்திட      வைக்கிற      வாகை  மலர்ச்  செண்டு  

வேட்டை 7 8 9

கண்கள்        மூடிப்       படுத்தேன்   ---ஒரு
கள்வன்       வந்தானே     நிலவில்
பெண்கள்    மீதில்    அவனுக்கென்ன    பாசம்   ---அது
பின்னாளில்     தெரிந்தது     படுமோசம்
எண்ணாமல்   இடமும்     கொடுத்தேன்   ---என்னோடு
இணைந்திட    சம்மதம்     அளித்தேன்
கண்மணி     என்றவன்     சொன்னான்   ---முடிவில்
கண்ணீரில்    என்கதை     முடித்தான்
சுவைத்தானே     பலமுறை     தோழி  ---அந்த
சொர்க்கத்தில்    எத்தனையோ     நாழி
அமைத்தானே    அன்பெனும்     கோட்டை  ---ஆனால்
அவன்   ஆடியது    என்னுடலில்    வேட்டை
உறவினில்      ஏற்றம்     கண்டேன்  ---அவன்
உறவாலே     புது உயிர்    கொண்டேன்
மறவாமல்     வருவேன்     என்றான்   ---நானும்
மகிழ்வோடு     அனுப்பி    வைத்தேன்
வருவானென    எண்ணிக்     களைத்தேன்   ---தினம்
வளர்கின்ற      சிசுவாலே     இளைத்தேன்
மறுவாழ்வு     வருமாவென    மலைத்தேன்   --அந்த
மாதவன்       அருளாலே    உயிர்    பிழைத்தேன்
ஆணாகப்       பிறந்தவர்கள்      அழட்டும்    ---என்
அலறல்      அவர்கள்      காதுகளில்     விழட்டும்
வீணாக     பெண்களிடம்    என்ன      விளையாட்டு   ---இந்த
வினைகள்    தீர்ந்திட     இறைவா  நீ     நல்வழி    காட்டு 

திங்கள், 9 செப்டம்பர், 2019

பேசும் சிலை 7 8 8

வானிலாடும்        நிலவைக்       கேட்டேன்    ---அங்கு
வட்டமிடும்     பறவையைக்      கேட்டேன்
தேனிலாடும்     மலரைக்     கேட்டேன்    ---என்
தேவி எங்கு       போனாள்     என்றே

கண்கள்      தேடியும்      காணவில்லை   ---அவள்
கனிமொழியை    நானும்     கேட்கவில்லை
 பெண்களில்    தெய்வம்     அவளல்லவா   ---அந்த
பேசும்        சிலை       எங்கே     போனாள்

ஊர்        அடங்கியும்      நானும்     உறங்கவில்லை   ---என்
உள்மனதில்      பொங்குது      எரிமலை
பேர்     சொல்ல      இங்கு     பிள்ளையில்லை  ---இதுவே
பெரும்      சுமையாய்        ஆகும்      தொல்லை

கன்னியால்         நான்       வளர்ந்தேன்   ---அவளது
கருத்தினால்       செல்வம்       சேர்த்தேன்
எண்ணி       இன்பம்       சேரும்போது  ---எனோ
எங்கேயோ       சென்று      விட்டாள்

தேடித்      தேடியே    தினம்     அலைகிறேனே   ----நான்
தெய்வங்களைத்      தொழுது      கேட்கிறேன்
நாடியவளே       என்னிடம்      வருவாளென்பேன் ----எனக்கும்
நல்ல வாழ்வு     இனிமேல்      கிடைக்கு     மென்பேன் 

காவியம் 7 8 7

போராடிப்        போகுறியே         கோவமா   ---உன்னை
பொறுப்பாக    வாழவைப்பேன்      நானம்மா
நீராடும்        வேளையிலும்       மீனம்மா   ---என்
மனது       நெருப்பாகக்     கொதிக்குது     ஏனம்மா

கண்ணாலே      கண்டதிலே      கண்ணம்மா   ---எனக்கு
கவனமெங்கோ      போயிடுச்சே    பொன்னம்மா
உன்னாலே      துடிக்கிறேனே     குருவம்மா   ---உனக்கு
உள்ளதடி  இன்னும்   நிறையக்    குறும்பம்மா

பொன்னாலே     மாளிகையும்     கட்டுவேன்   ---மண
பெண்ணாய்     உன்னை வைச்சு     வாழுவேன்
கண்ணாலம்    செய்துகொள்ள     ஆசையா   ---உனக்கு
காலமெல்லாம்     செய்வேனே      பூசையே

வேண்டிய       செல்வங்கள்        உண்டடி    ---உன்னை
விரும்பியே      அலைபவன்      நானடி
தூண்டிலாகும்    உன்னழகு     தேனடி    ---தினம்
துடித்து      அழுபவன்      தானடி

அழகாகப்        பிள்ளைகள்       பிறந்திடும்   ----அவர்கள்
அறிவாலே       எந்நாளும்      சிறந்திடும்
கலையாடும்    கண்ணே   நீ      காவியம்   ---அந்த
கடவுளே        தீட்டி  வைத்த     உயிரோவியம் 

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

அடிமை 7 8 6

கற்றாழைக்       காட்டிலே       நின்றவளே   ---என்னை
கண்ணாலே       வலைவீசி      வென்றவளே
நற்றாமரை     மலரோ     நறுந்தேனோ   ---உன்னை
நம்பி      வந்ததற்கு      பலன்    இதுதானோ

அம்பாலே       என்னை      அடித்தாய்   ---இந்த
அடிமையின்     கதையினை   முடித்தாய்
அன்பாலே      காதல்      சொன்னேன்   ---என்னை
அடித்துத்      துரத்தி       விட்டாய்

வாலிப        வயது      அல்லவா   ---உன்னோடு
வாழத்        துடிப்பது     நானல்லவா
கேலிகள்     செய்து     வெறுத்தாய்   ----இந்த
கிளி  வேண்டி      நானும்    பொறுத்தேன்

வாசலில்       வந்து        நிற்பேன்   ---உள்ளதை
வாரியே       உனக்குத்     தந்திடுவேன்
பாசத்தில்      அன்றோ    புலம்புகிறேன்   ---எந்தன்
பத்தினியே   உன்னையின்னும்    நம்புகிறேன்

காதல்      மொழி பேசிக்     கட்டி யணைத்து  விடு   ---உனது
கனியிதழாலே      காயத்திற்கு     மருந்து யிடு
சோதனை      போதும்    சுந்தரியே    வந்துவிடு   ---எனக்கு
சொர்கத்தைக்     காட்டி     சுகமாக    வாழவிடு 

பொன்மணி 7 8 5

நிலவில்       ஆடித்         திரியலாம்    ---நாம் 
நினைக்கும்     இடங்கள்    போகலாம் 
உலவும்       காற்றில்     மிதக்கலாம்    ---நாம் 
ஒருவர்      என்றே      ஆகலாம் 

நாமும்       நன்றாய்      வாழலாம்   ---நமக்கு 
நல்ல        பிள்ளை     பிறக்கலாம் 
தேனும்     பாலும்      ஆகலாம்    ---என்றும் 
திகட்டாத      இன்பம்  அடையலாம் 

வானில்       செல்லும்     பறவையாய்   ---நாம் 
வட்டம்      போட்டுப்     பறக்கலாம் 
காணும்     உலகம்     கையிலே   ---என்றும் 
காதல்       வாழும்      மண்ணிலே 

நானும்        நீயும்      ஒன்றடி    ----அது 
நடக்கும்      நாள்தான்   என்றடி 
மீனைப்      போன்ற    கண்களால்   ---நீ 
மீண்டும்    மீண்டும்     கொல்கிறாய் 

வாழ        எனக்கு       வலுவில்லை    ---வேறு 
வழியில்      போகவும்    விதியில்லை 
ஆள        வருவாய்     கண்மணி   ---இந்த 
அடிமைக்கு       நீதான்    பொன்மணி 

நம் நாடு 7 8 4

அவள் ---   சின்னப்        பையன்       சிங்காரம்   ----நீ
                   சிரிச்சு        விட்டா       ஒய்யாரம்
                   பண்ணைப்     பக்கம்    போகலாம்  ---நாம
                  பள்ளிப்      பாடம்      படிக்கலாம்

அவன் --ஆளை     விடுங்க       அம்மாளு   ---நீங்க
                 அதிகம்     போடுறே     கும்மாளம்
                தோளைக்    குலுக்கி     சிரிக்கிறே   ---என்னை
               சொக்க       வைக்க     நினைக்கிறே

அவள் --கண்ணால்     கண்டால்     பாபமா   ---நீயும்
               காதல்        அறியாத       மூடமா
              பொண்ணு     எதுவும்     செய்யலாம்   ---எங்கும்
             புடவை யே     ஜெயிக்கும்     புரியுமா

அவன் ---உலகம்       அறிந்திடாத      வயசு    ---அதில்
                உள்ளது       வெள்ளை     மனசு
              கலக        விதைகளைத்     தூவுறே   ---என்னை
            காலை      வாரி விடப்      பார்க்கிறே

இருவரும் ---போட்ட      சண்டைகள்     போதுமே   ---இனிமேல்
                         புரிந்து        ஒன்றாய்       வாழுவோம்
                        நாட்டைக்       காக்க    நாமும்    உழைக்கணும்   ---நமது
                      இந்தியா       உலகினில்      சிறந்து     விளங்கணும்   

தாசன் 7 8 3

கானம்            பாடும்          வானம்பாடி   ---நான் 
காதல்        கொண்டேன்     உன்னைத்     தேடி 
கருணை கொண்டு     என்னை      நாடி   ---நாம் 
கலந்திடலாம்      தூய      அன்பில்     கூடி 

சரண்        அடைய      வேண்டுமோடி   ---நானே 
சண்டை    போட   உனக்கு    சரியான    ஜோடி 
அரண்மனையில்    வாழ     வைப்பேன்   ---உனக்கு 
ஆயிரம்   பேர்கள்     காவல்     நிற்பர் 

யாரும்       பறித்திடா        ரோஜா   ----அடியே 
நானே       உனக்கு     ஏற்ற     ராஜா 
திருவிழாவில்      வருகின்ற     தேரே   ---உன்னை 
திகைத்துப்       பார்த்திடும்    இந்த    ஊரே 

அங்கத்தில்     தங்கம்      வைத்தாய்    ---உனது 
அழகினில்     ஆசை      வைத்தேன் 
திங்களும்      வானமும்     சாட்சி   ---நம் 
திருமணம்      ஆனாலும்    தொடர்வது    உனது   ஆட்சி 

கொடுக்க        முடியாதத்தைத்   கொடுப்பேன்   ----அந்த 
கோவைக்      கனிகளை       ருசிப்பேன் 
தடுத்திட      முயலாதே      பெண்ணே    ----உனக்கு 
தாசனாய்      எந்நாளும்     இருப்பேன்    கண்ணே 

புதன், 4 செப்டம்பர், 2019

மயக்கம் 7 8 2

கன்னி      மலர்ப்        பூசை    செய்வேன்    ---என் 
காதலி      உன்மேல்     ஆசை     வைத்தேன் 
என்னையே    உனக்கெனத்    தந்து   விட்டேன்   ---இனி 
எதிர்காலம்     உந்தன்    கைகளில்    இருக்கிறதே 

பொன்னி   பெற்ற       பூங்கொடியும்     நீதானோ   ---நீ 
பின்னிப்   பின்னி    நடக்கிற     பேரழகை    என்ன சொல்வேன் 
கண்களுக்கு  விருந்தான    கற்பகமே     வாழ்க     நீயே   ---நான் 
கன்னித்      தமிழினில்     கவிதை     மழை     பொழிந்திடுவேன் 

எட்டி நீ     நடக்கையில்      இளைஞர்கள்     மயக்கமடி   ---உன் 
பட்டு மலர்     மேனியோ   பளிங்காலே     செய்ததடி 
கட்டிக்   கரும்பல்லவோ    காமனின்  கை  வில்லல்லவோ  ---தினம் 
கட்டி   யணைத்திடவே     நெஞ்சில்     கள்வெறி    ஏறுதடி 

ஊரினைக்     கூட்டியே       உடனே       திருமணமாம்   ---இனி 
சீர்வரிசை      கோடி      தேடி வரும்      நாடி 
வேரிற்    பழுத்த     பலா    நீ     விண்ணிலே    வட்ட  நிலா   ---இந்த 
பாரினில்   உன்னைப்    போல      பார்த்தவர்கள்    யாருமில்லை 

மதனும்     ரதியும்     போல்    மகிழ்வோடு     வாழ்ந்திடலாம்   ---நம் 
மக்கள்      தொகை     பெறுக    மனது நீயும்     வைத்திடடி 
இதனைச்     சொல்லிடவே      இத்தனை      நாளாச்சு    ----எந்தன் 
எசமானி      நீயே     நன்கு      இசைவாகப்    பதிலைச்     சொல்லு 

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

பாரிஜாதம் 7 8 1

கண்ணே       உன்னைக்      கண்டாலென்ன   --நான்
காதல்         அமுதம்       உண்டாலென்ன
பின்னால்    தொடர்ந்து    வந்தாலென்ன  ---எந்தன்
பேசும்  கிளி     பதில்      சொன்னாலென்ன

அல்லி     மலர்க்    குளத்தில்     கண்டேன்   ---நான்
ஆசை    நிறைய    ஆவல்     கொண்டேன்
பள்ளிப்     பாடம்     படிக்க    வேண்டும்   ---அன்பே
பருவப்     பாடல்     பாட     வேண்டும்

அந்தி      பகல்       அலைந்து     கெட்டேன்   ---நானும்
அங்கும்      இங்கும்     தேடிப்    பார்த்தேன்
பந்தி      வைக்க     மனம்      இல்லையோ  ---என்
பாரி  ஜாத    மலரே     பதிலைச்     சொல்லு

இரவு      பகல்       போனால்      என்ன   ----என்
இளமை     பாடும்    பாடல்     கேட்பாய்
உறவு      கொள்ள    தினமும்   கேட்கும்  ---எந்தன்
உத்தமியே    உனது    மனதைத்     திறவாய்

மண்ணில்      வாழும்      மாந்தரிடையில்   ---என்றும்
மங்காக்       காதல்      எண்ணம்     உண்டு
பெண்மேல்    ஆசை    நிறையக்    கொண்டு  ---நான்
பிதற்றுவதாக     நீயும்      எண்ணா ய்ப்    பெண்ணே 

பழரசம் 7 8 0

எந்தன்     மனம்          செண்டானதே    ---எதோ
புதிய           இன்பம்      வந்தாடுதே
பொன்னில்       செய்த     பூவையென்பேன்   ----இந்த
பூமிக்கு       வந்திட்ட  ப்     பாவை யென்பேன்

அன்பு       மலர்ச்       சரம்      தொடுத்தேன்   ---அவள்
கழுத்தில்      மாலையாய்     இட்டேன்
இன்பமுடன்     சிரித்து     நின்றாள்   ---தேன்
இதழ்களில்    முத்தமும்     கொடுத்தேன்

எட்டடுக்கு     மாளிகை     வசிப்பதற்கு   ---இரவில்
தூங்கிட      வண்ணப்      பஞ்சு  மெத்தை
அட்டியின்றி    சமையல்   வகை    ஆகாரம்   ---அவள்
அடையலாம்      என்வீட்டில்      வெகு  காலம்

நிலவு         கால          இரவுகள்    ---அதில்
நீளுமே        நெடு  நேரம்     இனிய    உறவுகள்
பழகிடுவோம்    காதலில்     பலரகம்   ---அவள்
பருகப்   பருக     திகட்டிடாத     பழ ரசம்

வாழும்       காலங்கள்    இன்னும்     நீளுமோ  ---அந்த
வனிதையின்     மனம்      ரொம்ப     ஆழமோ
சூழும்     வினைகள்    இனிமேல்    மாறலாம்  ---நாங்கள்
சுகமுடன்     என்றுமே     நன்றாய்    வாழலாம்

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

ஆவல் 7 7 9

திருநாள்        வந்தது     ---மனம்
தேனாய்       இனிக்குது
மணநாள்    வந்திடும்   ---புது
மகிழ்வினைத்     தந்திடும்

வழிமேல்      விழி வைத்தேன்   ----அவர்
வருகை    எதிர்பார்த்தேன்
அழகன்      வருவாரா    ---என்
ஆவல்       தணிப்பாரா

நிலவு        அழகாகும்   ---அவர்
நினைவு     சூடேற்றும்
பழகிட     மனம்   தேடும்  ---ஆனால்
பண்பு      தடுத்து விடும்

சேர்ந்து      மகிழ்வோமா  ---இந்த
செகத்தை    மறப்போமா
பார்க்கும்     இடமெல்லாம்  ---அவரின்
பதிவு        தெரிகிறதே

காலம்       எனக்காகும்     ---நாளும்
காதல்       வழிந்தோடும்
கோல      முருகனருள்   ----எனக்கு
குறையாது    நிறைந்திருக்கும்  

வெற்றி 7 7 8

கண்ணில்       உன்னைக்       கண்டாலே      போதும்  --உடனே
காதல்         எண்ணம்        வந்தே       தீரும்
என்னில்      உன்னை       இன்றே        சேர்ப்பே ன்  ---நீ
எந்தன்      மனைவியென    ஆக  வேண்டும்    பெண்ணே

கொஞ்சி       வரும்       தமிழும்        நீயோ   ---நான்
குலவ        நினைக்கும்     எனது     ஆசைக்   கிளியோ
அஞ்சுகத்தின்     அழகை    யள்ளி  வரும்    கண்ணே   ---இனி
அள்ளித்      தினம்      அன்புக்       காதல்      செய்வேன்

காலங்கள்       ஓடியே       போனால்       என்ன   ---நம்
காதல்         இங்கே         என்றும்       வாழும்
கோலமிகு      மனையாளோடு  கொஞ்சுவதே    இன்பம்   ---அவள்
குமிழசிரிப்பைக்       காண      கோடி     நலம்    தேடி    வரும்

வாழ்வில்       நீ வருவாயெனில்     வல்லமை      கூடி  வரும்   ---எனக்கு
வற்றாத        செல்வங்கள்    என் வாசலுக்கு    வந்து    சேரும்
ஆழ்மனதில்   உன்னை  வைத்து     ஆராதனை    செய்வேன்  --நாமும்
ஆயிரம்      காலங்கள்       அன்பு    செய்து    அழகாக     வாழ்ந்திடலாம்

இன்பம்      இதுவே     இன்பம்     என்று    என்றுமே   மகிழ்ந்திடுவோம்   ---உன்
இடை     தொட்டுக்     கடை    விரித்து     எல்லாமும்     பெற்றிடுவேன்
துன்பம்      என்னும்      சொல் தொடராது     அறிவாய்ப்    பெண்ணே   ---நமது
தூயக்     காதல்   ஒன்றே       தொடர்ச்சியாக      வெற்றி     தரும்

ஒரு நாள் 7 7 7

நிலவினில்         ஆடிக்         களித்தேன்    ---ஓடும்
நீரினில்        மூழ்கித்      திளைத்தேன்
கலைகள்     கற்றும்     மகிழ்ந்தேன்    ---என்
கள்வன்       உன்னையேன்   காணேன்

வருவாய்        என்றொரு        ஏக்கம்   ---நீ
வந்தால்        பறந்திடும்       தூக்கம்
தருவாய்      அன்பெனும்     முத்தம்   ---பின்
தழுவிக்       கொள்வாயே   நித்தம்

உடலும்         துரும்பாய்ப்     போச்சு   ---எனக்கு
ஊரார்        பலரால்         பேச்சு
கடலாய்க்      கண்ணீர்       ஆச்சு   ---உன்னை
கண்டால்       துன்பம்        போச்சு

என்றும்         இணைவோம்        என்று   ---நீ
எனக்குச்       சொன்னாயே        அன்று
கண்ணா      வந்திடில்         நன்று    ---இல்லையேல்
நானும்        தாயினைப்    பிரிந்த     கன்று

மறவா         இன்பங்கள்       கொடுத்தேன்    ----இந்த
மலரின்       தேனையும்       குடித்தாய்
உறவை       எண்ணியே     துடிப்பேன்    ---ஒருநாளிலும்
வரவில்லை     என்றால்     மடிவேன் 

இனியவர் 7 7 6

கனிந்திடும்        உள்ளம்     ---நம் 
கண்களில்     வெள்ளம் 
கலியுக     தெய்வமன்றோ    ---அவர் 
காண்கையில்    அழகரன்றோ 

வறியவர்       வாழவும்    ---எங்கும் 
வளமைகள்     சூழவும் 
வகுப்பது     நீதியப்பா   ---இந்த 
வழியென்றும்     நன்மையப்பா 

நினைத்தவர்       வாழ்வினில்    ---நல்ல 
நிம்மதி        சேரும் 
அணைத்திடும்     கரங்கள்   ---நமக்கு 
ஆறுதல்        அளித்திடுமே 

ஆற்றாது       அழுதால்    --அதனை
துடைத்திட    அண்ணல் வருவாரே  
அன்பினை     யள்ளித்தருவாரே   ---நமக்கு 
அடைக்கலம்    கொடுப்பாரே 

இனியவர்        அவரே   ---என்றும் 
ஏழையர்         தலைவன் 
எம்மையும்      காப்பாரே    ---கண்ணன் 
இதயத்தில்       வாழ்வாரே