வெள்ளி, 7 ஜூன், 2013

velveer

வீணே  பேசி
 விஷத்தை  கக்கி
 தானே எல்லாம்
 தருக்கால் நடப்பார்

 நீரால் நெருப்பால்
 நிதமும் அழிவார்
 பிறர்க்கு உதவ
 பிறிதும் நினையார்

 ஊரார்  பொருளை
 உவந்தே  பறிப்பார்
 சீரார்  பெண்ணை
 சிதைத்தே  மகிழ்வார்

 வாய்மை என்பதை
 வாழ்வினில்  நடக்கார்
 பொய்யே  துணையாய்
 பூமியில்  வாழ்வார்

 கருணை பெருமை
 கனவிலும் நினையார்
 அருமை பெற்றோர்
 அவதியில் வைப்பார்

 பிள்ளைப் பாசம்
 பெரிதே  கொள்ளார்
 கொள்ளை  பணத்தை
 குவித்தே வைப்பார்

 ஆலயம் செல்வது
 அவர்க்கோ  கடிது
 அன்பு செய்வது
 அளவிலா  கொடிது

 பண்பு  என்பதோ
 பசப்பு  வார்த்தை
 நன்றி  மறந்ததால்
 நாளும் மெலிவார்

 இத்தனை  குணத்தை
 இதுவரை சொன்னேன்
 புத்தியில்  கொண்டு
 புவியினில் வெல்வீர் 

1 கருத்து: