புதன், 5 ஜூன், 2013

pugazh

ஆறில்லா  ஊரில்
 அழகு  கெடும்
 அறிவில்லா  சிலரால்
 அமைதி கெடும்

 பேறில்லா  மனிதன்
 பிழைகள்  தானே
 பெண்ணில்லா  உலகம்
 சோகம்  தானே

 நீயல்லா  நானும்
 மோசம் தானே
 நினைவில்லாத  எதுவும்
 தொல்லைதானே

 பொய் இல்லாத சொல்லும்
 வெற்றி  தானே
 புகழில்லாத  செயலும்
 வேஷம்  தானே

 கலையில்லாத  சிலையும்
 கவலை  தானே
 காசிலார்  நிலையம்
 கடினம்  தானே

 வாயிலார்  பிறர்முன்
 ஊமை  தானே
 வழ்யிலார்  பாதை
 வழுக்கல்  தானே

 நோய் இல்லார்  என்றும்
 சிறப்பு  தானே
 நுணலும்  கெடுவது
 வாயால்  தானே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக