செவ்வாய், 18 ஜூன், 2013

thunai

காற்றில்  கலந்த  ஈரம் -தினம்
 எந்தக்ன்  கண்ணில்  வடிகின்றதே
 நேற்று  இன்று  என்று -ஏனோ
 நாளும்  எங்கோ  பறக்கின்றதே

 உன்னை  நினைத்து  இருந்தேன் -நீயோ
 உறவை  மதிக்க  வில்லை
 பெண்மை  குணம்  எதுவும் -அட நீ
 பெற்று   இருக்க   வில்லை

 வன்னில்  பறந்து  சென்றால் -வந்து
 வழியை  மறித்து  நிற்ப்பாய்
 தேனாய்  இருந்த  என்னை -நீதான்
 தீயாய்  மாற்றி  விட்டாய்

 கள்ளம்   கபடு  இன்றி -நானும்
 காலம்  கழித்து  விட்டேன்
 அல்லல்  படுத்த  உன்னை -இங்கு
 யாரோ  அனுப்பி வைத்தார்

  காலமெனும்   தேர்   அமர்ந்து -நானும்
 கனவு  உலகம்  செல்வேன்
 வாழ  வழி  வருமா -எனது
 வாழ்வு   சுகம் பெறுமா

 உலகம்  உள்ள  வரை -காதல்
 உணர்வு  நிலைத்து  நிற்கும்
 பழகும்  நினைவு  களிலே -எனது
 பாசம்   புரிந்து  விடும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக