வெள்ளி, 7 ஜூன், 2013

aruvi

வானோர்  நிலவில்
 வதனம்  கண்டேன்
 தேனார்  மொழியில்
 தீங்குரல் கேட்டேன்

 நானோ அறியேன்
 நல்லனயாவுமே
 ஏனோ  தெரியேன்
 இங்கே  பிறந்தேன்

 நூலோர் பொருளின்
நுணக்கும்  தெரியேன்
 சேலார்  விழியால்
 சிக்கி  தவித்தேன்

 தாயின்  நினைவு
 தலை மேல்  உண்டு
 வாயின் பெருமை
 வந்தால் புரியும்

 கனவா  நினைவு
 கானல் நீரோ
 புனலாய் பொழியும்
 பொங்கிடும் அருவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக