செவ்வாய், 18 ஜூன், 2013

avan iraivan

இறைவன்  இருக்கின்றான் -அவனை
 இல்லையென  சொல்லாதீர்
 உறவைக்  கொடுத்தானே -நமக்கு
 உள்ளம்  வைத்தானே

 காற்றில்  இருப்பானே -அவனே
 கடலில்  நீர்தானே
 ஆற்றின்  கரையோரம் -அவனே
 அழகாய்  திரிவானே

 என்னில்  இருப்பானே - அவனே
 ஏழு  சுரம்தானே
 உன்னில்  நுழைவானே -இந்த
 உண்மை  அறிவாயா

 பொன்னை  கொடுத்தானே -அவனும்
 புதுமை  வளரத்தானே
 பெண்ணில்  இருப்பானே -நீயே
 பின்பு   உணர்வாயா

 எங்கும்  இல்லையென -நீயும்
 இனியும்  சொல்வாயா
 பொங்கும்  கடலலைகள் -அவனை
 பூமிக்கு   காட்டாதா

 தமிழின்  உயர்வானான் -அவனே
 தமிழாய்  இருக்கின்றான்
 அமிழ்தின்  சுவைபோல -அவனும்
 அழகாய்   இனிக்கின்றான்

 கள்ளமிலா   குழந்தையிடம் -அந்த
 கடவுள்  வசிக்கின்றான்
 எண்ண  ஓட்டத்திலே  -நமது
 இறைவன்  இருக்கின்றான் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக