இறைவன் இருக்கின்றான் -அவனை
இல்லையென சொல்லாதீர்
உறவைக் கொடுத்தானே -நமக்கு
உள்ளம் வைத்தானே
காற்றில் இருப்பானே -அவனே
கடலில் நீர்தானே
ஆற்றின் கரையோரம் -அவனே
அழகாய் திரிவானே
என்னில் இருப்பானே - அவனே
ஏழு சுரம்தானே
உன்னில் நுழைவானே -இந்த
உண்மை அறிவாயா
பொன்னை கொடுத்தானே -அவனும்
புதுமை வளரத்தானே
பெண்ணில் இருப்பானே -நீயே
பின்பு உணர்வாயா
எங்கும் இல்லையென -நீயும்
இனியும் சொல்வாயா
பொங்கும் கடலலைகள் -அவனை
பூமிக்கு காட்டாதா
தமிழின் உயர்வானான் -அவனே
தமிழாய் இருக்கின்றான்
அமிழ்தின் சுவைபோல -அவனும்
அழகாய் இனிக்கின்றான்
கள்ளமிலா குழந்தையிடம் -அந்த
கடவுள் வசிக்கின்றான்
எண்ண ஓட்டத்திலே -நமது
இறைவன் இருக்கின்றான்
இல்லையென சொல்லாதீர்
உறவைக் கொடுத்தானே -நமக்கு
உள்ளம் வைத்தானே
காற்றில் இருப்பானே -அவனே
கடலில் நீர்தானே
ஆற்றின் கரையோரம் -அவனே
அழகாய் திரிவானே
என்னில் இருப்பானே - அவனே
ஏழு சுரம்தானே
உன்னில் நுழைவானே -இந்த
உண்மை அறிவாயா
பொன்னை கொடுத்தானே -அவனும்
புதுமை வளரத்தானே
பெண்ணில் இருப்பானே -நீயே
பின்பு உணர்வாயா
எங்கும் இல்லையென -நீயும்
இனியும் சொல்வாயா
பொங்கும் கடலலைகள் -அவனை
பூமிக்கு காட்டாதா
தமிழின் உயர்வானான் -அவனே
தமிழாய் இருக்கின்றான்
அமிழ்தின் சுவைபோல -அவனும்
அழகாய் இனிக்கின்றான்
கள்ளமிலா குழந்தையிடம் -அந்த
கடவுள் வசிக்கின்றான்
எண்ண ஓட்டத்திலே -நமது
இறைவன் இருக்கின்றான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக