செவ்வாய், 4 ஜூன், 2013

vannamayeilmm

வானத்து நிலவென  வந்து விட்டாள் -என்
 வாழ்வுக்கு அர்த்தம்  தந்து விட்டாள்
 கானத்து குயில்  அவள் குரலே -அவளை
காண்பவர் மனதில் எழும்  புயலே

 மோனத் தவம் களைந்து வந்தவளோ -தவ
 முனிவர் குடிசை  தன்னில் வளர்ந்தவளோ
 மானென துள்ளல்  அவள் நடையோ -நல்ல
 மலரினும் மெல்லியது பிடி இடையோ

 கார்மேகம் பழித்திடும்  அவள் கூந்தல் -இரு
 கருவிழி  காண்பவர் அதிர்கின்ற போர்முறைகள்
 தேர்  போல அசைந்ந்தாடும்  திருவழகு -நாம்
 தினம் தோறும்  சேவித்தால் சுகம் கூடும்

 மனைனாடி  வருகின்ற  மங்கள  பெண்ணோ -பிறர்
 மனதை அள்ளும்  மாயகலை  கற்றவளோ
 துணைதேடி  செல்லுதே  எனது இளவயது -தரையில்
 துடிக்கின்ற மீனாகி  போனேன்  இப்போது

 எதைசொல்லி  அவளிடம் நான் போவேன் -என்னிடம்
 இருப்பது கேட்டாலே உடன்  தருவேன்
 கதை ஆகி போய்  விடுமோ என்வாழ்வு -அந்த
 கண்ணன் துணை வேண்டினேன் என்காதலுக்கு

 வரந்தர வருவாளோ  வண்ண கிளி -அவள்
 வந்திடிலோ எந்தன் வாழ்வு வாசமலர்
 சுகம்பெற  திருநாளும் இனிமேல் வந்திடுமோ -இனிய
 சுரமேழும்  சேர்ந்த இசையாக தந்திடுமோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக