வானத்து நிலவென வந்து விட்டாள் -என்
வாழ்வுக்கு அர்த்தம் தந்து விட்டாள்
கானத்து குயில் அவள் குரலே -அவளை
காண்பவர் மனதில் எழும் புயலே
மோனத் தவம் களைந்து வந்தவளோ -தவ
முனிவர் குடிசை தன்னில் வளர்ந்தவளோ
மானென துள்ளல் அவள் நடையோ -நல்ல
மலரினும் மெல்லியது பிடி இடையோ
கார்மேகம் பழித்திடும் அவள் கூந்தல் -இரு
கருவிழி காண்பவர் அதிர்கின்ற போர்முறைகள்
தேர் போல அசைந்ந்தாடும் திருவழகு -நாம்
தினம் தோறும் சேவித்தால் சுகம் கூடும்
மனைனாடி வருகின்ற மங்கள பெண்ணோ -பிறர்
மனதை அள்ளும் மாயகலை கற்றவளோ
துணைதேடி செல்லுதே எனது இளவயது -தரையில்
துடிக்கின்ற மீனாகி போனேன் இப்போது
எதைசொல்லி அவளிடம் நான் போவேன் -என்னிடம்
இருப்பது கேட்டாலே உடன் தருவேன்
கதை ஆகி போய் விடுமோ என்வாழ்வு -அந்த
கண்ணன் துணை வேண்டினேன் என்காதலுக்கு
வரந்தர வருவாளோ வண்ண கிளி -அவள்
வந்திடிலோ எந்தன் வாழ்வு வாசமலர்
சுகம்பெற திருநாளும் இனிமேல் வந்திடுமோ -இனிய
சுரமேழும் சேர்ந்த இசையாக தந்திடுமோ
வாழ்வுக்கு அர்த்தம் தந்து விட்டாள்
கானத்து குயில் அவள் குரலே -அவளை
காண்பவர் மனதில் எழும் புயலே
மோனத் தவம் களைந்து வந்தவளோ -தவ
முனிவர் குடிசை தன்னில் வளர்ந்தவளோ
மானென துள்ளல் அவள் நடையோ -நல்ல
மலரினும் மெல்லியது பிடி இடையோ
கார்மேகம் பழித்திடும் அவள் கூந்தல் -இரு
கருவிழி காண்பவர் அதிர்கின்ற போர்முறைகள்
தேர் போல அசைந்ந்தாடும் திருவழகு -நாம்
தினம் தோறும் சேவித்தால் சுகம் கூடும்
மனைனாடி வருகின்ற மங்கள பெண்ணோ -பிறர்
மனதை அள்ளும் மாயகலை கற்றவளோ
துணைதேடி செல்லுதே எனது இளவயது -தரையில்
துடிக்கின்ற மீனாகி போனேன் இப்போது
எதைசொல்லி அவளிடம் நான் போவேன் -என்னிடம்
இருப்பது கேட்டாலே உடன் தருவேன்
கதை ஆகி போய் விடுமோ என்வாழ்வு -அந்த
கண்ணன் துணை வேண்டினேன் என்காதலுக்கு
வரந்தர வருவாளோ வண்ண கிளி -அவள்
வந்திடிலோ எந்தன் வாழ்வு வாசமலர்
சுகம்பெற திருநாளும் இனிமேல் வந்திடுமோ -இனிய
சுரமேழும் சேர்ந்த இசையாக தந்திடுமோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக