செவ்வாய், 11 ஜூன், 2013

palan

அலைகளின்  ஒலியும்  அருவியின்  இசையும் -காண
 அழகாய்  தெரியும்  நமக்கு  விருந்தாகும்
 கலைமிகு  சிலையும் கருங்கல்  உளியும் -ஒன்று
 கலந்திடில்  நாம் போற்றும்  நிலையாகும்

 இரவுக்குள்  பகலும்  பகலுக்குள்  இரவும் -இவை
 இரண்டுமே  கலந்தால்  நாள் தானே
 உறவுக்குள்  பகையும்  உடம்பினில்  உயிரும் -இந்த
 உலகம்  உள்ள  வரையில்  நிஜம் தானே


 என்னிலே  நீயும்  உன்னிலே  நானும்-என்றும்
 இரண்டற  கலப்பது  முறை  தானே
 கண்ணிலே  ஒளியும்  கருத்திலே  தெளிவும் -பலர்
 எண்ணியே  வாழ்ந்தால்  பெருவது  சுகம்தானே

 நீரிலே  நெருப்பும்  நெருப்பிலே  நீரும் -நம்
 நிலத்திலே  தோழமை  முறை யாமோ
வேரிலே  ஊறும்  வெற்றிகள்  யாவும் -பலர்
 வியர்வை  சிந்திய  பலன் ஆமோ

 மண்ணிலே  பிறந்தும்  மதத்தால்  மடிவார் -இங்கு
 மனதில்  கொள்ளும்  விதி  தானே
 பெண்ணில்  பிறந்தும்  பெருமை  மறந்து -சிலர்
 பேதையாய்  திரிதல்  சதி   தானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக