அலைகளின் ஒலியும் அருவியின் இசையும் -காண
அழகாய் தெரியும் நமக்கு விருந்தாகும்
கலைமிகு சிலையும் கருங்கல் உளியும் -ஒன்று
கலந்திடில் நாம் போற்றும் நிலையாகும்
இரவுக்குள் பகலும் பகலுக்குள் இரவும் -இவை
இரண்டுமே கலந்தால் நாள் தானே
உறவுக்குள் பகையும் உடம்பினில் உயிரும் -இந்த
உலகம் உள்ள வரையில் நிஜம் தானே
என்னிலே நீயும் உன்னிலே நானும்-என்றும்
இரண்டற கலப்பது முறை தானே
கண்ணிலே ஒளியும் கருத்திலே தெளிவும் -பலர்
எண்ணியே வாழ்ந்தால் பெருவது சுகம்தானே
நீரிலே நெருப்பும் நெருப்பிலே நீரும் -நம்
நிலத்திலே தோழமை முறை யாமோ
வேரிலே ஊறும் வெற்றிகள் யாவும் -பலர்
வியர்வை சிந்திய பலன் ஆமோ
மண்ணிலே பிறந்தும் மதத்தால் மடிவார் -இங்கு
மனதில் கொள்ளும் விதி தானே
பெண்ணில் பிறந்தும் பெருமை மறந்து -சிலர்
பேதையாய் திரிதல் சதி தானே
அழகாய் தெரியும் நமக்கு விருந்தாகும்
கலைமிகு சிலையும் கருங்கல் உளியும் -ஒன்று
கலந்திடில் நாம் போற்றும் நிலையாகும்
இரவுக்குள் பகலும் பகலுக்குள் இரவும் -இவை
இரண்டுமே கலந்தால் நாள் தானே
உறவுக்குள் பகையும் உடம்பினில் உயிரும் -இந்த
உலகம் உள்ள வரையில் நிஜம் தானே
என்னிலே நீயும் உன்னிலே நானும்-என்றும்
இரண்டற கலப்பது முறை தானே
கண்ணிலே ஒளியும் கருத்திலே தெளிவும் -பலர்
எண்ணியே வாழ்ந்தால் பெருவது சுகம்தானே
நீரிலே நெருப்பும் நெருப்பிலே நீரும் -நம்
நிலத்திலே தோழமை முறை யாமோ
வேரிலே ஊறும் வெற்றிகள் யாவும் -பலர்
வியர்வை சிந்திய பலன் ஆமோ
மண்ணிலே பிறந்தும் மதத்தால் மடிவார் -இங்கு
மனதில் கொள்ளும் விதி தானே
பெண்ணில் பிறந்தும் பெருமை மறந்து -சிலர்
பேதையாய் திரிதல் சதி தானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக