வியாழன், 20 ஜூன், 2013

iilayanilaa

பூவிரியும்  சோலை  யோரம் -எங்கும்
 பொன்னான  மாலை  நேரம்
 காவிரிக்  கரை  அருகில் -அங்கே
 காலாற    நான்  நடந்தேன்  

 பட்டென  விழுந்தன  மழைத்துளி -உடன்
 படபடவென  துடித்தது  கருவிழி
 சட்டென  திரும்பி  பார்க்கயிலே -அங்கு
 சாரைபோல  சடையுள்ள  பூவிழி

 ஈரெட்டு  வயதுள்ள  பெண்ணாலோ -அவளை
 எதிர்பட   கொல்கிற   கண்ணாலோ
 சிட்டென   பறக்கின்ற  கால்களோ -நம்
 சிரசினைக்  வெட்டிடும்  வேல்களோ

 காரிருள்  தோற்றிடும்  கரியமுடி -அவள்
 காலடி  தொழுதிட  மனமயங்கும்
 சீறிதழ்   மாதுளை  நிறமாகும் -வாய்
 சிரிக்கையில்  முத்துக்கள்  உருண்டோடும்

 சிற்பி  வடித்த பொற்சிலையோ -அந்த
 சீதள   பொன்மேனி  எழிற்குலையோ
 அற்புத   அழகுடை  ஆரணங்கு -தினம்
 அழகினை  ஆயிரமுறை  நீ வணங்கு

 பூமிக்கு  வந்திட்ட  இளையநிலா -அது
 புறப்பட்டு  வந்தது  தனிமையிலா
 காணிக்கை  தந்திட ஈதுமில்லை --நான்
 கண்டது  கற்பனை   வேறில்லை

 கற்பனையில்  கவிதை  சொன்னேன் -மன
 கலக்கத்தை  வார்த்தையில் வடித்துவிட்டேன்
 நிச்சயம்  ஒருநாள்  வந்திடுவாள் -எனக்கு
 நிம்மதி  என்பதை  தந்திடுவாள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக