பூவிரியும் சோலை யோரம் -எங்கும்
பொன்னான மாலை நேரம்
காவிரிக் கரை அருகில் -அங்கே
காலாற நான் நடந்தேன்
பட்டென விழுந்தன மழைத்துளி -உடன்
படபடவென துடித்தது கருவிழி
சட்டென திரும்பி பார்க்கயிலே -அங்கு
சாரைபோல சடையுள்ள பூவிழி
ஈரெட்டு வயதுள்ள பெண்ணாலோ -அவளை
எதிர்பட கொல்கிற கண்ணாலோ
சிட்டென பறக்கின்ற கால்களோ -நம்
சிரசினைக் வெட்டிடும் வேல்களோ
காரிருள் தோற்றிடும் கரியமுடி -அவள்
காலடி தொழுதிட மனமயங்கும்
சீறிதழ் மாதுளை நிறமாகும் -வாய்
சிரிக்கையில் முத்துக்கள் உருண்டோடும்
சிற்பி வடித்த பொற்சிலையோ -அந்த
சீதள பொன்மேனி எழிற்குலையோ
அற்புத அழகுடை ஆரணங்கு -தினம்
அழகினை ஆயிரமுறை நீ வணங்கு
பூமிக்கு வந்திட்ட இளையநிலா -அது
புறப்பட்டு வந்தது தனிமையிலா
காணிக்கை தந்திட ஈதுமில்லை --நான்
கண்டது கற்பனை வேறில்லை
கற்பனையில் கவிதை சொன்னேன் -மன
கலக்கத்தை வார்த்தையில் வடித்துவிட்டேன்
நிச்சயம் ஒருநாள் வந்திடுவாள் -எனக்கு
நிம்மதி என்பதை தந்திடுவாள்
பொன்னான மாலை நேரம்
காவிரிக் கரை அருகில் -அங்கே
காலாற நான் நடந்தேன்
பட்டென விழுந்தன மழைத்துளி -உடன்
படபடவென துடித்தது கருவிழி
சட்டென திரும்பி பார்க்கயிலே -அங்கு
சாரைபோல சடையுள்ள பூவிழி
ஈரெட்டு வயதுள்ள பெண்ணாலோ -அவளை
எதிர்பட கொல்கிற கண்ணாலோ
சிட்டென பறக்கின்ற கால்களோ -நம்
சிரசினைக் வெட்டிடும் வேல்களோ
காரிருள் தோற்றிடும் கரியமுடி -அவள்
காலடி தொழுதிட மனமயங்கும்
சீறிதழ் மாதுளை நிறமாகும் -வாய்
சிரிக்கையில் முத்துக்கள் உருண்டோடும்
சிற்பி வடித்த பொற்சிலையோ -அந்த
சீதள பொன்மேனி எழிற்குலையோ
அற்புத அழகுடை ஆரணங்கு -தினம்
அழகினை ஆயிரமுறை நீ வணங்கு
பூமிக்கு வந்திட்ட இளையநிலா -அது
புறப்பட்டு வந்தது தனிமையிலா
காணிக்கை தந்திட ஈதுமில்லை --நான்
கண்டது கற்பனை வேறில்லை
கற்பனையில் கவிதை சொன்னேன் -மன
கலக்கத்தை வார்த்தையில் வடித்துவிட்டேன்
நிச்சயம் ஒருநாள் வந்திடுவாள் -எனக்கு
நிம்மதி என்பதை தந்திடுவாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக