திருமலை தனில் வாழும் ஸ்ரீனிவாசா -உனது
திருவடி வணங்கினோம் துணை நேசா
பெருமாளே உனது அருள் லீலை -இந்த
பிரபந்தம் காண்கின்ற அருட் சோலை
காத்திடும் கடவுள் நீ அல்லவா -கொடிய
கம்சனை வதம் செய்த சேய் அல்லவா
பார்ர்தனாய் பாரத போர் தன்னிலே -உனது
பங்கினை செய்த எங்கள் பரந்தாமா
கோபியர் கொஞ்சிடும் எழில் கோபாலன் -வரும்
கொடுமையை வதம் செய்யும் குணசீலன்
பாவியர் உன்சேவடி பற்றி வீழ்ந்தாலே -அவர்
பதம் பெற இதமருள் துணை புரிவாயே
கீதைக்கு பொருள் சொன்ன கேசவன் நீ -எங்கும்
கிடைத்திடும் வெண்ணெய் திருடனும் நீ
சீதையை மனம் செய்த ஜெகன்நாதா -இந்த
ஜெகத்தோர் நலம் பெற வருவாய் நீ
மாலெனும் பெயர் கொண்ட திருமாலே -நீ
மண்ணகம் வருதல் எங்கும் திருநாளே
செலேனும் திருமகள் உந்தன்மார்பினிலிருக்க -காணும்
சிந்தையில் மகிழ்ச்சி பொங்கி நிலைத்திருக்கும்
ஆதி அந்தம் இல்லாத அளகேசா -என்றும்
ஆழ்யில் துயில் கொள்ளும் எழில் நேசா
ஜோதிப் பேரொளி சுடர் விளக்கே -உன்னை
தொழுதேன் எல்லாம் உந்தன் திருவருளே
திருவடி வணங்கினோம் துணை நேசா
பெருமாளே உனது அருள் லீலை -இந்த
பிரபந்தம் காண்கின்ற அருட் சோலை
காத்திடும் கடவுள் நீ அல்லவா -கொடிய
கம்சனை வதம் செய்த சேய் அல்லவா
பார்ர்தனாய் பாரத போர் தன்னிலே -உனது
பங்கினை செய்த எங்கள் பரந்தாமா
கோபியர் கொஞ்சிடும் எழில் கோபாலன் -வரும்
கொடுமையை வதம் செய்யும் குணசீலன்
பாவியர் உன்சேவடி பற்றி வீழ்ந்தாலே -அவர்
பதம் பெற இதமருள் துணை புரிவாயே
கீதைக்கு பொருள் சொன்ன கேசவன் நீ -எங்கும்
கிடைத்திடும் வெண்ணெய் திருடனும் நீ
சீதையை மனம் செய்த ஜெகன்நாதா -இந்த
ஜெகத்தோர் நலம் பெற வருவாய் நீ
மாலெனும் பெயர் கொண்ட திருமாலே -நீ
மண்ணகம் வருதல் எங்கும் திருநாளே
செலேனும் திருமகள் உந்தன்மார்பினிலிருக்க -காணும்
சிந்தையில் மகிழ்ச்சி பொங்கி நிலைத்திருக்கும்
ஆதி அந்தம் இல்லாத அளகேசா -என்றும்
ஆழ்யில் துயில் கொள்ளும் எழில் நேசா
ஜோதிப் பேரொளி சுடர் விளக்கே -உன்னை
தொழுதேன் எல்லாம் உந்தன் திருவருளே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக