ஞாயிறு, 9 ஜூன், 2013

thiru varul

திருமலை  தனில் வாழும்  ஸ்ரீனிவாசா -உனது
 திருவடி  வணங்கினோம்  துணை நேசா
 பெருமாளே  உனது  அருள்  லீலை -இந்த
 பிரபந்தம் காண்கின்ற  அருட்  சோலை

 காத்திடும்  கடவுள்  நீ அல்லவா -கொடிய
 கம்சனை  வதம்  செய்த  சேய்  அல்லவா
பார்ர்தனாய்  பாரத  போர்  தன்னிலே -உனது
 பங்கினை  செய்த  எங்கள்  பரந்தாமா


 கோபியர்  கொஞ்சிடும்  எழில்  கோபாலன் -வரும்
 கொடுமையை  வதம்  செய்யும்  குணசீலன்
 பாவியர்  உன்சேவடி  பற்றி வீழ்ந்தாலே -அவர்
 பதம் பெற இதமருள்  துணை புரிவாயே

 கீதைக்கு  பொருள் சொன்ன  கேசவன் நீ -எங்கும்
 கிடைத்திடும்  வெண்ணெய்  திருடனும்  நீ
 சீதையை  மனம் செய்த  ஜெகன்நாதா -இந்த
 ஜெகத்தோர்  நலம் பெற  வருவாய்  நீ    

 மாலெனும் பெயர்  கொண்ட  திருமாலே -நீ
 மண்ணகம் வருதல்  எங்கும் திருநாளே
 செலேனும்  திருமகள்  உந்தன்மார்பினிலிருக்க -காணும்
 சிந்தையில்  மகிழ்ச்சி  பொங்கி  நிலைத்திருக்கும்

 ஆதி  அந்தம் இல்லாத  அளகேசா -என்றும்
 ஆழ்யில் துயில்  கொள்ளும் எழில் நேசா
 ஜோதிப்  பேரொளி   சுடர்  விளக்கே -உன்னை
 தொழுதேன் எல்லாம்  உந்தன்  திருவருளே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக