சனி, 8 ஜூன், 2013

sathiya jothi

ஆதி அந்தம்  இல்லா  ஜோதி -நல
 அன்பால் தருவான் அனைவர்க்கும் நீதி
 ஓதி உணர்ந்தவர் உரைத்திட்ட சொல்லே -இந்த
 உலகில்  நடப்பது  அவனது செயலே

 கண்கள்  காண ஒளியை  கொடுத்தான் -கொடிய
 கயவர்  தம்மின்  உயிரை  எடுத்தான்
 பெண்கள்  வாழ  பெருமை  படைத்தான் -கற்ற
 பெரியோர்  போற்றும்  பெரும்புகழ்  பெற்றான்

 எங்கும் எதிலும்  இளமை அளித்தான் -நமக்கு
 ஏற்ற  தாழ்வு  இரண்டும்  அமைத்தான்
 பொங்கும் கடலில்  ஓசை வைத்தான் இந்த
 பூமி  நிறைய பொன்னும்  ஈந்தான்


 பெண்ணும்  ஆணும்  பிறக்க வைத்தான் -அவர்
 பிறரது  பொருளை  வெறுக்க செய்தான்
 மண்ணும் வாழ   நல்மழையை  கொடுத்தான் -நம்
 மானம் காக்க   வீரம்  கொடுத்தான்

 இத்தனை தந்திட்ட  இறைவன் தன்னையே -தினம்
 இரவு  பகலும்  தொழுது  வாழ்வோம்
 உத்தம  நெறி  வழி சென்றிடுவோம் -என்றும்
 ஒன்றே குலமென உறுதி  கொள்வோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக