ஆதி அந்தம் இல்லா ஜோதி -நல
அன்பால் தருவான் அனைவர்க்கும் நீதி
ஓதி உணர்ந்தவர் உரைத்திட்ட சொல்லே -இந்த
உலகில் நடப்பது அவனது செயலே
கண்கள் காண ஒளியை கொடுத்தான் -கொடிய
கயவர் தம்மின் உயிரை எடுத்தான்
பெண்கள் வாழ பெருமை படைத்தான் -கற்ற
பெரியோர் போற்றும் பெரும்புகழ் பெற்றான்
எங்கும் எதிலும் இளமை அளித்தான் -நமக்கு
ஏற்ற தாழ்வு இரண்டும் அமைத்தான்
பொங்கும் கடலில் ஓசை வைத்தான் இந்த
பூமி நிறைய பொன்னும் ஈந்தான்
பெண்ணும் ஆணும் பிறக்க வைத்தான் -அவர்
பிறரது பொருளை வெறுக்க செய்தான்
மண்ணும் வாழ நல்மழையை கொடுத்தான் -நம்
மானம் காக்க வீரம் கொடுத்தான்
இத்தனை தந்திட்ட இறைவன் தன்னையே -தினம்
இரவு பகலும் தொழுது வாழ்வோம்
உத்தம நெறி வழி சென்றிடுவோம் -என்றும்
ஒன்றே குலமென உறுதி கொள்வோம்
அன்பால் தருவான் அனைவர்க்கும் நீதி
ஓதி உணர்ந்தவர் உரைத்திட்ட சொல்லே -இந்த
உலகில் நடப்பது அவனது செயலே
கண்கள் காண ஒளியை கொடுத்தான் -கொடிய
கயவர் தம்மின் உயிரை எடுத்தான்
பெண்கள் வாழ பெருமை படைத்தான் -கற்ற
பெரியோர் போற்றும் பெரும்புகழ் பெற்றான்
எங்கும் எதிலும் இளமை அளித்தான் -நமக்கு
ஏற்ற தாழ்வு இரண்டும் அமைத்தான்
பொங்கும் கடலில் ஓசை வைத்தான் இந்த
பூமி நிறைய பொன்னும் ஈந்தான்
பெண்ணும் ஆணும் பிறக்க வைத்தான் -அவர்
பிறரது பொருளை வெறுக்க செய்தான்
மண்ணும் வாழ நல்மழையை கொடுத்தான் -நம்
மானம் காக்க வீரம் கொடுத்தான்
இத்தனை தந்திட்ட இறைவன் தன்னையே -தினம்
இரவு பகலும் தொழுது வாழ்வோம்
உத்தம நெறி வழி சென்றிடுவோம் -என்றும்
ஒன்றே குலமென உறுதி கொள்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக