நானென இருந்தேன்
நீயே வந்தாய்
தேனினும் நினைவில்
திருவிழா கண்டோம்
இரவுப் பொழுதில்
எழுதினோம் கவிதை
இமைகள் மூடினால்
இயங்குமோ மன நிலை
அலைகள் நடுவில்
ஆடிடும் படகு
ஆயிரம் கலைகள்
அனுதினம் பழகு
கண்ணில் தெரிவது
காந்தக் கனலோ
உன்னில் விளைவது
உயர்ந்த பொருளோ
நாளும் பொழுதும்
நமக்கினி இல்லை
நல்லவர் ஆசி
நாம் பெறும் போது
இருமனம் ஒன்றென
இணைந்திட வேண்டும்
இறவாப் புகழை
இனி பெற வேண்டும்
நீயே வந்தாய்
தேனினும் நினைவில்
திருவிழா கண்டோம்
இரவுப் பொழுதில்
எழுதினோம் கவிதை
இமைகள் மூடினால்
இயங்குமோ மன நிலை
அலைகள் நடுவில்
ஆடிடும் படகு
ஆயிரம் கலைகள்
அனுதினம் பழகு
கண்ணில் தெரிவது
காந்தக் கனலோ
உன்னில் விளைவது
உயர்ந்த பொருளோ
நாளும் பொழுதும்
நமக்கினி இல்லை
நல்லவர் ஆசி
நாம் பெறும் போது
இருமனம் ஒன்றென
இணைந்திட வேண்டும்
இறவாப் புகழை
இனி பெற வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக