வியாழன், 6 ஜூன், 2013

nallaasi

நானென  இருந்தேன்
 நீயே  வந்தாய்
 தேனினும்  நினைவில்
 திருவிழா கண்டோம்

 இரவுப்   பொழுதில்
 எழுதினோம்  கவிதை
 இமைகள்  மூடினால்
 இயங்குமோ  மன நிலை

 அலைகள்  நடுவில்
 ஆடிடும்  படகு
 ஆயிரம் கலைகள்
 அனுதினம்  பழகு

 கண்ணில்  தெரிவது
 காந்தக் கனலோ
 உன்னில்  விளைவது  
 உயர்ந்த  பொருளோ

 நாளும்  பொழுதும்  
 நமக்கினி   இல்லை
 நல்லவர்  ஆசி
 நாம் பெறும்  போது

 இருமனம் ஒன்றென
 இணைந்திட  வேண்டும்
 இறவாப்  புகழை
 இனி பெற வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக