செவ்வாய், 4 ஜூன், 2013

maalavan

மலை மீதில்  வாசம்  செய்யும் மாலவா-உனை 
 மனதார  தினம்  வேண்டி  நான் பாடவா 
 அலை ஆடும்  கடல் கூட  கவி  பாடுமே -தமிழ் 
 அறிந்தோர்  திரு நாவில்  உரை  தெய்வமே 
 
 ஆழ்வார்கள் உன்னை  பாடிய  திருப்பாசுரம் -என் 
 அழகா  உன்பெயர்  கூறும் பூச்சரம் 
 அமிழ்தினை  பொழிகின்ற  உனது நேத்திரம் -நெஞ்சில் 
 அணையாத ஜோதியாய்  ஒளி  வீசுமே 
 
 திருமகள்  உன்மார்பில்  குடி  ஏறினாள் -உன்னை 
 தினந்தோறும்  சேவிக்க  படி  ஏறுவார் 
 பெருமாளே  எமை  காக்க வரவேண்டுமே -திவ்ய 
 பிரபந்தம்  பொருள்  கூறும் திரு நாமமே 
 
 திருப்பங்கள்  பலர்  வாழ்வில் தினம்தோறுமே -அவர் 
 திருமலை சென்றதால்  பலன்  கூடுமே 
 கருவுறை  சிறு சேய்க்கும் அருள் செய்குவாய் -மாய 
 கண்ணனாகி  கோபியரோடு அந்நாளில் விளையாடினாய் 
 
 மங்கை திரெளபதை  மானம் காத்தவன் -தன்னை 
 மனதார நினைபோரின்  துயர்  தீர்த்தவன் 
சங்கு  ஒலித்து  பாரத  போர்  முடித்தவன் -நல்ல 
 சமத்துவத்தை  வாழ்வினிலே கொண்டு சேர்த்தவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக