மலை மீதில் வாசம் செய்யும் மாலவா-உனை
மனதார தினம் வேண்டி நான் பாடவா
அலை ஆடும் கடல் கூட கவி பாடுமே -தமிழ்
அறிந்தோர் திரு நாவில் உரை தெய்வமே
ஆழ்வார்கள் உன்னை பாடிய திருப்பாசுரம் -என்
அழகா உன்பெயர் கூறும் பூச்சரம்
அமிழ்தினை பொழிகின்ற உனது நேத்திரம் -நெஞ்சில்
அணையாத ஜோதியாய் ஒளி வீசுமே
திருமகள் உன்மார்பில் குடி ஏறினாள் -உன்னை
தினந்தோறும் சேவிக்க படி ஏறுவார்
பெருமாளே எமை காக்க வரவேண்டுமே -திவ்ய
பிரபந்தம் பொருள் கூறும் திரு நாமமே
திருப்பங்கள் பலர் வாழ்வில் தினம்தோறுமே -அவர்
திருமலை சென்றதால் பலன் கூடுமே
கருவுறை சிறு சேய்க்கும் அருள் செய்குவாய் -மாய
கண்ணனாகி கோபியரோடு அந்நாளில் விளையாடினாய்
மங்கை திரெளபதை மானம் காத்தவன் -தன்னை
மனதார நினைபோரின் துயர் தீர்த்தவன்
சங்கு ஒலித்து பாரத போர் முடித்தவன் -நல்ல
சமத்துவத்தை வாழ்வினிலே கொண்டு சேர்த்தவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக