ஞாயிறு, 2 ஜூன், 2013

karunai

இரவில்  வரும்  காற்று -உனக்கு
 என்ன  சொல்லி  வீசும்
 உறவு பெரிது  என்னும் -நல்ல
 உண்மை  புரிநபேசும்

 காற்றில்  மலர்ந்த  மலர்கள் -நமது
 கண்ணில் தெரிவது  என்ன
போற்றும்  தூய  இறைவன் -இந்த
 பூமிக்கு  அளித்த  கொடைதான்

 நேற்று  இன்று  நாளை -எனும்
 நியதி  சொல்லும்  சேதி
 உண்மை  அன்பு உழைப்பு -மண்ணில்
 உயர்வு  காட்டும் நீதி

 இரவு பகலின்  சுழற்சி -அது
 இனிமை கூட்டும் கிளர்ச்சி
 பறவை  கூவும் ஒலியோ -இங்கு
 பருவ  கால மலர்ச்சி

 தாயின்  பெருமை  சொல்ல -நம்
 தமிழில்  வார்த்தை  உண்டோ
 சேயின்  மழலை  சிரிப்பில் -இந்த
 ஜெகமே  மயங்கும்  போது

 நெஞ்சில்  கருணை  வேண்டும் -அது
 நேர்மை   வழியை  காட்டும்
 நஞ்சு  எண்ணம்  கொண்டால் -நாளும்
 வெற்றி  பெறுதல்  இல்லை

 இயன்ற  வரையில்  சொன்னேன் -இனி
 எதுவும்  வந்தால்  சொல்வேன்
 முயன்று நாமும் உழைத்தால் -உலகில்
 முடியாதது  எதுவும்  உண்டோ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக