வெள்ளி, 31 மே, 2013

sollammaa

நிலவை வானம்  வெறுக்குமா நம்
 நேசம் பகையை வெல்லுமா
 உறவு சோகம்  கொடுக்குமா -நீ
 உண்மை  தன்னை சொல்லம்மா

 கண்கள்  காட்சி  மறக்குமா -நல
 கவிதை துன்பம் அளிக்குமா
 பெண்கள் அன்பு  நிலைக்குமா -இந்த
 பெருமை அறிந்து சொல்லம்மா

 மண்ணில்  நீரும் கலக்குமா -இள
 மனதில்  ஆசை வளருமா
 எண்ணில்  எழுத்து  அடங்குமா -உன்
 இதயம் ஈரம்  சுரக்குமா

 காலம்  கடிது  ஓடுமா -வீசும்
 காற்றில் வாசம் தெரியுமா
 நேற்று  நாளை  ஆகுமா -உலக
 நியதி உணர்ந்து  சொல்லம்மா

 கரும்பு கசந்து போகுமா -இங்கே
 காதல்  கனவில் கூடுமா
 இரும்பு இளகி ஓடுமா -எனது
 இனிய தோழி சொல்லம்மா

 கேள்வி பதிலாய்  ஆகுமா -பச்சை
 கிளிகள் பாடம் புரியுமா
 நாடும் நடப்பும் தெரியுமா -எனக்கு
 நல்ல பதிலை கூறம்மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக