சனி, 25 மே, 2013

Kalam

நிலவில்   மனிதன்  நடந்தான்  - அவன்
நெஞ்சில்  கனவை  வளர்த்தான்
கடலில் முத்தை எடுத்தான்  - ஏனோ
கருணை  என்பதை  விடுத்தான்

பொன்னை பொருளை  நினைத்தான் - தினம்
போதை தன்னில்  திளைத்தான்
தன்னை  தானே  வளர்த்தான் -  என்றும்
தர்மம் என்பதை தொலைத்தான்

நீரும் நிலமும் சொந்தம் -என்ற
 நினைப்பில் பிறரை வதைத்தான்
ஊரில் பகமை  விதைத்தான்  -இருந்த
உறவை  வீணில் பறித்தான்

இறைவன்   படைத்த  உலகம் -இதில்
எங்கும் தினமும் கலகம் -
குறைகள்  களைதல் நன்று -எனும்
கொள்கை பெறுதல் என்று
 
வாழும் காலம் கொஞ்சம் -நீ
வந்ததில் என்னடா மிஞ்சும்
 பாழும் ஆசை கொடிது -இனி
பார்த்து தெளிந்திடல்  இனிது

நாலும் தெரிந்து நடப்பாய் -அதனை
நல்லது என்றே  கொள்வாய்
வேலுமஅருளும் துணையே  -இந்த
விவரம் அறிவது நலமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக