நிலவில் மனிதன் நடந்தான் - அவன்
நெஞ்சில் கனவை வளர்த்தான்
கடலில் முத்தை எடுத்தான் - ஏனோ
கருணை என்பதை விடுத்தான்
பொன்னை பொருளை நினைத்தான் - தினம்
போதை தன்னில் திளைத்தான்
தன்னை தானே வளர்த்தான் - என்றும்
தர்மம் என்பதை தொலைத்தான்
நீரும் நிலமும் சொந்தம் -என்ற
நினைப்பில் பிறரை வதைத்தான்
ஊரில் பகமை விதைத்தான் -இருந்த
உறவை வீணில் பறித்தான்
இறைவன் படைத்த உலகம் -இதில்
எங்கும் தினமும் கலகம் -
குறைகள் களைதல் நன்று -எனும்
கொள்கை பெறுதல் என்று
வாழும் காலம் கொஞ்சம் -நீ
வந்ததில் என்னடா மிஞ்சும்
பாழும் ஆசை கொடிது -இனி
பார்த்து தெளிந்திடல் இனிது
நாலும் தெரிந்து நடப்பாய் -அதனை
நல்லது என்றே கொள்வாய்
வேலுமஅருளும் துணையே -இந்த
விவரம் அறிவது நலமே
நெஞ்சில் கனவை வளர்த்தான்
கடலில் முத்தை எடுத்தான் - ஏனோ
கருணை என்பதை விடுத்தான்
பொன்னை பொருளை நினைத்தான் - தினம்
போதை தன்னில் திளைத்தான்
தன்னை தானே வளர்த்தான் - என்றும்
தர்மம் என்பதை தொலைத்தான்
நீரும் நிலமும் சொந்தம் -என்ற
நினைப்பில் பிறரை வதைத்தான்
ஊரில் பகமை விதைத்தான் -இருந்த
உறவை வீணில் பறித்தான்
இறைவன் படைத்த உலகம் -இதில்
எங்கும் தினமும் கலகம் -
குறைகள் களைதல் நன்று -எனும்
கொள்கை பெறுதல் என்று
வாழும் காலம் கொஞ்சம் -நீ
வந்ததில் என்னடா மிஞ்சும்
பாழும் ஆசை கொடிது -இனி
பார்த்து தெளிந்திடல் இனிது
நாலும் தெரிந்து நடப்பாய் -அதனை
நல்லது என்றே கொள்வாய்
வேலுமஅருளும் துணையே -இந்த
விவரம் அறிவது நலமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக