பெண்னே உலகம் என்றார-அதன்
பெருமைகள் பலவும் சொன்னார்
கண்ணே மணியே அழைத்தார் -அவரே
கழுத்தினை அறுத்திட துணிந்தார்
உள்ளவை யாவும் ஒன்று -இதனை
உணர்ந்ந்து நடந்திடில் நன்று
வயலின் நடுவில் களை போல் -சில
பதர்கள் உலகில் உண்டு
குடித்து போடுவார் கும்மாளம் -அவர்
குடும்பம் பெறுவது அலங்கோலம் -
படித்து இடித்து சொன்னாலும் -அதனை
பற்றி நடப்பவர் யாருமில்லை
கோவில் தினமும் சென்றிடுவார்-அங்கே
குடும்ப பெருமைதனை உரைப்பார்
நோயில் வீழ்ந்து முடியுமுன் -தினம்
நூறு பெண்கள் தனை கெடுப்பார்
தாயின் வயிற்றில் பிறந்தாலும் -இங்கு
தத்துவ நெறிகள் கேட்டாலும்
பாயும் புலி குணமிருக்கும் -அந்த
பாவி மனதில் சூதிருக்கும்
ஊரை அடித்து உடல் வளர்க்கும் -நல்ல
உறவை பகையாய் மாற்றிவிடும்
பாறை போன்ற மனமிருக்கும் -முடிவில்
பஞ்சென காற்றில் பறந்துவிடும்
பெருமைகள் பலவும் சொன்னார்
கண்ணே மணியே அழைத்தார் -அவரே
கழுத்தினை அறுத்திட துணிந்தார்
உள்ளவை யாவும் ஒன்று -இதனை
உணர்ந்ந்து நடந்திடில் நன்று
வயலின் நடுவில் களை போல் -சில
பதர்கள் உலகில் உண்டு
குடித்து போடுவார் கும்மாளம் -அவர்
குடும்பம் பெறுவது அலங்கோலம் -
படித்து இடித்து சொன்னாலும் -அதனை
பற்றி நடப்பவர் யாருமில்லை
கோவில் தினமும் சென்றிடுவார்-அங்கே
குடும்ப பெருமைதனை உரைப்பார்
நோயில் வீழ்ந்து முடியுமுன் -தினம்
நூறு பெண்கள் தனை கெடுப்பார்
தாயின் வயிற்றில் பிறந்தாலும் -இங்கு
தத்துவ நெறிகள் கேட்டாலும்
பாயும் புலி குணமிருக்கும் -அந்த
பாவி மனதில் சூதிருக்கும்
ஊரை அடித்து உடல் வளர்க்கும் -நல்ல
உறவை பகையாய் மாற்றிவிடும்
பாறை போன்ற மனமிருக்கும் -முடிவில்
பஞ்சென காற்றில் பறந்துவிடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக