வியாழன், 30 மே, 2013

velan

உள்ளம்  எல்லை மீறுதே -ஏனோ
 உண்மை அன்பை தேடுதே
 கள்ள  மில்லா காதலில்-என்
 கண்கள்  மழை யானதே

 இரவில்  தூக்கம் போனதே -இன்னும்
 இதய ம்  அவனை நாடுதே
 கரை  கடந்த வெள்ளமாய் -அவன்
 காவல்  தேடி  ஓடுதே

 எண்ண   அலைகள் மோதுதே -எனது
 இளமை வேகம் கூடுதே
 அன்னம் வெறுப்பு ஆனதே -கொண்ட
 ஆசை என்னை கொல்லுதே

 தாகம்  கூடி  போனதே -நெஞ்சில்
 தவிப்பு  அதிகம்  ஆனதே
 மோகம்  தரும்  போதையால் -முழு
 நிலவும்  தீயாய்  சுடுதே

 இரவு பகலும்  ஒன்றுதான் -அவனுடன்
இணைந்து  வாழ்தல்  என்றுதான்
 சிறகிழந்த பறவை  போல -நான்
 சிக்கி  தவிப்பதும் உண்மைதான்

 காலம் கொஞ்சம்  போகலாம் -உண்மை
 காதல்  என்றும் வாழலாம்
 வேலன்  கருணை கூடினால் -நான்
 வெற்றி  பெறுவேன் நிச்சயம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக