எழிலார் சோலை - நான்
இருக்கும் மாலை
புயலாய் புகுந்தாள் - ஒரு
பூவை இள மாது
விழிநீர் அருவி - வந்த
விவரம் கருதி
ஏதோ கேட்டேன் - ஆனால்
ஏதும் பதிலில்லை
காலால் கோலம் - இரு
கண்ணில் தாபம்
வேலாய் என் மனதில் - அந்த
விழியாள் நுழைந்தாள்
எண்ணப் பறவை - நான்
எங்கோ பறக்க
கண்ணில் உலகம் - எனக்கு
கடுகாய் தெரியும்
நானும் அவளும் - தினம்
நலமாய் பழக
தேனும் பாலும் - நன்கு
சேர்வது போலானோம்
முவாறு வயது - அவள்
மோகமாய் மனது
பாலாறு ஓட - என்
பாவை இனித்தாள்
கண்ணால் சிரித்தாள் - புது
காதல் படித்தாள்
பொன்னாய் தெரிந்தாள்
புலனில் கலந்தாள்
ஒன்றாய் திரிந்தோம் - இனிய
உறவில் மலர்ந்தோம்
என்றும் இது நிஜமே - என்றே
நான் நினைத்தேன்
நதிநீர் நடுவே - இரவில்
நானும் அவளும்
படகில் பயணம் - மனம்
பாகாய் உருகும்
திரும்பி படுத்தேன் - நான்
திகைப்பால் விழித்தேன்
கரும்பான என்காதல் - கண்ட
கனவென்று எழுந்தேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக