சனி, 25 மே, 2013

Nalam



எதற்கு என்னைப் படைதாய்
என்னை எனக்கு தெரியல்லே
இந்த வாழ்வை எனக்கு
எப்படி கொடுத்தாய் புரியல்லே
புரியல்லே தெரியல்லே புதிரில்லே

தாயின் வயிற்றில் பிறந்தேன் - அந்த
தமிழின் தயவில் வளர்ந்தேன்
பாயும் புலியாய் திரிந்தேன் - உனது
பாத மலர்களில் கலப்பேன்

நிலவில் மனிதன் இறங்கி
நிலத்தை அளந்தான் அன்று
உலகில் மனிதர் எல்லாம்
உயர்ந்ததை பெறுதல் என்று

நீரும் நிலமும் உனது
நினைத்து பார்க்குது மனது
போரில் அமைதி ஏது
பொருமை என்றுமே பெரிது

தெளிந்த மனது வேண்டும்
விரிந்த பார்வை வேண்டும்
அறிந்த விஷயம் சொன்னேன்
அம்மா நீதான் வேண்டும்

கள்ளம் இல்லா உள்ளம் - உனது
கடவுள் வாழும் இல்லம்
பிள்ளைத் தமிழில் நமக்கு
பெரும்புழவர் ஒருவர் சொன்னார்

வெள்ளை போலவே மனது - உலகில்
விரிந்து கிடக்கும் அழகு
கொள்ளை புதையல் அனைத்தும்
கொடுதான் இறைவன் உயிர்க்கு

இதனை நினைத்தவர் உண்டோ
எதிலோ கவனம் கொண்டார்
உதவி செய்ததை நினைத்தால்
உயர்ந்த நிலைகள் வருமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக