திங்கள், 27 மே, 2013

Thaai

வானம்  தொழிலை மறந்தது  அதனால்
 வறுமை மண்ணில் வந்த்து
 கானில் பசுமை குறைந்தது -எங்கும்
 காற்றில் மாசு  நிறைந்தது

 நெஞ்சில் கருணை பறந்தது -உலகில்
 நேர்மை  என்பது போனது
 அஞ்சும்  நிலைமை ஆனது -அதற்கு
 யாரை  குறைகள் சொல்வது

 தாயை மறந்து  போனதால் -நம்
 தர்மம்  கற்பனை யானது
 நோயின்  வரவு பெருத்தது -இங்கு
 நுண்கலை செல்வம் அழிந்தது

 இறைவன் என்பதே  மறந்தது -பிறரை
 ஏய்க்கும்  எண்ணம்  வளர்ந்தது
 கரையை கடலும் கடந்தது -இங்கு
 கல்வி சுயநலம்  ஆனது

 பொய்யே புதுமை  ஆனது -நம்
 பூமியில் துயர்கள் மலிந்தது
 பெய்யும் மழையோ பொய்த்தது -ஆனால்
 பெருமாள் கருணையே நிலைத்தது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக