வானம் தொழிலை மறந்தது அதனால்
வறுமை மண்ணில் வந்த்து
கானில் பசுமை குறைந்தது -எங்கும்
காற்றில் மாசு நிறைந்தது
நெஞ்சில் கருணை பறந்தது -உலகில்
நேர்மை என்பது போனது
அஞ்சும் நிலைமை ஆனது -அதற்கு
யாரை குறைகள் சொல்வது
தாயை மறந்து போனதால் -நம்
தர்மம் கற்பனை யானது
நோயின் வரவு பெருத்தது -இங்கு
நுண்கலை செல்வம் அழிந்தது
இறைவன் என்பதே மறந்தது -பிறரை
ஏய்க்கும் எண்ணம் வளர்ந்தது
கரையை கடலும் கடந்தது -இங்கு
கல்வி சுயநலம் ஆனது
பொய்யே புதுமை ஆனது -நம்
பூமியில் துயர்கள் மலிந்தது
பெய்யும் மழையோ பொய்த்தது -ஆனால்
பெருமாள் கருணையே நிலைத்தது
வறுமை மண்ணில் வந்த்து
கானில் பசுமை குறைந்தது -எங்கும்
காற்றில் மாசு நிறைந்தது
நெஞ்சில் கருணை பறந்தது -உலகில்
நேர்மை என்பது போனது
அஞ்சும் நிலைமை ஆனது -அதற்கு
யாரை குறைகள் சொல்வது
தாயை மறந்து போனதால் -நம்
தர்மம் கற்பனை யானது
நோயின் வரவு பெருத்தது -இங்கு
நுண்கலை செல்வம் அழிந்தது
இறைவன் என்பதே மறந்தது -பிறரை
ஏய்க்கும் எண்ணம் வளர்ந்தது
கரையை கடலும் கடந்தது -இங்கு
கல்வி சுயநலம் ஆனது
பொய்யே புதுமை ஆனது -நம்
பூமியில் துயர்கள் மலிந்தது
பெய்யும் மழையோ பொய்த்தது -ஆனால்
பெருமாள் கருணையே நிலைத்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக