ஞாயிறு, 30 ஜூன், 2013

varalaaru

கூரான  விழியை  காட்டி -நிதம்
 கொல்லாதே  என்னை  என்பேன்
 வேறேதோ  சொல்ல  வந்தால் -உனது
 விழியாலே என்னை  வெல்வாய்

 தேனூறும்  இதழைக் கொண்டு -இங்கு
 தினந்தோறும்  தொல்லை  செய்வாய்
 வானூறும்  மதியை  போல -ஏன்
 வந்துவந்து  நீதான் போகின்றாயே

 ஆராரோ  என்னை  வெல்ல -நன்கு
 அலைந்தார்கள்  அந்த  நாளில்
 சீர்செய்த  உடலை  வைத்து -எனது
 சிந்தையை  கலங்க  வைத்தாய்

 தப்பு   எதுவும்  செய்ததில்லை -பெற்ற
 தாய்   சொல்லை  மறக்கவில்லை
 உப்பு  இல்லா  பண்டமாக -என்னை
 ஊரிலே  அலைய  விட்டாய்

 வில்லான  புருவம்  பெற்று -எழுதிய
 விதியினை  மாற   வைத்தாய்
 கல்லாத  மூடன்  போல -உலகில்
 கண்ணீரில்  திரிய வைத்தாய்

 இதயத்தில் கோவில் அமைத்தேன் -அதில்
 இனியநீ  தெய்வம்  ஆனாய்
 உதயத்தில்  எழுந்து  நானும் -அன்பால்
 உந்தனுக்கு  பூஜை  செய்வேன்

 வாழ்கின்ற நாட்கள்  முழுதும் -உனது
 வரலாறு  பாடி  வைப்பேன்
 வேல்  கொண்ட முருகன் -அருளால்
 வெற்றியை  நான் ருசிப்பேன் 

புதன், 26 ஜூன், 2013

paranthaaman

எனக்கென்ன  என்றே  நானும் -உன்னால்
 இருந்தேனே  அந்த  நாளில்
 இறைவா  உன்கருணை  தன்னால் -இங்கு
 நானும்  பிறந்தேன்  அன்றோ

 சீரான அழ்கினைச்  சிறிதேனும் ரசித்தேனில்லை -உன்
 திருவடி தன்னை  தினந்தோறும்  மறந்ந்தேனில்லை
 கூரான  சொல்லை  கொண்டு -பல
 குடும்பத்தை  கெடுத்தேன்  இல்லை

 வேறான  மாந்தர்  வாழ -நாளும்
 விவரங்கள்  பலவும்  சொல்வேன்
 பாராளும்  எங்கள் பரந்தாமனே -என்றும்
 பணிவேனே  உந்தன்  பாதம்

 பொல்லாத  எண்ணம்  கொண்டோர் -இந்த
 பூமியில்  நிறைய  உண்டு
 நல்லோர்கள்  நலமாய்  வாழ -நீ
 நாளையே  வருவாய்  இங்கே  

 ஆதாயம்  பெறவும்  வேண்டி -வீணே
 அநியாயம்  நிறைய  செய்வார்
 தீதான  செயலை  செய்தோர் -உலகில்
 திறமையாய்  வாழ்தல்  கண்டேன்

 காலத்தின் கோலம்  போக்க -ஒருநாள்
 கண்ணா நீ  மீண்டும் வேண்டும்
 அலையாடும்  கடலில்  துரும்பென என்னை
 ஆட்டி  வைத்து  சிரிக்கின்றாயே 

செவ்வாய், 25 ஜூன், 2013

iravu

இரவின்  மயக்கம்
 எனக்குள்  இருக்கு
 உறவின் மயக்கம்
 உனக்குள் இருக்கு

 தமிழின்  மயக்கம்
 சொல்லில்  இருக்கு
 தர்மத்தின் மயக்கம்
 நேர்மையில் இருக்கு

 உண்மை  மயக்கம்
 பொய்யில்  இருக்கு
 உணர்வின்  மயக்கம்
 உடலில்  இருக்கு

 நாளின்  மயக்கம்
 இரவில்  இருக்கு
 நட்பின்  மயக்கம்
 நடப்பில்  இருக்கு

 வாழ்வின்  மயக்கம்
 நல்வழியில் இருக்கு
 வறுமை  மயக்கம்
 சோம்பலில்  இருக்கு

 பெண்ணின்  மயக்கம்
 பெருமையில்  இருக்கு
 பேதை  மயக்கம்
 பிழையில்  இருக்கு

 சிற்பி  மயக்கம்
 சிலையில்  இருக்கு
 சீதை  மயக்கம்
 சிறப்பில்  இருக்கு

 நிலத்தின்  மயக்கம்
 நீரில்  இருக்கு
 நீரின்  மயக்கம்
 வானில்  இருக்கு

 தேனின்  மயக்கம்
 சுவையில்  இருக்கு
 தேளின் மயக்கம்
 கொடுக்கில்  இருக்கு

 நீயும்  நானும்
 நிஜத்தில்  இருக்கு
 நேர்மை  ஒன்றே
 நிலையாய்  இருக்கு

திங்கள், 24 ஜூன், 2013

கனவு

கனவு  கனவு
 காதல்  நினைவு
 கண்கள்  மலர
 கவிதை  வரவு

 உறவு  உறவு
உலகம்  உறவு
 உள்ளம் கலக்க
 வருவது  தொடர்பு

 எண்ண எண்ண
 எத்தனை  உணரவு
 இதயம்  திறந்தால்
 இனிமை  பிறகு

 மலர  மலர
 மயங்குது  மனது
 மண்ணில் பிறந்தால்
 மாயை  யில்  மயக்கம்

 தொடர தொடர
 தோகை மேலாசை
 தோகை மயிலை
 தொட்டிட  பூசை

 ஆசை  ஆசை
 அளவில்  பெரியது
 ஆண் பெண்ணிடம்
 அடங்குதல்  எளிது

 இந்நிது  இனிது
 இயற்கை  அழகு
 இறைவன்  படைப்பு
 என்றுமே புதியது 

வியாழன், 20 ஜூன், 2013

iilayanilaa

பூவிரியும்  சோலை  யோரம் -எங்கும்
 பொன்னான  மாலை  நேரம்
 காவிரிக்  கரை  அருகில் -அங்கே
 காலாற    நான்  நடந்தேன்  

 பட்டென  விழுந்தன  மழைத்துளி -உடன்
 படபடவென  துடித்தது  கருவிழி
 சட்டென  திரும்பி  பார்க்கயிலே -அங்கு
 சாரைபோல  சடையுள்ள  பூவிழி

 ஈரெட்டு  வயதுள்ள  பெண்ணாலோ -அவளை
 எதிர்பட   கொல்கிற   கண்ணாலோ
 சிட்டென   பறக்கின்ற  கால்களோ -நம்
 சிரசினைக்  வெட்டிடும்  வேல்களோ

 காரிருள்  தோற்றிடும்  கரியமுடி -அவள்
 காலடி  தொழுதிட  மனமயங்கும்
 சீறிதழ்   மாதுளை  நிறமாகும் -வாய்
 சிரிக்கையில்  முத்துக்கள்  உருண்டோடும்

 சிற்பி  வடித்த பொற்சிலையோ -அந்த
 சீதள   பொன்மேனி  எழிற்குலையோ
 அற்புத   அழகுடை  ஆரணங்கு -தினம்
 அழகினை  ஆயிரமுறை  நீ வணங்கு

 பூமிக்கு  வந்திட்ட  இளையநிலா -அது
 புறப்பட்டு  வந்தது  தனிமையிலா
 காணிக்கை  தந்திட ஈதுமில்லை --நான்
 கண்டது  கற்பனை   வேறில்லை

 கற்பனையில்  கவிதை  சொன்னேன் -மன
 கலக்கத்தை  வார்த்தையில் வடித்துவிட்டேன்
 நிச்சயம்  ஒருநாள்  வந்திடுவாள் -எனக்கு
 நிம்மதி  என்பதை  தந்திடுவாள் 

செவ்வாய், 18 ஜூன், 2013

thunai

காற்றில்  கலந்த  ஈரம் -தினம்
 எந்தக்ன்  கண்ணில்  வடிகின்றதே
 நேற்று  இன்று  என்று -ஏனோ
 நாளும்  எங்கோ  பறக்கின்றதே

 உன்னை  நினைத்து  இருந்தேன் -நீயோ
 உறவை  மதிக்க  வில்லை
 பெண்மை  குணம்  எதுவும் -அட நீ
 பெற்று   இருக்க   வில்லை

 வன்னில்  பறந்து  சென்றால் -வந்து
 வழியை  மறித்து  நிற்ப்பாய்
 தேனாய்  இருந்த  என்னை -நீதான்
 தீயாய்  மாற்றி  விட்டாய்

 கள்ளம்   கபடு  இன்றி -நானும்
 காலம்  கழித்து  விட்டேன்
 அல்லல்  படுத்த  உன்னை -இங்கு
 யாரோ  அனுப்பி வைத்தார்

  காலமெனும்   தேர்   அமர்ந்து -நானும்
 கனவு  உலகம்  செல்வேன்
 வாழ  வழி  வருமா -எனது
 வாழ்வு   சுகம் பெறுமா

 உலகம்  உள்ள  வரை -காதல்
 உணர்வு  நிலைத்து  நிற்கும்
 பழகும்  நினைவு  களிலே -எனது
 பாசம்   புரிந்து  விடும் 

avan iraivan

இறைவன்  இருக்கின்றான் -அவனை
 இல்லையென  சொல்லாதீர்
 உறவைக்  கொடுத்தானே -நமக்கு
 உள்ளம்  வைத்தானே

 காற்றில்  இருப்பானே -அவனே
 கடலில்  நீர்தானே
 ஆற்றின்  கரையோரம் -அவனே
 அழகாய்  திரிவானே

 என்னில்  இருப்பானே - அவனே
 ஏழு  சுரம்தானே
 உன்னில்  நுழைவானே -இந்த
 உண்மை  அறிவாயா

 பொன்னை  கொடுத்தானே -அவனும்
 புதுமை  வளரத்தானே
 பெண்ணில்  இருப்பானே -நீயே
 பின்பு   உணர்வாயா

 எங்கும்  இல்லையென -நீயும்
 இனியும்  சொல்வாயா
 பொங்கும்  கடலலைகள் -அவனை
 பூமிக்கு   காட்டாதா

 தமிழின்  உயர்வானான் -அவனே
 தமிழாய்  இருக்கின்றான்
 அமிழ்தின்  சுவைபோல -அவனும்
 அழகாய்   இனிக்கின்றான்

 கள்ளமிலா   குழந்தையிடம் -அந்த
 கடவுள்  வசிக்கின்றான்
 எண்ண  ஓட்டத்திலே  -நமது
 இறைவன்  இருக்கின்றான் 

புதன், 12 ஜூன், 2013

paruva virunthu

நிலவு   என்னைச்  சுடுகிறதே -ஏனோ
  நெருப்பு   குளிராய்  தெர்கிரதே
 உலவும்  காற்று  தகிகிறதே -உன்
 உறவு மட்டும்  இனிக்கிறதே

 இரவு முழுதும்  உறங்கவில்லை --அந்த
 இதழின்  இனிமை  குறையவில்லை
 மறந்து  போன  நினைவுகளால் -வந்த
 மயக்கம்  இன்னும் தெளியவில்லை

 இளமை  விருந்து எனக்காக -என்
 இதயம்  முழுதும்  உனக்காக
 பழகி  தெரிந்த  அனுபவங்கள் --இந்த
 பாவி  உடலை  வதைக்கிறதே

 ஈரெட்டு  வயது  இல மனது -அதனால்
 ஏங்கி  தவிக்கிது  என்மனது
 போரிட்டு எனைவெல்ல வருவாயா -இல்லை
 புலம்பி  தவித்திட  விடுவாயா

 ஊரார்  பழித்து  சொன்னாலும் -என்
 உற்றார்  எதிர்த்து  நின்றாலும்
 வேறோர்  உலகம்  நான் படைப்பேன் -பருவ
 விருந்து  வைக்க  உன்னை அழைப்பேன்

 அச்சம்  நாணம் தனை மறந்தேன் -என்
 ஆயுள்   முழுதும் உனைமறவேன்
 மிச்சமின்றி  நான் மறைந்தால் -பிறந்து
 மீண்டும்  உன்னையே காதலிப்பேன்

செவ்வாய், 11 ஜூன், 2013

palan

அலைகளின்  ஒலியும்  அருவியின்  இசையும் -காண
 அழகாய்  தெரியும்  நமக்கு  விருந்தாகும்
 கலைமிகு  சிலையும் கருங்கல்  உளியும் -ஒன்று
 கலந்திடில்  நாம் போற்றும்  நிலையாகும்

 இரவுக்குள்  பகலும்  பகலுக்குள்  இரவும் -இவை
 இரண்டுமே  கலந்தால்  நாள் தானே
 உறவுக்குள்  பகையும்  உடம்பினில்  உயிரும் -இந்த
 உலகம்  உள்ள  வரையில்  நிஜம் தானே


 என்னிலே  நீயும்  உன்னிலே  நானும்-என்றும்
 இரண்டற  கலப்பது  முறை  தானே
 கண்ணிலே  ஒளியும்  கருத்திலே  தெளிவும் -பலர்
 எண்ணியே  வாழ்ந்தால்  பெருவது  சுகம்தானே

 நீரிலே  நெருப்பும்  நெருப்பிலே  நீரும் -நம்
 நிலத்திலே  தோழமை  முறை யாமோ
வேரிலே  ஊறும்  வெற்றிகள்  யாவும் -பலர்
 வியர்வை  சிந்திய  பலன் ஆமோ

 மண்ணிலே  பிறந்தும்  மதத்தால்  மடிவார் -இங்கு
 மனதில்  கொள்ளும்  விதி  தானே
 பெண்ணில்  பிறந்தும்  பெருமை  மறந்து -சிலர்
 பேதையாய்  திரிதல்  சதி   தானே

ஞாயிறு, 9 ஜூன், 2013

thiru varul

திருமலை  தனில் வாழும்  ஸ்ரீனிவாசா -உனது
 திருவடி  வணங்கினோம்  துணை நேசா
 பெருமாளே  உனது  அருள்  லீலை -இந்த
 பிரபந்தம் காண்கின்ற  அருட்  சோலை

 காத்திடும்  கடவுள்  நீ அல்லவா -கொடிய
 கம்சனை  வதம்  செய்த  சேய்  அல்லவா
பார்ர்தனாய்  பாரத  போர்  தன்னிலே -உனது
 பங்கினை  செய்த  எங்கள்  பரந்தாமா


 கோபியர்  கொஞ்சிடும்  எழில்  கோபாலன் -வரும்
 கொடுமையை  வதம்  செய்யும்  குணசீலன்
 பாவியர்  உன்சேவடி  பற்றி வீழ்ந்தாலே -அவர்
 பதம் பெற இதமருள்  துணை புரிவாயே

 கீதைக்கு  பொருள் சொன்ன  கேசவன் நீ -எங்கும்
 கிடைத்திடும்  வெண்ணெய்  திருடனும்  நீ
 சீதையை  மனம் செய்த  ஜெகன்நாதா -இந்த
 ஜெகத்தோர்  நலம் பெற  வருவாய்  நீ    

 மாலெனும் பெயர்  கொண்ட  திருமாலே -நீ
 மண்ணகம் வருதல்  எங்கும் திருநாளே
 செலேனும்  திருமகள்  உந்தன்மார்பினிலிருக்க -காணும்
 சிந்தையில்  மகிழ்ச்சி  பொங்கி  நிலைத்திருக்கும்

 ஆதி  அந்தம் இல்லாத  அளகேசா -என்றும்
 ஆழ்யில் துயில்  கொள்ளும் எழில் நேசா
 ஜோதிப்  பேரொளி   சுடர்  விளக்கே -உன்னை
 தொழுதேன் எல்லாம்  உந்தன்  திருவருளே

சனி, 8 ஜூன், 2013

sathiya jothi

ஆதி அந்தம்  இல்லா  ஜோதி -நல
 அன்பால் தருவான் அனைவர்க்கும் நீதி
 ஓதி உணர்ந்தவர் உரைத்திட்ட சொல்லே -இந்த
 உலகில்  நடப்பது  அவனது செயலே

 கண்கள்  காண ஒளியை  கொடுத்தான் -கொடிய
 கயவர்  தம்மின்  உயிரை  எடுத்தான்
 பெண்கள்  வாழ  பெருமை  படைத்தான் -கற்ற
 பெரியோர்  போற்றும்  பெரும்புகழ்  பெற்றான்

 எங்கும் எதிலும்  இளமை அளித்தான் -நமக்கு
 ஏற்ற  தாழ்வு  இரண்டும்  அமைத்தான்
 பொங்கும் கடலில்  ஓசை வைத்தான் இந்த
 பூமி  நிறைய பொன்னும்  ஈந்தான்


 பெண்ணும்  ஆணும்  பிறக்க வைத்தான் -அவர்
 பிறரது  பொருளை  வெறுக்க செய்தான்
 மண்ணும் வாழ   நல்மழையை  கொடுத்தான் -நம்
 மானம் காக்க   வீரம்  கொடுத்தான்

 இத்தனை தந்திட்ட  இறைவன் தன்னையே -தினம்
 இரவு  பகலும்  தொழுது  வாழ்வோம்
 உத்தம  நெறி  வழி சென்றிடுவோம் -என்றும்
 ஒன்றே குலமென உறுதி  கொள்வோம்

வெள்ளி, 7 ஜூன், 2013

velveer

வீணே  பேசி
 விஷத்தை  கக்கி
 தானே எல்லாம்
 தருக்கால் நடப்பார்

 நீரால் நெருப்பால்
 நிதமும் அழிவார்
 பிறர்க்கு உதவ
 பிறிதும் நினையார்

 ஊரார்  பொருளை
 உவந்தே  பறிப்பார்
 சீரார்  பெண்ணை
 சிதைத்தே  மகிழ்வார்

 வாய்மை என்பதை
 வாழ்வினில்  நடக்கார்
 பொய்யே  துணையாய்
 பூமியில்  வாழ்வார்

 கருணை பெருமை
 கனவிலும் நினையார்
 அருமை பெற்றோர்
 அவதியில் வைப்பார்

 பிள்ளைப் பாசம்
 பெரிதே  கொள்ளார்
 கொள்ளை  பணத்தை
 குவித்தே வைப்பார்

 ஆலயம் செல்வது
 அவர்க்கோ  கடிது
 அன்பு செய்வது
 அளவிலா  கொடிது

 பண்பு  என்பதோ
 பசப்பு  வார்த்தை
 நன்றி  மறந்ததால்
 நாளும் மெலிவார்

 இத்தனை  குணத்தை
 இதுவரை சொன்னேன்
 புத்தியில்  கொண்டு
 புவியினில் வெல்வீர் 

aruvi

வானோர்  நிலவில்
 வதனம்  கண்டேன்
 தேனார்  மொழியில்
 தீங்குரல் கேட்டேன்

 நானோ அறியேன்
 நல்லனயாவுமே
 ஏனோ  தெரியேன்
 இங்கே  பிறந்தேன்

 நூலோர் பொருளின்
நுணக்கும்  தெரியேன்
 சேலார்  விழியால்
 சிக்கி  தவித்தேன்

 தாயின்  நினைவு
 தலை மேல்  உண்டு
 வாயின் பெருமை
 வந்தால் புரியும்

 கனவா  நினைவு
 கானல் நீரோ
 புனலாய் பொழியும்
 பொங்கிடும் அருவி

வியாழன், 6 ஜூன், 2013

nallaasi

நானென  இருந்தேன்
 நீயே  வந்தாய்
 தேனினும்  நினைவில்
 திருவிழா கண்டோம்

 இரவுப்   பொழுதில்
 எழுதினோம்  கவிதை
 இமைகள்  மூடினால்
 இயங்குமோ  மன நிலை

 அலைகள்  நடுவில்
 ஆடிடும்  படகு
 ஆயிரம் கலைகள்
 அனுதினம்  பழகு

 கண்ணில்  தெரிவது
 காந்தக் கனலோ
 உன்னில்  விளைவது  
 உயர்ந்த  பொருளோ

 நாளும்  பொழுதும்  
 நமக்கினி   இல்லை
 நல்லவர்  ஆசி
 நாம் பெறும்  போது

 இருமனம் ஒன்றென
 இணைந்திட  வேண்டும்
 இறவாப்  புகழை
 இனி பெற வேண்டும்

புதன், 5 ஜூன், 2013

pugazh

ஆறில்லா  ஊரில்
 அழகு  கெடும்
 அறிவில்லா  சிலரால்
 அமைதி கெடும்

 பேறில்லா  மனிதன்
 பிழைகள்  தானே
 பெண்ணில்லா  உலகம்
 சோகம்  தானே

 நீயல்லா  நானும்
 மோசம் தானே
 நினைவில்லாத  எதுவும்
 தொல்லைதானே

 பொய் இல்லாத சொல்லும்
 வெற்றி  தானே
 புகழில்லாத  செயலும்
 வேஷம்  தானே

 கலையில்லாத  சிலையும்
 கவலை  தானே
 காசிலார்  நிலையம்
 கடினம்  தானே

 வாயிலார்  பிறர்முன்
 ஊமை  தானே
 வழ்யிலார்  பாதை
 வழுக்கல்  தானே

 நோய் இல்லார்  என்றும்
 சிறப்பு  தானே
 நுணலும்  கெடுவது
 வாயால்  தானே 

செவ்வாய், 4 ஜூன், 2013

vannamayeilmm

வானத்து நிலவென  வந்து விட்டாள் -என்
 வாழ்வுக்கு அர்த்தம்  தந்து விட்டாள்
 கானத்து குயில்  அவள் குரலே -அவளை
காண்பவர் மனதில் எழும்  புயலே

 மோனத் தவம் களைந்து வந்தவளோ -தவ
 முனிவர் குடிசை  தன்னில் வளர்ந்தவளோ
 மானென துள்ளல்  அவள் நடையோ -நல்ல
 மலரினும் மெல்லியது பிடி இடையோ

 கார்மேகம் பழித்திடும்  அவள் கூந்தல் -இரு
 கருவிழி  காண்பவர் அதிர்கின்ற போர்முறைகள்
 தேர்  போல அசைந்ந்தாடும்  திருவழகு -நாம்
 தினம் தோறும்  சேவித்தால் சுகம் கூடும்

 மனைனாடி  வருகின்ற  மங்கள  பெண்ணோ -பிறர்
 மனதை அள்ளும்  மாயகலை  கற்றவளோ
 துணைதேடி  செல்லுதே  எனது இளவயது -தரையில்
 துடிக்கின்ற மீனாகி  போனேன்  இப்போது

 எதைசொல்லி  அவளிடம் நான் போவேன் -என்னிடம்
 இருப்பது கேட்டாலே உடன்  தருவேன்
 கதை ஆகி போய்  விடுமோ என்வாழ்வு -அந்த
 கண்ணன் துணை வேண்டினேன் என்காதலுக்கு

 வரந்தர வருவாளோ  வண்ண கிளி -அவள்
 வந்திடிலோ எந்தன் வாழ்வு வாசமலர்
 சுகம்பெற  திருநாளும் இனிமேல் வந்திடுமோ -இனிய
 சுரமேழும்  சேர்ந்த இசையாக தந்திடுமோ

maalavan

மலை மீதில்  வாசம்  செய்யும் மாலவா-உனை 
 மனதார  தினம்  வேண்டி  நான் பாடவா 
 அலை ஆடும்  கடல் கூட  கவி  பாடுமே -தமிழ் 
 அறிந்தோர்  திரு நாவில்  உரை  தெய்வமே 
 
 ஆழ்வார்கள் உன்னை  பாடிய  திருப்பாசுரம் -என் 
 அழகா  உன்பெயர்  கூறும் பூச்சரம் 
 அமிழ்தினை  பொழிகின்ற  உனது நேத்திரம் -நெஞ்சில் 
 அணையாத ஜோதியாய்  ஒளி  வீசுமே 
 
 திருமகள்  உன்மார்பில்  குடி  ஏறினாள் -உன்னை 
 தினந்தோறும்  சேவிக்க  படி  ஏறுவார் 
 பெருமாளே  எமை  காக்க வரவேண்டுமே -திவ்ய 
 பிரபந்தம்  பொருள்  கூறும் திரு நாமமே 
 
 திருப்பங்கள்  பலர்  வாழ்வில் தினம்தோறுமே -அவர் 
 திருமலை சென்றதால்  பலன்  கூடுமே 
 கருவுறை  சிறு சேய்க்கும் அருள் செய்குவாய் -மாய 
 கண்ணனாகி  கோபியரோடு அந்நாளில் விளையாடினாய் 
 
 மங்கை திரெளபதை  மானம் காத்தவன் -தன்னை 
 மனதார நினைபோரின்  துயர்  தீர்த்தவன் 
சங்கு  ஒலித்து  பாரத  போர்  முடித்தவன் -நல்ல 
 சமத்துவத்தை  வாழ்வினிலே கொண்டு சேர்த்தவன் 

ஞாயிறு, 2 ஜூன், 2013

karunai

இரவில்  வரும்  காற்று -உனக்கு
 என்ன  சொல்லி  வீசும்
 உறவு பெரிது  என்னும் -நல்ல
 உண்மை  புரிநபேசும்

 காற்றில்  மலர்ந்த  மலர்கள் -நமது
 கண்ணில் தெரிவது  என்ன
போற்றும்  தூய  இறைவன் -இந்த
 பூமிக்கு  அளித்த  கொடைதான்

 நேற்று  இன்று  நாளை -எனும்
 நியதி  சொல்லும்  சேதி
 உண்மை  அன்பு உழைப்பு -மண்ணில்
 உயர்வு  காட்டும் நீதி

 இரவு பகலின்  சுழற்சி -அது
 இனிமை கூட்டும் கிளர்ச்சி
 பறவை  கூவும் ஒலியோ -இங்கு
 பருவ  கால மலர்ச்சி

 தாயின்  பெருமை  சொல்ல -நம்
 தமிழில்  வார்த்தை  உண்டோ
 சேயின்  மழலை  சிரிப்பில் -இந்த
 ஜெகமே  மயங்கும்  போது

 நெஞ்சில்  கருணை  வேண்டும் -அது
 நேர்மை   வழியை  காட்டும்
 நஞ்சு  எண்ணம்  கொண்டால் -நாளும்
 வெற்றி  பெறுதல்  இல்லை

 இயன்ற  வரையில்  சொன்னேன் -இனி
 எதுவும்  வந்தால்  சொல்வேன்
 முயன்று நாமும் உழைத்தால் -உலகில்
 முடியாதது  எதுவும்  உண்டோ