கூரான விழியை காட்டி -நிதம்
கொல்லாதே என்னை என்பேன்
வேறேதோ சொல்ல வந்தால் -உனது
விழியாலே என்னை வெல்வாய்
தேனூறும் இதழைக் கொண்டு -இங்கு
தினந்தோறும் தொல்லை செய்வாய்
வானூறும் மதியை போல -ஏன்
வந்துவந்து நீதான் போகின்றாயே
ஆராரோ என்னை வெல்ல -நன்கு
அலைந்தார்கள் அந்த நாளில்
சீர்செய்த உடலை வைத்து -எனது
சிந்தையை கலங்க வைத்தாய்
தப்பு எதுவும் செய்ததில்லை -பெற்ற
தாய் சொல்லை மறக்கவில்லை
உப்பு இல்லா பண்டமாக -என்னை
ஊரிலே அலைய விட்டாய்
வில்லான புருவம் பெற்று -எழுதிய
விதியினை மாற வைத்தாய்
கல்லாத மூடன் போல -உலகில்
கண்ணீரில் திரிய வைத்தாய்
இதயத்தில் கோவில் அமைத்தேன் -அதில்
இனியநீ தெய்வம் ஆனாய்
உதயத்தில் எழுந்து நானும் -அன்பால்
உந்தனுக்கு பூஜை செய்வேன்
வாழ்கின்ற நாட்கள் முழுதும் -உனது
வரலாறு பாடி வைப்பேன்
வேல் கொண்ட முருகன் -அருளால்
வெற்றியை நான் ருசிப்பேன்
கொல்லாதே என்னை என்பேன்
வேறேதோ சொல்ல வந்தால் -உனது
விழியாலே என்னை வெல்வாய்
தேனூறும் இதழைக் கொண்டு -இங்கு
தினந்தோறும் தொல்லை செய்வாய்
வானூறும் மதியை போல -ஏன்
வந்துவந்து நீதான் போகின்றாயே
ஆராரோ என்னை வெல்ல -நன்கு
அலைந்தார்கள் அந்த நாளில்
சீர்செய்த உடலை வைத்து -எனது
சிந்தையை கலங்க வைத்தாய்
தப்பு எதுவும் செய்ததில்லை -பெற்ற
தாய் சொல்லை மறக்கவில்லை
உப்பு இல்லா பண்டமாக -என்னை
ஊரிலே அலைய விட்டாய்
வில்லான புருவம் பெற்று -எழுதிய
விதியினை மாற வைத்தாய்
கல்லாத மூடன் போல -உலகில்
கண்ணீரில் திரிய வைத்தாய்
இதயத்தில் கோவில் அமைத்தேன் -அதில்
இனியநீ தெய்வம் ஆனாய்
உதயத்தில் எழுந்து நானும் -அன்பால்
உந்தனுக்கு பூஜை செய்வேன்
வாழ்கின்ற நாட்கள் முழுதும் -உனது
வரலாறு பாடி வைப்பேன்
வேல் கொண்ட முருகன் -அருளால்
வெற்றியை நான் ருசிப்பேன்