வியாழன், 30 ஏப்ரல், 2009

ஆண்டாள்


ஆண்டாள் வுன்னை நானும் பாடினேன் -வுன்
அழகிய திருவடி பற்றி வேண்டினேன்
தூண்டா மணிவிளக்கு நீ தமிழிற்கு -தினம்
தொழுது நலம் பெறுவேன் என் வாழ்விற்கு

அல்லிப்புதூர் எனும் அழகிய ஊரிலே -அன்று
அம்மா வந்து நீயும் பிறந்தனை
கல்வி கேள்வியில் சிறந்து வளர்ந்தனை -அந்த
கண்ணன் மீதில் காதல் கொண்டனை

முகுந்தா முகுந்தா வென மோகனம் பாடினை - கனவில்
முரளியை நினைத்து மனம் வாடினை
வரம்தா வரம்தாவென வாசல் ஓடினை -ஒரு நாள்
வருவான் கண்ணனென கண்ணால் தேடினை

சூடிகொடுத்து சுடர்கொடியாகினை -அதனால்
சொக்கி மாலும் வுன்னை மணந்தனன்
தேடிய தெய்வம் மனம் இசைந்தது -இந்த
தரிசனம் மண்ணில் பலருக்கும் கிடைத்தது

தமிழிற்கு புது மெருகு தந்தனை -இசை
தாளத்திற்கு பல பாடல்கள் பிறந்தன
அமுதிற்கு மேலாய் இன்றும் இனிக்குது -என்
அம்மா வுன்னை எப்படி நானும் மறப்பது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக