திங்கள், 6 ஏப்ரல், 2009

காதல்


காலம் யாவும் கடந்தது -இரு
கண்கள் வழியே பிறப்பது
மாலை வந்தால் மலர்வது -மக்கள்
மனதில் என்றும் நிற்பது



தென்றல் காற்றில் வளர்வது -நினைக்க
தீ போல நன்றாய் கொதிப்பது
ஒன்று பட்டால் இனிப்பது -முடிவில்
வுலகைஎதிர்க்கதுணிவது



கவிஞர் எழுத்தில் தெரிவது -நடிக்கும்
கலைஞர் வுருவம் புரிவது
ஆசை காட்டி இழுப்பது -நம்
அருகில் வந்தால் குளிர்வது



இயற்கை தந்த பொருளது -நல்ல
இன்ப தமிழிலும் இழைவது
அன்பு மனதில் அமர்வது -படைத்த
ஆண்டவன் தன்னையும் வென்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக