வருக சித்திரை வருகவே -வாழ்வில்
வளங்கள் நிறைய தருகவே
பெற்ற செல்வம் பெருகவே -தமிழின்
பெருமை யாவும் நிலைக்கவே
நெஞ்சம் முழுதும் நிறைகவே -உழவர்
நிலங்கள் விளைவு உயர்கவே
பஞ்சம் பிணிகள் மறைகவே -மனதில்
பகைமை எண்ணம் அகலவே
விலைகள் ஏற்றம் மலிகவே -தமிழர்
வீரம் பொங்கி பொலிகவே
கலைகள் மண்ணில் வளர்கவே -எங்கும்
கருணை எண்ணம் மலர்கவே
திங்கள், 20 ஏப்ரல், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக