ஆணைகாவில் அரசாளும் -நல்
அம்பிகை தாயே ஈஸ்வரியே
மோனை பொருளே மூத்தவளே -என்றும்
முன்வந்து மக்களை காப்பவளே
தனியாய் நின்றாய் தவக்கோலம் -அந்த
தட்சன் மகள் நீ அருட்ஜாலம்
கனியாய்இன்னிப்பாய் நினைந்தாலே -இரு
கண்களில் மலர்வாய் ஒளியாலே
ஆடி வெள்ளி காலங்களில் -உனது
ஆலயம் நிறைவது அருட்கூட்டம்
பாடி அம்மா பணிந்திடுவார் -தினமும்
பணிந்ததனாலே நலம் பெறுவார்
நாவல் மரத்தின் அடியினிலே -அமர்ந்து
நல்லாட்சி புரிந்திடும் நாயகியே
காவல் துணையாக வரவேண்டும் -உனது
கருணை மழை யோ நிதம் வேண்டும்
ஞாயிறு, 26 ஏப்ரல், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக