புதன், 22 ஏப்ரல், 2009

திருமுருகன்


வயலூர் முருகன் வடி வேலன் -நல்
வரமே அருளும் குணசீலன்
பயமே இல்லை பணி ந்தாலே-அதிக
பலனே கிடைக்கும்மென்மேலே

வாரி வழங்கும் வள்ளலவன் -குற
வள்ளி மயங்கும் கள்வனவன்
கோரி அவனை நீ தொழுதால் -உன்
குலத்தை காப்பான் மால்மருகன்

அருணகிரிக்கு அருள் கொடுத்தான் -தனது
அடியவர்க்காக வேல் எடுத்தான்
தருணம் இதுவே வாமுருகாஎன்றும்
தாயாய் காப்பாய்திருமுருகா

எங்கும் பசுமை ஜாலங்களே -அது
இறைவன் அளிக்கும்கோலங்களே
தங்கவேலன் தனை நினைவோம் -அவன்
தாள் பணி ந்தால் சுகம் பெறுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக