உந்தன்பாதம் பற்றிவிட்டால் -இந்த
வுலகில் துன்பம் ஓடிவிடும்
வந்த வினைமாறிவிடும் -என்றும்
வாழ்வில் இன்பம் கூடவரும்
சிவமென்று நினைக்க சீர்பெருவாய் -திரு
சீரலைவாய் சென்றால் சேர்ந்திடும் அற்புதமே
தவமிதை நீவுணர தத்துவம் புரியுமடா -அவர்
தாயாகி காக்கவரும் தர்மம் தெரியுமடா
ஏழைக்கு நன்மைகளை எப்போதும் செய்திடடா-நாம்
எல்லோரும் வாழ்கவென எண்ணமுனை நாடுமடா
காலை மாலை இருவேளை கண்ணனை தொழுதிடடா
கருணையால் நமை காப்பான் கவலைதனை விட்டிட்டா
மனமெனும் கோவிலிலே மாதவனை நினைதிடடா -அந்த
மாலவனின் பேர் சொல்ல மலர்ச்சி பெருகுமடா
தினமெல்லாம் ஆலயம் செல்வது நிம்மதியே -வந்த
தீவினைகள் பறந்துவிடும் தெய்வமுனை காத்துவிடும்
ஞாயிறு, 26 ஏப்ரல், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக