திங்கள், 27 ஏப்ரல், 2009

முத்து மாரி


தேர் மீது வருகிறாள் தெய்வ முத்துமாரி
தெண்டனிட்டு வணங்கினால் சேரும் பலன் கோடி
ஊரெங்கும்
கோலங்கள் ஒளிவிளக்கு மேளங்கள்
வுல்லாசமாய்
சல்லாபமாய் ஓடியாடி பாடுங்கள்

சமயபுர
எல்லையில் சக்தியாக அமர்ந்தவள் சங்கரியாய்காளியாய் சரித்திரத்தை படைப்பவள்
அபயகரம்
அருளுவாள் அவளடியை தொழதிட்டால் அல்லலேல்லாம் பறந்திடும் அன்னையிடம்வந்திட்டால்

கண்ணபுர மண்ணை காக்கும் கற்பகமாய் ஆனவள் கண்ணொளியை தருவதில் காமதேனு போன்றவள்
விண்ணகத்தை ஆண்டிடும் விமலனுக்கு துணையவள் வேற்காட்டில் கருமாரியாய் வெற்றிமழை பொழிபவள்

சக்தி
பீட வரிசையில் சமயபுரம் முக்கியம்
சஞ்சலங்கள்
தீர்வதற்கு சக்திதானே நிச்சயம்
முத்திவழி
காண்பதற்கு மோனம்தானேதத்துவம்
மோகமதை
வெல்வதற்கு முத்துமாரி காரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக