செவ்வாய், 28 ஏப்ரல், 2009

வாழ்துவதேப்போ

நீதி கொன்ற நெஞ்சத்திற்கு நிம்மதி இல்லை - பொய்யை
நிலை நிறுத்த வந்தவர்க்கு நேர்மை இல்லை
பாதிவழி சுமந்தவர்க்கு பாரமொன்று மில்லை -தினம்
பழி நிறைய செய்பவர்க்கு பாவமொன்றில்லை

அன்பில்லா வுள்ளமடில் ஆண்டவரில்லை -அவன்
ஆடவைக்கும் நாடகத்தில் மீண்டவரில்லை
இன்பமிது என்று யாரும் விண்டவரில்லை -வுலகில்
இறந்த வை செல்லுமிடம் கண்டவரில்லை

பிறந்து வந்த நிலைநாடி பிதற்றும் கூட்டம் -இன்னும்
பேய்கள் கதை சொல்லிஇங்கு போடும் ஆட்டம்
வந்திருக்கும் காரணத்தை அறிவது எப்போ -இந்த
வையகமே வுன்னை தேடி வாழ்துவதேப்போ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக