செவ்வாய், 28 ஏப்ரல், 2009

திருவள்ளுவர்


வான் புகழ் வள்ளுவன் நாடு -தன்னை
வாழ்கவென்றே நீ பாடு
தேன் மழை பொழிந்திடும் கூடு -ஈடு
தேடியும் கிடைக்குமோ கூறு

ஈரடி செய்யுளை வைத்து -வுலகம்
இயங்கிட வழிகளை சொன்னான்
சீரடி சிறப்பினை பாடி -மக்கள்
சிந்தையில் என்றுமே நின்றான்

அறம் பொருள் இன்பம் நாடி -அவன்
அருளிய அறிவுரை கோடி
மறந்து நீ வாழ்ந்திட வேண்டாம் -வெறும்
மாயையில் வுழன்றிட வேண்டாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக