திங்கள், 27 ஏப்ரல், 2009

கண்ணன்


கண்ணா என்றால் உருகாதா -வுள்ளம்
கள்வெறி
கொண்டு ஆடாதா
சொல்ல
இன்னிக்குமே வுன்நாமம் - திவ்ய
சுகத்தை
தருமே பலகாலம்

ஆயர்
பாடியில் புது பாட்டு -இந்த
அகிலம்
ரசிக்கும் அதை கேட்டு
மாய
கண்ணா என்ன விளையாட்டு -சூழும்
மாயை
அகலநீயே வழிகாட்டு

கோவர்த்தன கிரிதனை எடுத்தாய் -யாதவ
குலத்தை காத்திட குடை பிடித்தாய்
ஆவர்த்தனமாய்
காளிங்கன் தலையில் -நீ
ஆடிய
நடனம் அழகல்லவா

கோபியர்
நடுவிலே கோபாலன் -அவன்
குவலயம் காத்திடும் பூபாலன்
பாவிகளை
அழிப்பான் பரந்தாமன் -நல்ல
பக்தரை
காப்பான் அருட்சீலன்

கண்ணன்
திருவடி நினைமனமே -வந்த
கவலைகள் தீரும் அனுதினமே
எண்ணில்
அடங்காத பாசவலை -மண்ணில்
யாரும்
பெறலாம் இன்பநிலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக