
கண்ணா என்றால் உருகாதா -வுள்ளம்
கள்வெறி கொண்டு ஆடாதா
சொல்ல இன்னிக்குமே வுன்நாமம் - திவ்ய
சுகத்தை தருமே பலகாலம்
ஆயர் பாடியில் புது பாட்டு -இந்த
அகிலம் ரசிக்கும் அதை கேட்டு
மாய கண்ணா என்ன விளையாட்டு -சூழும்
மாயை அகலநீயே வழிகாட்டு
கோவர்த்தன கிரிதனை எடுத்தாய் -யாதவ
குலத்தை காத்திட குடை பிடித்தாய்
ஆவர்த்தனமாய் காளிங்கன் தலையில் -நீ
ஆடிய நடனம் அழகல்லவா
கோபியர் நடுவிலே கோபாலன் -அவன்
குவலயம் காத்திடும் பூபாலன்
பாவிகளை அழிப்பான் பரந்தாமன் -நல்ல
பக்தரை காப்பான் அருட்சீலன்
கண்ணன் திருவடி நினைமனமே -வந்த
கவலைகள் தீரும் அனுதினமே
எண்ணில் அடங்காத பாசவலை -மண்ணில்
யாரும் பெறலாம் இன்பநிலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக