
ஏடா மனிதா அறிவாயா - நான்
இதமாய் சொன்னால் தெரிவாயா
( ஏடா....)
நாளொரு பேச்சு பொழுதொரு வேஷம் -பல
நரிகள் போடும் நமக்கென கோஷம்
ஏழைகள் தலையில் ஏய்த்திடவருவார் - நம்
ஏழ்மை நீங்குமென எதெதோ தருவார்
( ஏடா....)
ஆனவரையில் உன் அடிகளில் விழுவார் - காரியம்
ஆனதும் உடனே அவசரம் மறைவார்
போனவர் வருவார் என புலம்பிட நின்றாய் - உன்
பொன்னான வாக்கினை புழுதியில் எறிந்தாய்
( ஏடா....)
குரங்கினில் இருந்து மனிதன் பிறந்தான் - இந்த
கொள்கை கோமான்களோ கூட்டணி தாவுவார்
கறந்திடும் கரன்சியே கயவரின் மூச்சு - அவர்
காலம் முழுவதும் பொழப்பாய் ஆச்சு
( ஏடா....)
தேர்தல் களத்தில் தெரிவோர் பலபேர் - நல்ல
சிந்தனை செய்து நீ தேர்ந்திடு சிலபேர்
மாறுதல் ஒன்றையே மனதிலே கொள்வாய்- நம்
மண்ணின் பெருமையை மகிழ்வுடன் காப்பாய்
( ஏடா....)
ஆனை சேனை வீண் பயம் எதற்கு - என்றும்
ஆக்கம் ஊக்கம் அதிகமே நமக்கு
பூனையாய் தினமும் பொருத்தது போதும் - அட
புறப்படு மனிதா புதுமையை நோக்கி
( ஏடா....)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக