
கண்ணன் தன்னை காதலித்தேன் - நான்
காலை மாலை தூது விட்டேன்
என் இதய வாசல் வரை -இன்னும்
எனொ கண்ணன் வரவில்லை
உண்ண மனம் ஒப்பவில்லை -நல்ல
வுறக்கம் என்னை பிடிக்கவில்லை
கண்ணில் எந்த ஒளியுமில்லை -அந்த
கண்ணன் வர வழியுமில்லை
கங்கை கரை தோட்டங்களில் -கூடும்
கன்னி மலர் கூட்டங்களில்
பொங்கி வரும் நிலவொளியில் -சின்ன
கண்ணன் போன இடம் தெரியவில்லை
கண்ணன் முகம் காணும் மட்டும் -நம்
கன்னி தமிழ் வாழுமட்டும்
பெண்ணின் மனம் நினைத்திருக்கும் --இந்த
பெருமை ஒன்றே நிலைத்திருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக