திங்கள், 27 ஏப்ரல், 2009

கண்ணன் என் காதலன்


கண்ணன் தன்னை காதலித்தேன் - நான்
காலை
மாலை தூது விட்டேன்
என்
இதய வாசல் வரை -இன்னும்
எனொ
கண்ணன் வரவில்லை

உண்ண
மனம் ஒப்பவில்லை -நல்ல
வுறக்கம்
என்னை பிடிக்கவில்லை
கண்ணில்
எந்த ஒளியுமில்லை -அந்த
கண்ணன்
வர வழியுமில்லை

கங்கை
கரை தோட்டங்களில் -கூடும்
கன்னி
மலர் கூட்டங்களில்
பொங்கி
வரும் நிலவொளியில் -சின்ன
கண்ணன்
போன இடம் தெரியவில்லை

கண்ணன்
முகம் காணும் மட்டும் -நம்
கன்னி
தமிழ் வாழுமட்டும்
பெண்ணின்
மனம் நினைத்திருக்கும் --இந்த
பெருமை
ஒன்றே நிலைத்திருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக