வியாழன், 9 ஏப்ரல், 2009

ஆடு பாம்பே


ஆடுபாம்பே அழகாய்ஆடுபாம்பே -இந்த
அண்டங்கள்நடுங்கிடவே ஆடுபாம்பே
நீடுதுயில் நீக்கவந்த நிலவு போல -உன்
நெற்றியிலே படம் எடுத்து ஆடுபாம்பே


ஆலாலம் வுண்டதனால் நீலகண்டன் ஆனான் -அந்த
அன்னை சிவகாமிகோ அணி கலன் ஆனாய்
நீலமேக மாலனுக்கோ குடை நீயே -நம்
வேழமுக கனபதிகோ கங்கனமானாய்


பாம்பென்று சொன்னாலே படை நடுங்கும் -தூய
பார்வை பட்டாலே வந்த பிணி ஒடுங்கும்
சோம்பல்இல்லா வாழ்வன்றோ சுகம் கொழிக்கும் -இதை
சொல்லி தினம்நீசுழன்று ஆடுபாம்பே


வில் விஜயன் தனை அழிக்க கனையுமானாய் -வெற்றி
வீரன் கர்ண வள்ளலுக்கோ துனையுமானாய்
பல் இரண்டில்வுயிர் பறிக்கும் பொருளுமானாய் -என்றும்
நான்பாடி சீர்பெறவே அருளுமானாய்


கற்புடைய மன்கயர்க்கு காவல் ஆனாய் -தமிழ்
காவியத்தில் வாழ்கின்றகவிதை யானாய்
அற்புதங்கள் செய்யும் சித்தரோ வுன்வுருவம் -எனவே
அவனியெங்கும் பவனி வா அழகு பாம்பே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக