ஞாயிறு, 28 ஜூலை, 2013

pillaiyaarpatti pillaiyaar

காணிக்கை  அளிப்போரும்
 கைகூப்பி  தொழுவோரும்
 மாணிக்க  விநாயகா
உன் மகிமை  என்னசொல்வேன்

உலகம்  காப்பதற்கு
 உச்சிப்பிள்ளை  நீயல்லவா
 பெயர்பெற்று  விளங்கும்
 பெருமானே  சரணமையா

 உடைபடும் தேங்காயும்
 உன்னத  மாலைகளும்
 நடைதனில் கிடப்பதனை
 நாங்கள்  அறிவோமே

 திருவரங்கத்து  பெருமாள்
 திருவுளம்  அறிந்ததினால்
 சிறுவனாய்  வந்து நீயும்
 சீரான  உதவி  செய்தாய்

 அரங்கன்  துயில்கொள்ள
 அழகான பாம்பணையும்
 ஆராரோ  பாடுகிறாள்
 அழகுமகள்  காவிரியாள்

 காவிரியும்  கொள்ளிடமும்
 கலக்கும்  திருவிடத்தில்
 அரங்கன்  கண்மலரும்
 அழகுதனை  என்னசொல்ல

 மாமன் துயிளிருக்க
 மருமகன்  மலையிருக்க
 சேமம்  பலபெற்று
 சிறப்பொடு  வாழ்வோமே

kanna

கண்ணா வருவாய்
 கவிதை  தருவேன்
 உன்னால்  தானே
 உன்னதம்  அடைவேன்

 எண்ணால் எழுத்தால்
 இருப்பவன்  நீயே
 மண்ணைத்  தின்றே
 மகிமைகள் செய்தாய்

 அலைமேல்  துயிலும்
 அழகன்  நீயே
 மலைமேல் நிற்கும்
 மாலவன்  நீயே

 கீதைப்  பொருளின்
 சாரம்  நீயே
 வேதம்  நான்கிலும்
 விளக்கமும்  நீயே

 கோபியர்  கூட்டம்
 கொஞ்சிடும் கோபாலா
 பாவியை  வதைக்கும்
 பரம்பொருள்  நீயே

 வருவாய்  வருவாய்
 வருவாய்  கண்ணா
 வளமே  வாழ்வில்
 நிறைவாய்  கண்ணா

 தினமும் உன்னையே
 தொழுவேன்  கண்ணா
 தேனின்  சுவையாய்
 திகழும்  கண்ணா

 உளநாள்  வரைக்கும்
 உனைநான் பணிவேன்
 உன்னடி  நிழலில்
 என்னைநீ  காப்பாய்

 வந்தவர்  உலகில்
 வரிசைகள்  கோடி
 வள்ளல்  சேவடி
 வருவேன்  நாடி 

murugaa


 வருவாய்  முருகா
 மனைவியர்  உடனே
 தருவாய்  முருகா
 சகலமும்  நலமும்

 அழகா  முருகா
 அம்ழ்தெனும்  தமிழே
 பழமுதிர் சோலை
 பதிவாழ்  அரசே

 செந்தூர் தனிலே
 செந்திலாய்நின்றாய்
 சேவல்  கொடியுடன்
 ஜகமே  வென்றாய்

 வயலூர்  தனிலே
 வாழும்  குமரா
 பயமே  வருமா
 பணிவார்  தமக்கே

 தணிகை மலையில்
 தர்மம்  காத்தாய்
 தாரணி  போற்றும்
 தகவினை  கொண்டாய்

 பழனி  மலையில்
 பழமாய்  நின்றாய்
 பக்தரைக்  காத்திடும்
 பக்குவம்  ஆனாய்

 கந்தா  கடம்பா
 கதிர்வேல்  முருகா
 சிந்தையில்  வாழும்
 செல்வக்  குமரா

 தமிழில் பாடியே
 தாளடி  பணிந்தேன்
 தனயனைக் காத்திட
 தமிழாய் வருவாய்

 உந்தனைப்  பாடிட
 என்னநான்  செய்தேன்
 எந்தனை  ஆளும்
 எழிலுடை  வேலா 

ஞாயிறு, 14 ஜூலை, 2013

punnai nalloor maari

தென்னை  வளம்  சூழ்ந்திருக்கும் -நல்ல
 தெம்மாங்கு  பாட்டு  கேட்கும்
 அன்னை முகம்  அருள்சுரக்கும் -எங்கள்
 அழகு புன்னை  மாரி யம்மா

 ஓங்கார  ஒலி  முழங்க -எங்கும்
 உடுக்கை  சப்தம்  தாளமிட
 பாங்காக  கொலு விருக்கும் -அந்த
பரம  சிவன்  நாயகியே

 தெண்டனிட்டு  வணங்கி  நிற்போம் -தினம்
 திருவிளக்கு  பூசை  செய்வோம்
 மண்டலத்தை  ஆண்டு நிற்கும் -சிறு
 மாயக்  கண்ணன் சோதரியே

 வேப்பிலையை  கையில் வைத்து -உலகில்
 விந்தை  பலவும்  செய்பவளே
 தப்பு  செய்த  கொடியவரை -நாளும்
 தண்டிக்க  வந்த  காளி நீயே

 கர்பத்தைக்  காத்து  நிற்கும் -தூய
 கர்ப்ப  ரட்சகி  தாயே
 அற்புதங்கள் நிகழ்த்தி  ஆளும் -இனிய
 ஆலவாய்  அழகி  நீயே

 பிள்ளை   அழைத்த  குரல் -ஏனோ
 பெருந்  தேவிநீ   கேட்கலையோ
 எல்லை  இல்லா  கருணையோடு -இன்றே
 எமைக்  காக்க  வாருமம்மா

seemaatti

இரவு  முழுதும்  விழித்தேன் -என்
 இமையில்  வைத்து  ரசித்தேன்
 உறவு வேண்டி  துடித்தேன் -நான்
 உன்னைத் தேடியே பிடித்தேன்

 பட்டப்  பகலில்  தூக்கம் -அந்த
 பாவை  பற்றியே நோக்கம்
 வெட்ட  வெளியில்  நடக்கும் -அதனை
வெளியே  சொல்லிட  தயக்கம்

 கண்கள்  தேடும் தினமும் -புதிய
 கவலை  கொள்ளுமே  மனமும்
 உன்னிடம்  உள்ளது  நற்குணமும் -நான்
 நீயின்றி இருப்பேனோ  ஒருகணமும்

 நீயல்லால் எனக்கில்லை  வாழ்வு -என்
 நிம்மதி  நீயின்றி  தாழ்வு
பாயென்ரு  சொன்னாலோ படுக்கை -என்
 பத்தினி  கையில்  நான் உடுக்கை

 நில்லென்று சொன்னாலும்  நிற்பேன் -நீ
 நிலவினைக்  கேட்டாலும்  கொடுப்பேன்
 தள்ளேன்று  சொன்னாலோ  தகிப்பேன் -உன்னை
 தலைமேலே  வைத்தே  துதிப்பேன்


 யாரெதிர்  சொன்னாலும் கேளேன் -இந்த
 இளமை  போனாலும் வாழேன்
கூரிய  வேல்விழி  காட்டி -என்னைக்
 கொல்லாதே  அழ்குச்  சீமாட்டி


manakkuranku

திருநாள்  தன்னில்  உனைக்  கண்டேன் -உன்
 திருமுக  அழகில்  மனம் கொண்டேன்
 வருநாள்  எதுவென  தினம் நொந்தேன் -என்
 வாழ்வே  நீயென  திடம் வைத்தேன்

 வில்லேனத்  தெரிவது  உன் புருவம் -பலர்
 வியந்து  பார்ப்பது  உன்  உருவம்
 துள்ளும்  அழகு  திகழ்  பருவம் -பிறர்
 துடிப்பதை  ரசிப்பது உன் கருவம்

 நாலடி  நடந்திடக்  கால்  வலிக்கும் -நீ
 நாவினால்  பேசினால் வாய்  மணக்கும்
நூலெனும்  இடையோ தினம் கணக்கும் -நாவில்
 நின்பெயர்  சொல்லிட  தேன்  சுரக்கும்

கைப்பிடி  உள்ளது  உனது இடை -எனது
கவனம்  இழப்பது  நினது சடை -
விற்பனை  செய்திட  வைத்த கடை - இனி
விலகி  ஓடுதே  எனது படை

அம்பினால்  துளைத்தது  எனது  உடல் -நீ
 ஆழம்  கண்டிடா  அழகுக் கடல்
 வெம்பித்  துடிப்பது  எனது மனம் -வீணே
 விலகி  ஓடுதல்  என்ன குணம்

 நானோ  தெருவில்  தினம் அலைந்தேன் -என்
 நாயகி  உன்னிடம் ஏன் தொலைந்தேன்
 மானே  மரகதமே  மனம்  இரங்கு -உனது
 மடியைத் தேடுது  என் மனக்குரங்கு

mannavaa

உலகம்  என்பது  உனதல்லவா -என்
 உள்ளம்  உனதுகோயில்லல்லவா
 நிலவும்  காற்றும்  நீயல்லவா -உன்னை
 நினைக்க  இன்பம்  வருமல்லவா

 கடலில்  அலையும்  நீயல்லவா -இங்கு
 கன்னித் தமிழின்  தாயல்லவா
 உடலில் உயிரும்  போலல்லவா -என்றும்
 உலகில்  தெரியும் நிஜமல்லவா

 வாழும்  காலம் நீயல்லவா -நமக்கு
 வாழ்வு தரும் பொருள்ளல்லவா
 தாழ்வும் உயர்வும்  வருமல்லவா -மண்ணில்
 தர்மம்  காக்கும் நிலையல்லவா

 கற்பு  என்பது  பெண்ணல்லவா -எங்கும்
 காலம் நேரம்  சரியல்லவா
 அற்புதம்  என்பது உணர்வல்லவா -நல்ல
 அழகன்  என்பதும் உண்மையல்லவா

 ஆசை என்பது தீதல்லவா -மன
 அமைதி  என்பது நிறையல்லவா
 வேஷம்  போடுதல்  தவறல்லவா -இனி
 விவரம்  அறிதல்  நலமல்லவா

 கருணை என்பது  நீயல்லவா -அந்த
 கண்ணன் பெயரும் உனதல்லவா
எண்ணித  துதிப்பது  நானல்லவா -நான்
 எல்லாம்  பெற்றிட  வா மன்னவா 

padumai

நிலவை  வானம்  வெறுக்குமோ -நம்
 நிழலை  பூமி மறுக்குமோ
 கடலை  அலைகள் வெறுக்குமோ -நல்ல
 கவிதை  என்றும் கசக்குமோ

 கண்கள்  காதல்  வெறுக்குமோ -விழி
 காணும்  காட்சி  மாறுமோ
 பெண்கள்  ஆசை  குறையுமோ -உலகில்
 பெருமை  சிறுமை ஆகுமோ

 அழகு  என்பது  நிலைக்குமோ -உண்மை
 அன்பு என்பது  குறையுமோ
 பழக  நட்பு  தவறுமோ -நல்ல
 பாதை எதுவெனப்  புரியுமோ

 நீர்   நிலையாய்  நிற்குமோ -கொண்ட
 நேசம்  மோசம் செய்யுமோ
 வேர்  மரமாய்  ஆகுமோ -நிலைத்த
 வெற்றி  தோல்வி  காணுமோ

 மேகம்  பூமியை  தொடுமோ -விரிந்த
 வானம்  என்றும்  சுருங்குமோ
 காகம்  கருமை மாறுமோ -வெறும்
 கானல் கைகளில்  சேருமோ

 முதுமை  இளமை  ஆகுமோ -வரும்
 மோகம் முழுமை  கொள்ளுமோ
 பதுமை  படைகளை  கொல்லுமோ -அறிவுப்
 பசியை  சோம்பலும் வெல்லுமோ 

tamil

தாயாம்  தமிழைப்  பாடுவேன் -என் 
 தலைவன்  நீயென  ஆடுவேன் 
 வாயால்  நல்லன பேசுவேன் -கொடிய 
 வன்முறை தவறெனக் கூறுவேன் 
 
 உறவின் பெருமை  சொல்லுவேன் -உயர் 
 குணம்  அனைத்தையும் அள்ளுவேன் 
 திறமையால்  பெரும் பணம்  ஈட்டுவேன் -உன் 
 திருவடி மேலெனக் காட்டுவேன் 
 
 நிலவில் மாந்தர்  நடப்பதும் -நாம் 
 நினைக்கையில்  விண்ணில்  பறப்பதும் -இங்கு 
 வளர்ச்சி  தந்திட்ட  மலர்ச்சியே -இதை 
 எண்ணிட  வருவது மகிழ்ச்சியே 

paravai

அறிவால்  உன்னைக் கண்டேன் -தமிழ்
 அமுதாம்  தேனை  உண்டேன்
 சிறகால் வானம்  செல்வேன் -பின்
 சிலநாள்  திரும்பி  வருவேன்

 கடலைக்  கடந்து பறப்பேன் -வந்த
 கவலை  யாவும் மறப்பேன்
 உடலை உடமை  துறப்பேன் -தூய
 உன்னடி மலராய்  கிடப்பேன்

 பறவை போலவே திரிந்தேன் -வரும்
 பசி  தூக்கமும்  மறந்தேன்
 உறவை  பகையை  பிரிந்தேன் -என்றும்
 உன்புகழ்  பாடவே  நினைந்தேன்

 நன்றி  மறந்தோர் நடுவே -நான்
 நலமாய்  நற்பணி  புரிவேன்
 அன்றும் இன்றும்  என்றுமே -நல்ல
 அன்புதான் உலகினை  ஆளுமே

 பெண்ணின் உயர்வினைப்  போற்றுவேன் -அவர்கள்
 பெருமையால்  வாழ்ந்திட  தூண்டுவேன்
 கண்ணாம்  கற்பென  சாற்றுவேன் -வரும்
 காலங்கள்  நமதென  மாற்றுவேன் 

naayagi kalaiezhil

நலம்  தரும்  நாயகியே  அம்மா -நான்
 உன்னை பாடிட  வரம் தருவாய் அம்மா
 இதம் பெரும் சுகமெலாம் உன்னருளே -நீ
 எளியரைக்  காத்திட  வரம் அருள்வாய்

 மலையத்துவசன்  பெற்ற எங்கள் மகராசியே -எங்கள்
 மாநகர்  மதுரையில்  உந்தன் அரசாட்சியே
 கலைமிகு  காஞ்சி  ஆளும் காமாட்சி-தமிழ்
 கவிதைப்  பொருளில்  வாழும்  காந்திமதி

 சமயபுரம்  கோயில்  கொண்ட மகமாயி -நீ
 அபயகரம்  தந்து  காக்கும்  அருள்மாரி
 இமயவான்  பெற்ற எங்கள் இளவரசி -அந்த
 எல்லா  உலகம் முழுவதுன்  அருளாசி

 பாவினில்  பாடி  வைத்தேன்  பத்ரகாளி -கொடும்
 பாவிகளை  அழிப்பதில்  நீயோ  படுசூலி
 அண்டத்தை  ஆட்டி வைக்கும்  ஆதிசக்தி -அந்த
 ஆலமுண்ட சிவனாரின்  பாதி  நீயே

 சீர்நடை நடந்து  வரும் சீமாட்டி -எமது
 ஜீவன் கடைத்தேற  வரும் வழிகாட்டி
 பேருடன் வாழ்வு தரும் பெருமாட்டி -இந்த
 பிள்ளையை  வாழ  வைப்பாய் அருள்கூட்டி

 என்ன தவம் செய்த  தாலே -இந்த
 மண்ணில் நாம் பிறந்து வந்தோம்
 கண்ணனுக்கு பின்னே  பிறந்த கற்பகமே -அடியேன்
 கவிதையில்  நின்னைப்  பாட அற்புதமே

சனி, 13 ஜூலை, 2013

thiruvadi

அறிவால்  உலகம்
 அறிந்தேன்  இந்நாள்
 ஐயா  நீதான்
அணைப்பாய்  எனையே

 விதியே  என்று
 வினையால்  வந்தேன்
 கதியே  பெறவே
 கவிதை வடித்தேன்

 துதியே செய்வேன்
 தூயா  உன்னையே
 நிதியே  அருள்வாய்
 நேரில்  வருவாய்

 தமிழால் வளர்ந்தேன்
 தாயால் செழித்தேன்
 அமிழ்தாம் உன்னையே
 அன்பால் பணிவேன்

 நன்றி  நினைத்தேன்
 நாயாய் உழைத்தேன்
 அன்றும் என்றும்
 உன்னருளால்  வாழ்வேன்




பேரும்  புகழும்
 பிரிவும் சுகமும்
 சீராய்  எனக்கு
 தந்தாய்  நீயே

 பெண்ணால் பிறந்தேன்
 பெருமை அடைந்தேன்
 உன்னால்  அன்றோ
 உலகில் மலர்ந்தேன்

 கண்ணா உன்னிடம்
 கருணை இலையோ
 என்னைக் காக்க
 என்றுநீ  வருவாய்

 அந்நாள்  காண
 ஆசை மிகுதே
 அருளே  திருவே
 அடியேன் சரணம்

 கண்ணன்  திருவடி
 காக்கும் மறுபடி
 அதனைப்  பற்றியே
 அனைத்தும் பெறுவேன் 

sinthanai

காலம்  மாறிப் போனாலும் -அந்தக்
 கடவுள்  என்னை அழைத்தாலும்
ஞாலம்  என்பது உள்ளவரை -நானும்
 தமிழால் நிலைத்து நிற்ப்பேன்


 இரவும்  பகலும்  எனக்கில்லை -வரும்
 இன்ப  துன்பம்  இல்லாநிலை
 உறவும் பகையும் செல்லாது -உலகில்
 உண்மை  என்றுமே  மாறாது

 மாறும்  உலகம்  மாறிடவே -நம்
 மக்கள்  சிந்தனை செய்வாரே
 ஏற்றம்  இன்னும் பெறுவதற்கே -அவர்கள்
 இரவு  பகலாய்  உழைப்பார்கள்

 உழைப்பின் பலனை அடைவாரே -நாளும்
 உயரிய  நிலையினை பெறுவாரே
 கலக்கம்  இன்றியே மகிழ்வாரே -அந்த
 கண்ணனின் அருளால் உயர்வாரே

 பெண்ணின்  பெருமை அறிவாரே -வாழ
 பிழைகள்  எதுவும் செய்யாரே
 மண்ணின் குணத்தை  மதிப்பாரே -தாயை
 மதித்து  என்றும் நடப்பாரே

 நன்றி  என்பதை  மறவாரே -இங்கு
 நமக்கு  நாமென நினைப்பாரே
 ஒன்று  பட்டே  நிற்பாரே -என்றும்
 உண்மை வழியினில் நடப்பாரே

தமிழின்  பெருமை அறிவார்கள் -வெறும்
 தலைக்கனம் எதுவும் கொள்ளார்கள்
பொய்  என்பதே  தெரியார்கள் -இன்னும்
 பெரிய  புகழினைப் பெறுவார்கள்

suthanthiram

அந்தர   வானில்  பறந்து -வந்து
 அமெரிக்க  மண்ணை மிதித்துவிட்டேன்
 சுந்தர  மிகுந்த  சோலைகளே -நல்ல
 சுத்தமாய் இருக்கின்ற சாலைகளே

 ஆண்டது  ஆங்கில  அரசாங்கம் -அதனை
 அடியோடு  எதிர்த்தது  மக்கள் படை
 மீண்டது சுதந்திரம் நாட்டினிலே -இதனை
 மேதினி அறிந்தது விரைவினிலே

 ஆணும் பெண்ணும் சமஉரிமை -இதை
 அறிந்து நடப்பது  நம்பெருமை
 தேனினுமினிய   மொழி பேசி -பலர்
 சேர்ந்து  வாழ்தலை கண்டேனே

 எந்த  துறையிலும்  முதலிடமே -உள்ள
 எல்லா  ஆற்றலும் இவ்விடமே
 சொந்தம் போலவே நம்மிடமே -தினம்
 சோதரராய்  வாழ்வதும் இவர் குணமே

 வானம்  அறிந்தது  இவராற்றல் -சிலர்
 வைது  தீர்ப்பது   பெரும் கூச்சல்
ஞானம்  இன்னும் பெறுவதற்கே -நமது
 நாட்டிற்கு இன்னமும்  வருகின்றாரே

 இவரைப் போலவே நாமுயர்வோம் -நம்
 இந்தியா  வளர்ந்திட உழைத்திடுவோம்
உள்ளதை  நாட்டிற்கு ஈந்திடுவோம் -உலகில்
 உன்னத நிலையினை பெற்றிடுவோம் 

வியாழன், 4 ஜூலை, 2013

Enthiya naadu

வாழ்க  வாழ்க  வாழ்க  வாழ்கவே -நம்
 வள்ளலார் பிறந்த பழம் பெரு நாடு
 சூழம்  நல்வளங்கள்  துலங்கும்  நாடு -இனிய
 சுதந்திரம் கண்ட  இந்திய  நாடு

 அன்பும் அறிவும்  நிறைந்த  நாடு -தூய
 அருளிலே உலகை ஆளும் நாடு
 அண்ணல்  காந்தி  பிறந்த நாடு மனித
 ஆற்றலும் உஊக்கமும் வளர்த்த  நாடு

 துன்பம் நீங்கிட தொழில்கள் ஓங்கிட -கை
 தொட்டது  யாவும் துலங்கும்  நாடு
 மண்ணில் பொன்னை  விளைக்கும்  நாடு -நல
 மங்கையர் கற்பினை  மதிக்கும்  நாடு

 சிங்க  மறவர்  சிலிர்க்கும்  நாடு -தமிழ்
 செம்மொழி பெருமை  செறிந்த  நாடு
 மங்கல  நதிவளம்  பொங்கிடும்  நாடு -இந்த
 மாபெரும்  நாடிதை  மதித்து  நீபாடு

  இறையின் பெருமை  அறிந்திட்ட  நாடு -என்றும்
 ஈகையில் எவரையும்  இணைக்கும்  நாடு
 குறையை  நிறையென  கொள்ளும்  நாடு -இங்கு
 கொடிய   பசிப்பிணி   தீர்த்திடும்  நாடு

 புத்த்ர்  பிறந்த  புண்ணிய  நாடு -நமது
 போதி  தர்மர்  வாழ்ந்த  வீடு
 சத்திய  நெறி  சார்ந்த  நாடு --மனதில்
 சமத்துவ  எண்ணம்  மலர்ந்த  நாடு

 எங்கும் எதிலும்  எமது  நாடு -இன்னும்
 ஏற்றம்  பெற்றிட  இனியென  தேடு
 பொங்கும்  கடல்கள்  சூழும்  நாடு -பல
 புதுமையில்  உலகையே  வெல்லும்  நாடு 

sorkkam

அலையாடும்   நீரில் -சிறு
 படகு   ஓடும்
 அழகான  பெண்மேல் -நம்
 விழிகள்  தேடுமே

 கலையான  கல்கூட -பின்பு
 சிலை  ஊகுமே ஆகுமே
 காதல்  பெயரும் -உலகில் -
 என்றும்  நிலையாகுமே

 வரவென்று  வந்தால் -இங்கு
 அதுவும்  செலவாகுமே
 வாழ்கவென சொன்னால் -நம்
 வளம்   கூடுமே

 நிலையாக  எதுவும் -மண்ணில்
 நிஜம்  ஆகலாம்
 நேரில்  தெரியும் -நீர்
 குமிழ்கள்  மறைவாகலாம்

 ஆணென்று  வந்தால் -அங்கு
 பெண்  தோன்றுமே
 தானென்று  ஆடினால் -முடிவில்
 தலை  தாழுமே

 கற்பென்று  சொன்னால் -நெஞ்சில்
 களி   கூடுமே
 காணாத சொர்க்கம் -நமக்கு
 கைவரக்  கூடுமே

 இருளென்று  வந்தால் -நல்ல
 ஒளி     பரவுமே
 இறைவனென்று துதித்தால் -உரிய
 வழி     காணலாம்