வியாழன், 30 ஏப்ரல், 2009

ஆண்டாள்


ஆண்டாள் வுன்னை நானும் பாடினேன் -வுன்
அழகிய திருவடி பற்றி வேண்டினேன்
தூண்டா மணிவிளக்கு நீ தமிழிற்கு -தினம்
தொழுது நலம் பெறுவேன் என் வாழ்விற்கு

அல்லிப்புதூர் எனும் அழகிய ஊரிலே -அன்று
அம்மா வந்து நீயும் பிறந்தனை
கல்வி கேள்வியில் சிறந்து வளர்ந்தனை -அந்த
கண்ணன் மீதில் காதல் கொண்டனை

முகுந்தா முகுந்தா வென மோகனம் பாடினை - கனவில்
முரளியை நினைத்து மனம் வாடினை
வரம்தா வரம்தாவென வாசல் ஓடினை -ஒரு நாள்
வருவான் கண்ணனென கண்ணால் தேடினை

சூடிகொடுத்து சுடர்கொடியாகினை -அதனால்
சொக்கி மாலும் வுன்னை மணந்தனன்
தேடிய தெய்வம் மனம் இசைந்தது -இந்த
தரிசனம் மண்ணில் பலருக்கும் கிடைத்தது

தமிழிற்கு புது மெருகு தந்தனை -இசை
தாளத்திற்கு பல பாடல்கள் பிறந்தன
அமுதிற்கு மேலாய் இன்றும் இனிக்குது -என்
அம்மா வுன்னை எப்படி நானும் மறப்பது

புதன், 29 ஏப்ரல், 2009

பாரம்



கொள்ளை
அடித்தவன் வாழுறான் -அதற்கு
குறுக்கே நின்றவன் வாடுறான்
வெள்ளையை கறுப்பென்று சொல்லுறான் -அதை
விளக்கி திருத்தினால் வையுறான்

வுள்ளதைஅழித்திட துடிக்கிறான் -இருக்கும்
ஊரையே வளைத்திட நடிக்கிறான்
சொல்வதை கேட்டிட மறுக்கிறான் -தினம்
சோம்பலாய் வாழ்வினை கழிக்கிறான்

தன்னை நம்பிட தயங்குகிறான் -பெரிய
தலைவன் என்றிட மயங்குகிறான்
பொன்னை பொருளையே மதிக்கிறான் -சிறு
புழுவிற்கும் கீழாக இருக்கிறான்

போனதை எண்ணியே புலம்புறான்-வாழ்வில்
பொறுமையே கொள்ளாது தளும்புறான்
மானத்தை காத்திட மறக்கிறான் -வீணில்
மண்ணிற்கு பாரமாய் பிறக்கிறான்
சோம்பலாய் வாழ்வினை
சோம்பலாய்

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

வாழ்துவதேப்போ

நீதி கொன்ற நெஞ்சத்திற்கு நிம்மதி இல்லை - பொய்யை
நிலை நிறுத்த வந்தவர்க்கு நேர்மை இல்லை
பாதிவழி சுமந்தவர்க்கு பாரமொன்று மில்லை -தினம்
பழி நிறைய செய்பவர்க்கு பாவமொன்றில்லை

அன்பில்லா வுள்ளமடில் ஆண்டவரில்லை -அவன்
ஆடவைக்கும் நாடகத்தில் மீண்டவரில்லை
இன்பமிது என்று யாரும் விண்டவரில்லை -வுலகில்
இறந்த வை செல்லுமிடம் கண்டவரில்லை

பிறந்து வந்த நிலைநாடி பிதற்றும் கூட்டம் -இன்னும்
பேய்கள் கதை சொல்லிஇங்கு போடும் ஆட்டம்
வந்திருக்கும் காரணத்தை அறிவது எப்போ -இந்த
வையகமே வுன்னை தேடி வாழ்துவதேப்போ

திருவள்ளுவர்


வான் புகழ் வள்ளுவன் நாடு -தன்னை
வாழ்கவென்றே நீ பாடு
தேன் மழை பொழிந்திடும் கூடு -ஈடு
தேடியும் கிடைக்குமோ கூறு

ஈரடி செய்யுளை வைத்து -வுலகம்
இயங்கிட வழிகளை சொன்னான்
சீரடி சிறப்பினை பாடி -மக்கள்
சிந்தையில் என்றுமே நின்றான்

அறம் பொருள் இன்பம் நாடி -அவன்
அருளிய அறிவுரை கோடி
மறந்து நீ வாழ்ந்திட வேண்டாம் -வெறும்
மாயையில் வுழன்றிட வேண்டாம்

திங்கள், 27 ஏப்ரல், 2009

தேவதூதர்


தேவ தூதர் அழைக்கிறார் -மக்கள் திருந்தி வாழ அழைக்கிறார் பாபம் தீர்ந்திட வாருங்கள் -அந்த பரம் பொருள் ஒன்றென கூறுங்கள் கன்னி மேரி வயிற்றிநிலே -நம் கர்த்தர் வந்து பிறந்தாரே எண்ணி போற்றி பாடுங்கள் -என்றும் இனிய நல்வழி தேடுங்கள் சிலுவையில் அறைய மாய்ந்தவர் -இந்த செகத்தினில் மீண்டும் பிழைத்தவர் எளிமை அன்பு கொண்டவர் -வுலகில் எங்கள் இயேசு இனியவர்

கண்ணன் என் காதலன்


கண்ணன் தன்னை காதலித்தேன் - நான்
காலை
மாலை தூது விட்டேன்
என்
இதய வாசல் வரை -இன்னும்
எனொ
கண்ணன் வரவில்லை

உண்ண
மனம் ஒப்பவில்லை -நல்ல
வுறக்கம்
என்னை பிடிக்கவில்லை
கண்ணில்
எந்த ஒளியுமில்லை -அந்த
கண்ணன்
வர வழியுமில்லை

கங்கை
கரை தோட்டங்களில் -கூடும்
கன்னி
மலர் கூட்டங்களில்
பொங்கி
வரும் நிலவொளியில் -சின்ன
கண்ணன்
போன இடம் தெரியவில்லை

கண்ணன்
முகம் காணும் மட்டும் -நம்
கன்னி
தமிழ் வாழுமட்டும்
பெண்ணின்
மனம் நினைத்திருக்கும் --இந்த
பெருமை
ஒன்றே நிலைத்திருக்கும்

கண்ணன்


கண்ணா என்றால் உருகாதா -வுள்ளம்
கள்வெறி
கொண்டு ஆடாதா
சொல்ல
இன்னிக்குமே வுன்நாமம் - திவ்ய
சுகத்தை
தருமே பலகாலம்

ஆயர்
பாடியில் புது பாட்டு -இந்த
அகிலம்
ரசிக்கும் அதை கேட்டு
மாய
கண்ணா என்ன விளையாட்டு -சூழும்
மாயை
அகலநீயே வழிகாட்டு

கோவர்த்தன கிரிதனை எடுத்தாய் -யாதவ
குலத்தை காத்திட குடை பிடித்தாய்
ஆவர்த்தனமாய்
காளிங்கன் தலையில் -நீ
ஆடிய
நடனம் அழகல்லவா

கோபியர்
நடுவிலே கோபாலன் -அவன்
குவலயம் காத்திடும் பூபாலன்
பாவிகளை
அழிப்பான் பரந்தாமன் -நல்ல
பக்தரை
காப்பான் அருட்சீலன்

கண்ணன்
திருவடி நினைமனமே -வந்த
கவலைகள் தீரும் அனுதினமே
எண்ணில்
அடங்காத பாசவலை -மண்ணில்
யாரும்
பெறலாம் இன்பநிலை

முத்து மாரி


தேர் மீது வருகிறாள் தெய்வ முத்துமாரி
தெண்டனிட்டு வணங்கினால் சேரும் பலன் கோடி
ஊரெங்கும்
கோலங்கள் ஒளிவிளக்கு மேளங்கள்
வுல்லாசமாய்
சல்லாபமாய் ஓடியாடி பாடுங்கள்

சமயபுர
எல்லையில் சக்தியாக அமர்ந்தவள் சங்கரியாய்காளியாய் சரித்திரத்தை படைப்பவள்
அபயகரம்
அருளுவாள் அவளடியை தொழதிட்டால் அல்லலேல்லாம் பறந்திடும் அன்னையிடம்வந்திட்டால்

கண்ணபுர மண்ணை காக்கும் கற்பகமாய் ஆனவள் கண்ணொளியை தருவதில் காமதேனு போன்றவள்
விண்ணகத்தை ஆண்டிடும் விமலனுக்கு துணையவள் வேற்காட்டில் கருமாரியாய் வெற்றிமழை பொழிபவள்

சக்தி
பீட வரிசையில் சமயபுரம் முக்கியம்
சஞ்சலங்கள்
தீர்வதற்கு சக்திதானே நிச்சயம்
முத்திவழி
காண்பதற்கு மோனம்தானேதத்துவம்
மோகமதை
வெல்வதற்கு முத்துமாரி காரணம்

ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

காவல்

ஆணைகாவில் அரசாளும் -நல்
அம்பிகை தாயே ஈஸ்வரியே
மோனை பொருளே மூத்தவளே -என்றும்
முன்வந்து மக்களை காப்பவளே

தனியாய் நின்றாய் தவக்கோலம் -அந்த
தட்சன் மகள் நீ அருட்ஜாலம்
கனியாய்இன்னிப்பாய் நினைந்தாலே -இரு
கண்களில் மலர்வாய் ஒளியாலே

ஆடி வெள்ளி காலங்களில் -உனது
ஆலயம் நிறைவது அருட்கூட்டம்
பாடி அம்மா பணிந்திடுவார் -தினமும்
பணிந்ததனாலே நலம் பெறுவார்

நாவல் மரத்தின் அடியினிலே -அமர்ந்து
நல்லாட்சி புரிந்திடும் நாயகியே
காவல் துணையாக வரவேண்டும் -உனது
கருணை மழை யோ நிதம் வேண்டும்

கருணை

உந்தன்பாதம் பற்றிவிட்டால் -இந்த
வுலகில் துன்பம் ஓடிவிடும்
வந்த வினைமாறிவிடும் -என்றும்
வாழ்வில் இன்பம் கூடவரும்

சிவமென்று நினைக்க சீர்பெருவாய் -திரு
சீரலைவாய் சென்றால் சேர்ந்திடும் அற்புதமே
தவமிதை நீவுணர தத்துவம் புரியுமடா -அவர்
தாயாகி காக்கவரும் தர்மம் தெரியுமடா

ஏழைக்கு நன்மைகளை எப்போதும் செய்திடடா-நாம்
எல்லோரும் வாழ்கவென எண்ணமுனை நாடுமடா
காலை மாலை இருவேளை கண்ணனை தொழுதிடடா
கருணையால் நமை காப்பான் கவலைதனை விட்டிட்டா

மனமெனும் கோவிலிலே மாதவனை நினைதிடடா -அந்த
மாலவனின் பேர் சொல்ல மலர்ச்சி பெருகுமடா
தினமெல்லாம் ஆலயம் செல்வது நிம்மதியே -வந்த
தீவினைகள் பறந்துவிடும் தெய்வமுனை காத்துவிடும்

வியாழன், 23 ஏப்ரல், 2009

கணநாதர்


கணநாதர் தனை தினம் பணிவோம் -அவர்
கழலடி நினைந்தால் பலம் கொள்வோம்
வினைகளை தீர்ப்பதால்விநாயகராம் -நல்
வெற்றிதனை தருவதில் நாயகராம்

ஆற்றங்கரையோரம் குடிஇருப்பு -தம்பி
ஆறுமுகன் கல்யாணம் அவர் பொறுப்பு
போற்றிய அனைவர்க்கும் வுபசரிப்பு-அய்யன்
பொறுமைக்கு சக்திபோல் மறுபதிப்பு

கும்பிடும் அடியவர் குலம் காப்பார் -அவர்
குடும்பங்கள் வாழ்ந்திட நலம் சேர்ப்பார்
நம்பிக்கை கொண்ட நல்லவர்க்கும் -தன்
தும்பிக்கையால் துன்பம் நீக்குபவர்

புதன், 22 ஏப்ரல், 2009

திருமுருகன்


வயலூர் முருகன் வடி வேலன் -நல்
வரமே அருளும் குணசீலன்
பயமே இல்லை பணி ந்தாலே-அதிக
பலனே கிடைக்கும்மென்மேலே

வாரி வழங்கும் வள்ளலவன் -குற
வள்ளி மயங்கும் கள்வனவன்
கோரி அவனை நீ தொழுதால் -உன்
குலத்தை காப்பான் மால்மருகன்

அருணகிரிக்கு அருள் கொடுத்தான் -தனது
அடியவர்க்காக வேல் எடுத்தான்
தருணம் இதுவே வாமுருகாஎன்றும்
தாயாய் காப்பாய்திருமுருகா

எங்கும் பசுமை ஜாலங்களே -அது
இறைவன் அளிக்கும்கோலங்களே
தங்கவேலன் தனை நினைவோம் -அவன்
தாள் பணி ந்தால் சுகம் பெறுவோம்

திங்கள், 20 ஏப்ரல், 2009

சித்திரை

வருக சித்திரை வருகவே -வாழ்வில்
வளங்கள் நிறைய தருகவே
பெற்ற செல்வம் பெருகவே -தமிழின்
பெருமை யாவும் நிலைக்கவே


நெஞ்சம் முழுதும் நிறைகவே -உழவர்
நிலங்கள் விளைவு உயர்கவே
பஞ்சம் பிணிகள் மறைகவே -மனதில்
பகைமை எண்ணம் அகலவே

விலைகள் ஏற்றம் மலிகவே -தமிழர்
வீரம் பொங்கி பொலிகவே
கலைகள் மண்ணில் வளர்கவே -எங்கும்
கருணை எண்ணம் மலர்கவே

ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

காகம்


கன்னம்கரிய காகமே
காலை நீயும் கறைகிறாய்
தின்ன ஒன்றும் இல்லையோ
தீராக் கோபம் வந்ததோ


வற்றிய குடலாய்இருப்பினும்
வளமாய் நிறைய வுண்பினும்
ஒற்றுமை குறையா வாழ்விலே
வுனக்குநிகரில்லை மாந்தரும்


சுத்தத்தோடு இருந்திட
சுகமாய் தினமும் குளிக்கிறாய்
நிதம் நாங்கள் சிறந்திட
சீரிய நல்வழி காட்டுகிறாய்

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

கடலும் நிலவும்


அலைகள் நிரப்பிய பெருங்கடலில் -என்றும்
ஆயிரம் புதுமைகுடியிருக்கும்
நீல வானத்து நிலவினுக்கோ -இங்கு
நிதம் புதிய வுருவிருக்கும்


நதிகள் சேர்ந்திட கடலாகும் -அதில்
நன்மணி விளைந்திடும் நிலமாகும்
கலைகள் இணைந்தது நிலவாகும் -தினம்
காட்டிடும் கதைகள் பலவாகும்


பொங்கிய அலைகள் கூத்தாடும் -அதில்
புகுந்தவர் தனியே பந்தாடும்
அந்தர வானில் மிதந்து வரும் -நிலவு
ஆசையை மனதிலே தூண்டிவிடும்


கவிதைக்கு மையம் நிலவாகும் -பல
கற்பனை அங்கே பிறப்பாகும்
அமைதி இழந்தது கடலாகும் -அதன்
ஆழத்தை காண்பது அரிதாகும்

தோன்றிய காலமோ தெரியாது -இதன்
சூத்திரம் யாதென புரியாது
ஆண்டவன் தந்திட்ட அருட்செல்வம் -நாமிதை
அறிந்து நடந்திடல் நன்றாகும்

வியாழன், 16 ஏப்ரல், 2009

குணம்


ஆடி நடந்து வரும் அன்னமெனும் தமிழை
மூடி மறைக்கின்றனர் மூடமக்கள் -சாடியே
நடிக்கேடுதிடுவர் நல்லவர் போல் நடிப்பார்
கூடி கெடுக்குமாம் குணம்

வியாழன், 9 ஏப்ரல், 2009

ஆடு பாம்பே


ஆடுபாம்பே அழகாய்ஆடுபாம்பே -இந்த
அண்டங்கள்நடுங்கிடவே ஆடுபாம்பே
நீடுதுயில் நீக்கவந்த நிலவு போல -உன்
நெற்றியிலே படம் எடுத்து ஆடுபாம்பே


ஆலாலம் வுண்டதனால் நீலகண்டன் ஆனான் -அந்த
அன்னை சிவகாமிகோ அணி கலன் ஆனாய்
நீலமேக மாலனுக்கோ குடை நீயே -நம்
வேழமுக கனபதிகோ கங்கனமானாய்


பாம்பென்று சொன்னாலே படை நடுங்கும் -தூய
பார்வை பட்டாலே வந்த பிணி ஒடுங்கும்
சோம்பல்இல்லா வாழ்வன்றோ சுகம் கொழிக்கும் -இதை
சொல்லி தினம்நீசுழன்று ஆடுபாம்பே


வில் விஜயன் தனை அழிக்க கனையுமானாய் -வெற்றி
வீரன் கர்ண வள்ளலுக்கோ துனையுமானாய்
பல் இரண்டில்வுயிர் பறிக்கும் பொருளுமானாய் -என்றும்
நான்பாடி சீர்பெறவே அருளுமானாய்


கற்புடைய மன்கயர்க்கு காவல் ஆனாய் -தமிழ்
காவியத்தில் வாழ்கின்றகவிதை யானாய்
அற்புதங்கள் செய்யும் சித்தரோ வுன்வுருவம் -எனவே
அவனியெங்கும் பவனி வா அழகு பாம்பே

திங்கள், 6 ஏப்ரல், 2009

காதல்


காலம் யாவும் கடந்தது -இரு
கண்கள் வழியே பிறப்பது
மாலை வந்தால் மலர்வது -மக்கள்
மனதில் என்றும் நிற்பது



தென்றல் காற்றில் வளர்வது -நினைக்க
தீ போல நன்றாய் கொதிப்பது
ஒன்று பட்டால் இனிப்பது -முடிவில்
வுலகைஎதிர்க்கதுணிவது



கவிஞர் எழுத்தில் தெரிவது -நடிக்கும்
கலைஞர் வுருவம் புரிவது
ஆசை காட்டி இழுப்பது -நம்
அருகில் வந்தால் குளிர்வது



இயற்கை தந்த பொருளது -நல்ல
இன்ப தமிழிலும் இழைவது
அன்பு மனதில் அமர்வது -படைத்த
ஆண்டவன் தன்னையும் வென்றது

வெள்ளி, 3 ஏப்ரல், 2009

தனம்


நாயேன் மூடன் நயமுடன் பணிந்தேன்
பாமாலை சாற்றி பதமலர் போற்றினேன்
சேயேன்அடியேன் பெற்ற சீர்மிகு செல்வம்
தாயார் கொடுத்த தனம்

புதன், 1 ஏப்ரல், 2009

மனிதா


ஏடா மனிதா அறிவாயா - நான்
இதமாய் சொன்னால் தெரிவாயா
( ஏடா....)


நாளொரு பேச்சு பொழுதொரு வேஷம் -பல
நரிகள் போடும் நமக்கென கோஷம்
ஏழைகள் தலையில் ஏய்த்திடவருவார் - நம்
ஏழ்மை நீங்குமென எதெதோ தருவார்
( ஏடா....)


ஆனவரையில் உன் அடிகளில் விழுவார் - காரியம்
ஆனதும் உடனே அவசரம் மறைவார்
போனவர் வருவார் என புலம்பிட நின்றாய் - உன்
பொன்னான வாக்கினை புழுதியில் எறிந்தாய்
( ஏடா....)


குரங்கினில் இருந்து மனிதன் பிறந்தான் - இந்த
கொள்கை கோமான்களோ கூட்டணி தாவுவார்
கறந்திடும் கரன்சியே கயவரின் மூச்சு - அவர்
காலம் முழுவதும் பொழப்பாய் ஆச்சு
( ஏடா....)

தேர்தல் களத்தில் தெரிவோர் பலபேர் - நல்ல
சிந்தனை செய்து நீ தேர்ந்திடு சிலபேர்
மாறுதல் ஒன்றையே மனதிலே கொள்வாய்- நம்
மண்ணின் பெருமையை மகிழ்வுடன் காப்பாய்
( ஏடா....)

ஆனை சேனை வீண் பயம் எதற்கு - என்றும்
ஆக்கம் ஊக்கம் அதிகமே நமக்கு
பூனையாய் தினமும் பொருத்தது போதும் - அட
புறப்படு மனிதா புதுமையை நோக்கி
( ஏடா....)