புதன், 1 மே, 2019

கருணை 653

அப்பனைப்       பாடுவேன்      ---அவரின்
அருளினைப்     பெற வேண்டும்
என் அம்மையைப்      பாடுவேன்     ---நிறைய
பொருள்    தர வேண்டும்

எப்பவும்       பாடுவேன்    ---இங்கே
எனக்கு     எல்லாமும்    வேண்டும்
இகபர      சுகம்     நல்கிடும்    ---என்
இன்னரும்       தெய்வமே

அற்புத      உலகினை   ---அன்பால்
அமைத்ததும்       நீயே
ஆருயிர்      அனைத்தையும்     ---மண்ணில்
படைத்தவள்       தாயே

மண்ணிலே      உயிர்கள்    --வானத்து
மழையினால்      பயிர்கள்
எண்ணற்ற       நன்மைகள்    ---எங்கள்
இறைவனே      நீ  தந்தது

கன்னல்       தமிழால்    ---உந்தன்
கருணையைப்      பாடுவேன்
காலங்கள்     மாறிடினும்     ---தூய
காலடி      தனை மறவேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக