அப்பனைப் பாடுவேன் ---அவரின்
அருளினைப் பெற வேண்டும்
என் அம்மையைப் பாடுவேன் ---நிறைய
பொருள் தர வேண்டும்
எப்பவும் பாடுவேன் ---இங்கே
எனக்கு எல்லாமும் வேண்டும்
இகபர சுகம் நல்கிடும் ---என்
இன்னரும் தெய்வமே
அற்புத உலகினை ---அன்பால்
அமைத்ததும் நீயே
ஆருயிர் அனைத்தையும் ---மண்ணில்
படைத்தவள் தாயே
மண்ணிலே உயிர்கள் --வானத்து
மழையினால் பயிர்கள்
எண்ணற்ற நன்மைகள் ---எங்கள்
இறைவனே நீ தந்தது
கன்னல் தமிழால் ---உந்தன்
கருணையைப் பாடுவேன்
காலங்கள் மாறிடினும் ---தூய
காலடி தனை மறவேன்
அருளினைப் பெற வேண்டும்
என் அம்மையைப் பாடுவேன் ---நிறைய
பொருள் தர வேண்டும்
எப்பவும் பாடுவேன் ---இங்கே
எனக்கு எல்லாமும் வேண்டும்
இகபர சுகம் நல்கிடும் ---என்
இன்னரும் தெய்வமே
அற்புத உலகினை ---அன்பால்
அமைத்ததும் நீயே
ஆருயிர் அனைத்தையும் ---மண்ணில்
படைத்தவள் தாயே
மண்ணிலே உயிர்கள் --வானத்து
மழையினால் பயிர்கள்
எண்ணற்ற நன்மைகள் ---எங்கள்
இறைவனே நீ தந்தது
கன்னல் தமிழால் ---உந்தன்
கருணையைப் பாடுவேன்
காலங்கள் மாறிடினும் ---தூய
காலடி தனை மறவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக