உலகாளப் பொதுநீதி உருவானது ---மண்ணில்
உழைப்பவர் குரலே முதலானது
விளைக்கின்ற பொருளெல்லாம் அவராலானது ---சிந்தும்
வியர்வையே அவர்பங்கு முதலானது
கல்லுடைப்போர்க்கும் நெஞ்சில் கவலையுண்டு ---அவரது
கண்ணீரை துடைப்பதில் நமக்கென்ன நஷ்டமுண்டு
அல்லும் பகலும் உழைப்பது தெரியாதா ---அவர்கள்
அயர்ந்தாலே நம்நிலை என்னவெனப் புரியாதா
மாட மாளிகை உயர் மச்சுவீடுகள் யாராலே ---தினம்
மாடாய் வெய்யிலில் உழைத்து தேய்பவராலே
தேடிச் சென்று நாமும் உதவி கள் செய்திட வேண்டாமா ---இந்த
ஜகத்தினை இனியேனும் நாமும் மாற்றிடக் கூடாதா
குடிசை வீட்டிற்கும் ஒளியைக் கொடு ---அவர்
குடும்பங்கள் வாழ்ந்திட வழியைக் காட்டு
அடிமை எண்ணமதை இன்றேனும் விலக்கி விடு ---நாம்
அனைவரும் சரிசமமென இங்கே வாழ்ந்துவிடு
உழைப்பவர் நன்றாய் வாழ்ந்த்திட உறுதி ஏடு ---உன்
மனவாசல் பிறர்க்கென திறந்து விடு
களைக்கின்ற ஏழைக்கும் உந்தன் கையைக் கொடு ---அவரது
கண்ணீரை மாற்றி சுகம் பெற புதுவாழ்வு கொடு
(மே தின சிறப்புப் பாடல் )
உழைப்பவர் குரலே முதலானது
விளைக்கின்ற பொருளெல்லாம் அவராலானது ---சிந்தும்
வியர்வையே அவர்பங்கு முதலானது
கல்லுடைப்போர்க்கும் நெஞ்சில் கவலையுண்டு ---அவரது
கண்ணீரை துடைப்பதில் நமக்கென்ன நஷ்டமுண்டு
அல்லும் பகலும் உழைப்பது தெரியாதா ---அவர்கள்
அயர்ந்தாலே நம்நிலை என்னவெனப் புரியாதா
மாட மாளிகை உயர் மச்சுவீடுகள் யாராலே ---தினம்
மாடாய் வெய்யிலில் உழைத்து தேய்பவராலே
தேடிச் சென்று நாமும் உதவி கள் செய்திட வேண்டாமா ---இந்த
ஜகத்தினை இனியேனும் நாமும் மாற்றிடக் கூடாதா
குடிசை வீட்டிற்கும் ஒளியைக் கொடு ---அவர்
குடும்பங்கள் வாழ்ந்திட வழியைக் காட்டு
அடிமை எண்ணமதை இன்றேனும் விலக்கி விடு ---நாம்
அனைவரும் சரிசமமென இங்கே வாழ்ந்துவிடு
உழைப்பவர் நன்றாய் வாழ்ந்த்திட உறுதி ஏடு ---உன்
மனவாசல் பிறர்க்கென திறந்து விடு
களைக்கின்ற ஏழைக்கும் உந்தன் கையைக் கொடு ---அவரது
கண்ணீரை மாற்றி சுகம் பெற புதுவாழ்வு கொடு
(மே தின சிறப்புப் பாடல் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக