புதன், 1 மே, 2019

சரிசமம் 654

உலகாளப்       பொதுநீதி      உருவானது     ---மண்ணில்
உழைப்பவர்     குரலே      முதலானது
விளைக்கின்ற    பொருளெல்லாம்     அவராலானது   ---சிந்தும்
வியர்வையே       அவர்பங்கு       முதலானது

கல்லுடைப்போர்க்கும்    நெஞ்சில்     கவலையுண்டு    ---அவரது
கண்ணீரை   துடைப்பதில்   நமக்கென்ன    நஷ்டமுண்டு
அல்லும்    பகலும்     உழைப்பது      தெரியாதா    ---அவர்கள்
அயர்ந்தாலே      நம்நிலை    என்னவெனப்      புரியாதா

மாட      மாளிகை   உயர் மச்சுவீடுகள்     யாராலே   ---தினம்
மாடாய்      வெய்யிலில்   உழைத்து    தேய்பவராலே
தேடிச்     சென்று     நாமும்     உதவி கள்   செய்திட    வேண்டாமா ---இந்த
ஜகத்தினை    இனியேனும்      நாமும்      மாற்றிடக்      கூடாதா




குடிசை       வீட்டிற்கும்       ஒளியைக்     கொடு     ---அவர்
குடும்பங்கள்      வாழ்ந்திட     வழியைக்     காட்டு
அடிமை      எண்ணமதை     இன்றேனும்    விலக்கி    விடு   ---நாம்
அனைவரும்     சரிசமமென    இங்கே      வாழ்ந்துவிடு

உழைப்பவர்    நன்றாய்     வாழ்ந்த்திட      உறுதி ஏடு   ---உன்
மனவாசல்   பிறர்க்கென     திறந்து  விடு
களைக்கின்ற     ஏழைக்கும்    உந்தன்     கையைக்    கொடு  ---அவரது
கண்ணீரை     மாற்றி  சுகம் பெற    புதுவாழ்வு      கொடு
(மே   தின    சிறப்புப்    பாடல் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக