வியாழன், 16 மே, 2019

சேடி 662

நிலவுப்      பெண்ணும்       வருமா   ---நான்
நினைத்த     இன்பமும்     தருமா
பழகிட      நினைத்தால்     சுகமே   ---அதனை
பார்த்து       ரசிக்குது     தினமே

நீரில்       ஆடியே      திளைத்தேன்   ---அவனை
நினைத்து     உடலும்    களைத்தேன்
நேரினில்      சொல்லிடத்    துடித்தேன்    ---தினம்
நெஞ்சினில்     வைத்து    சுமந்தேன்

பருவக்       காலப்      பாட்டு    ---அவன்
பக்குவமாய்     பாடுதல்      கேட்டு
உருகி    உருகியே    சுகித்தேன்   ---அதனால்
உயரே      வானத்தில்     பறந்தேன்

உள்ளதை     அள்ளியே     கொடுத்தான்   ---என்
உதட்டில்    முத்திரை     பதித்தான்
கள்ளனைப்     போல வன்    கவர்ந்தான்   ---நானும்
கன்னித்     தன்மையை     இழந்தேன்

வாழும்       காலம்      வாழ்வேன்    ---என்
வள்ளலை     நினைத்து     மகிழ்வேன்
சூழ்ந்திடும்     இன்பங்கள்    கோடியே    ---நீயும்
சுருக்கவே      வந்திடு       சேடியே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக