நிலவுப் பெண்ணும் வருமா ---நான்
நினைத்த இன்பமும் தருமா
பழகிட நினைத்தால் சுகமே ---அதனை
பார்த்து ரசிக்குது தினமே
நீரில் ஆடியே திளைத்தேன் ---அவனை
நினைத்து உடலும் களைத்தேன்
நேரினில் சொல்லிடத் துடித்தேன் ---தினம்
நெஞ்சினில் வைத்து சுமந்தேன்
பருவக் காலப் பாட்டு ---அவன்
பக்குவமாய் பாடுதல் கேட்டு
உருகி உருகியே சுகித்தேன் ---அதனால்
உயரே வானத்தில் பறந்தேன்
உள்ளதை அள்ளியே கொடுத்தான் ---என்
உதட்டில் முத்திரை பதித்தான்
கள்ளனைப் போல வன் கவர்ந்தான் ---நானும்
கன்னித் தன்மையை இழந்தேன்
வாழும் காலம் வாழ்வேன் ---என்
வள்ளலை நினைத்து மகிழ்வேன்
சூழ்ந்திடும் இன்பங்கள் கோடியே ---நீயும்
சுருக்கவே வந்திடு சேடியே
நினைத்த இன்பமும் தருமா
பழகிட நினைத்தால் சுகமே ---அதனை
பார்த்து ரசிக்குது தினமே
நீரில் ஆடியே திளைத்தேன் ---அவனை
நினைத்து உடலும் களைத்தேன்
நேரினில் சொல்லிடத் துடித்தேன் ---தினம்
நெஞ்சினில் வைத்து சுமந்தேன்
பருவக் காலப் பாட்டு ---அவன்
பக்குவமாய் பாடுதல் கேட்டு
உருகி உருகியே சுகித்தேன் ---அதனால்
உயரே வானத்தில் பறந்தேன்
உள்ளதை அள்ளியே கொடுத்தான் ---என்
உதட்டில் முத்திரை பதித்தான்
கள்ளனைப் போல வன் கவர்ந்தான் ---நானும்
கன்னித் தன்மையை இழந்தேன்
வாழும் காலம் வாழ்வேன் ---என்
வள்ளலை நினைத்து மகிழ்வேன்
சூழ்ந்திடும் இன்பங்கள் கோடியே ---நீயும்
சுருக்கவே வந்திடு சேடியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக